நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)
- சந்தனக்கூடு
- கொடிமரம்
- சமாதி வழிபாடு
- அவ்லியாக்களுக்கு நேர்ச்சை
- கப்ரை உயர்த்திக் கட்டுதல்
- தஸ்பீஹ் மணி உருட்டுதல்
- மவ்லூது பாடல்கள்
- கவ்வாலி இசைக்கச்சேரிகள்
- உரூஸ் உண்டியல்
- யானை குதிரை ஊர்வலங்கள்
- பிறந்த நாள் விழா எடுப்பது
- இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்
- வட்டி வாங்குதல்
- வரதட்சணை பிடுங்குதல்
- ஜோதிட நம்பிக்கை
- கருமணி தாலி கட்டுதல்
- வாழைமரம் நடுதல்
- ஆண்கள் தங்கம் அணிவது
- மஞ்சள் நீராட்டுவிழா
- சுன்னத் கத்னா திருவிழா
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)
மார்க்கத்தில் நூதனச் செயல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நமது இந்த மார்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக ஒருவர் உண்டாக்கினால் அது ஏற்றுக் கொள்ளபட மாட்டாது.(புகாரி, முஸ்லிம்)
இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் எனக்குபின் வாழ்கின்றாரோ அவர் அதிகமான கருத்து வேருபாடுகளை காண்பார். அப்போது நீங்கள் எனது சுன்னத்தையும் எனக்குப் பின் நேர் வழி பெற்றவர்களான எனது கலீபாக்களின் சுன்னத்தையும் பற்றி பிடித்து கொள்ளுங்கள். (அதனால் ஏற்படும் சோதனைகளின் போது) கடவாய் பற்களால் கடித்து(ப்பொருத்து)க்கொள்ளுங்
அல்லாஹ் கூறுகின்றான்:
நம் தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள்(மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.(59:7)
இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்:
எவர் (நம் தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அத்தகையவர்கள்(உலகில்) தங்களுக்கு யாதொரு துன்பம் பிடித்து விடுவதையோ அல்லது துன்புருத்தும் வேதனை பிடித்து விடுவதையோ பயந்து கொண்டிருக்கவும்(24:63)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமது மார்கத்தில் இல்லாத காரியங்களை யாறேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும். (முஸ்லிம்)
மேலும் கூறினார்கள்:
மார்கத்தில் புதிதானவற்றை செய்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் மார்க்கத்தில் மிகக் கெட்டது அதில் புதிதான வற்றை ஏற்படுத்துவதாகும்.(திர்மிதி)
அல்லாஹ் கூறுகின்றான் :
அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணைவைப்பாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றார்களா? (42:21)
எனவே மார்க்க விஷயங்களில் புதிதாக ஒன்றை ஏற்படுத்துவதை இஸ்லாம் வெருத்து வழிகேடெனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பித்அத்காரன் அவனது பித்அத்தை விடும் வரை நிச்சயமாக அல்லாஹ் அவனது தவ்பாவை ஏற்கமாட்டான்.(தப்ரானி)மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள். (ஹதீஸின் சுருக்கம்: புகாரி)
எல்லா பித்அத்துகளும் வழிகேடுதான். அவற்றை செய்பவன் அதை நன்மையென கருதினாலும் சரியே, பித்அத் என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாமலிருந்து பின்னர் உண்டாக்கப்பட்டவையாகும்.
object width="445" height="364">
0 comments:
Post a Comment