நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Tuesday, October 26, 2010

அப்துல் காதர் ஜீலானி Vs ஷைகு ஹம்மாத்




பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அப்துல் காதர் ஜீலானி Vs ஷைகு ஹம்மாத் (சபாஷ் சரியான போட்டி)

முன்னுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்கக்கூடிய முஸ்லிம்களுக்கு மத்தியில் உயிருடன் உள்ள மனிதர்களான ஷைகுமார்களையும்  வணங்கலாம் இறந்த மனிதர்களது சமாதியையும் வணங்கலாம் என்று கூறி இறைவனுக்கு இணையாக வைத்து தர்காஹ் வழிபாடுகள் இன்று பட்டிதொட்டி எங்கும் பின்பற்றப்படுகின்றன. இந்த தர்காஹ் வழிபாடுகள் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளை மீறிய செயல் மட்டுமல்லாது நிரந்தர நரகத்திற்கும் உரிய செயலாகும் இதை நாம் கூறவில்லை அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: -“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72)
அல்லாஹ்விடம் பாதுகாவல் தோடாமல் தர்காஹ்வையும் அதில் உள்ள மண்ணோடு மக்கிப் போன மய்யித்துகளிடமும் பாதுகாப்பு தேடும் கப்ருவணங்கிகள் மேற்கண்ட அருள்மறை வசனத்தை ஏற்க மறுக்கின்றனர் மேலும் இணைவைப்பு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள் இவர்களைப் பற்றி பின்வருமாறு அல்லாஹ் அருள்மைறையில் கூறுகிறான்

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்அன் 16:105)

மேலே நீங்கள் படித்த இந்த வசனம் 100க்கு 100 உண்மையாகி விட்டது ஏனெனில் இதை கூறுபவன் இறைவன்! எனவே இந்த வசனத்தின் மூலம் சுன்னத்தை பின்பற்றாத தர்காஹ்வாதிகளின் தரம் அவர்கள் அவிழ்த்துவிடும் பொய்கள் நிறைந்த புழுகு மூட்டைகளை அலசுவோம்!

தர்காஹ்வாதிகள் தலைவர் பெயரில் அவிழ்த்துவிடும் பொய்கள்!
ஆத்மீக கடல், ஞானதீபம், தவசீலர், மெய்நிலை கண்ட ஞானி, சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி, சுல்தானுல் அவ்லியா, முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி
இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று அல்லாஹ்வை நம்புவதாகும். ஏனெனில் அவன்தான் இந்த அண்டங்கள் மற்றும் அகிலங்கள் அனைத்தையும் ஒழுங்காக படைத்து, பரிபாலித்து வருகிறான். இப்படிப்பட்ட இறைவனை எப்படி புகழ்ந்தாலும்  பொறுத்தமாக அமையும் மேலும் இறைவனை புகழ்வது நம்மீது கடமையாகிறது!
ஆனால் இந்த அழகான கடமையை ஒன்றுமே படைக்க திராணியற்ற மனிதனுக்கு கொடுப்பது முட்டாள்தனமில்லையா? இந்த முட்டாள்தனத்தைத்தான் இந்த கப்ரு வணங்கிகள் அவ்லியாக்களின் பெயரால் அரங்கேற்றுகிறார்கள் அதுவும் அப்துல் காதர் ஜீலானி என்ற மனிதரை பற்றி புகழ்ந்து பேசுவதாக இருந்தால் அல்லாஹ்வை விட அதிகமாக புகழ்துவிடுவார்கள்!  வாருங்கள் ஜீலானிக்கு இந்த கர்ருவணங்கிகள் சூட்டியுள்ள புகழ்மாலைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் சற்று விரிவாக அலசுவோம்!

அப்துல் காதர் ஜீலானி ஆத்மீக கடலா?
ஆத்மீக கடல் என்பதன் பொருள் என்னவென்றால் கடல் எவ்வாறு பறந்து விரிந்து காணப்படுகிறதோ அதுபோன்ற அறிவு படைத்தவர் என்று பொருள்படுகிறது. அதாவது ஆன்மீகம், ஆத்மீகம் ஆகியவற்றை கரைத்து குடித்து முத்திப்போனவர் என்று அர்த்தமாகிறது. இஸ்லாத்தில் பழுத்தபழம், முத்திப்போன குருமார்கள் என்று யாரையாவது குறிப்பிட இயலுமா? இதைப்பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் இதோ

(நபியே!) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் “(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான்; அதற்கு அவர்கள்: “அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றை யெல்லாம் அறிந்தவன்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 5:109)

அல்லாஹ் அங்கீகரித்து அனுப்பிய தனது தூதர்களுக்கே மறைவான ஞானம் இல்லாத போது சாதாரண மனிதரான ஜீலானிக்கு ஆத்மீக ஞானம் வந்துவிடுமா? எனவே ஆத்மீக கடல், ஆத்மீக ஞானி என்ற புகழ் பொய் என்பது நிரூபணமாகிவிட்டது!

அப்துல் காதர் ஜீலானி ஞானதீபமா?
ஞானம் என்பது அறிவு, தீபம் என்பது வெளிச்சம் எனவே ஞானதீபம் என்பது அறிவுக்கு வெளிச்சம் தரும் ஒளி என்ற பொருள்படுகிறது அதாவது அல்லாஹ் ஞானம் மிக்கவன் என்று குர்ஆனில் கூறுகிறான் இவர்களோ தங்கள் தலைவரை அந்த ஞானத்திற்கான தீபம் என்று புகழ்கிறார்கள்! இவர்கள் மறைவாக என்ன கூறவருகிறார்கள் என்றால்  இந்த ஜீலானி என்ற தீபம் அனைந்துவிட்டால் அல்லாஹ்வுக்கு ஞானம் இல்லை என்ற தத்துவத்தைத்தான்! (இத்தகுல்லாஹ்)! அல்லாஹ்வின் வல்லமையை விட அப்துல் காதர் ஜீலானியை புகழ்ந்தவிட்டதால் ஞானதீபம் என்ற புகழ் முழுக்க முழுக்க பொய் என்று நிரூபணமாகிறது!

அப்துல் காதர் ஜீலானி மெய்நிலை கண்ட ஞானியா?
கப்ருவணங்கிகள் அப்துல் காதர் ஜீலானியை மெய்நிலை கண்ட ஞானி என்று புகழ்கிறார்கள்! இவர் மெய்நிலையை கண்டுவிட்டார் என்று அல்லாஹ் கூறி வஹியை இறக்கினானா? நபிகளார் (ஸல்) அவர்களுக்கு மெய்நிலை கண்ட ஞானம் இருந்ததா? இதோ அல்லாஹ் என்ன கூறுகிறான்?

(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன’ என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக ‘நான் ஒரு மலக்காக இருக்கின்றேன்’ என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்:  ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?’ (அல்-குர்ஆன் 6:50)

இறுதி நபிக்கு இல்லாத இந்த மறைவான ஞானத்தை இந்த அப்துல் காதர் ஜீலானி பெற்றுள்ளார் என்று கப்ருவணங்கிகள் கூறுவது நபியை இழிவுபடுத்தும்விதமாக இல்லையா? எனவே அப்துல் காதர் ஜீலானியை மெய்நிலை கண்ட ஞானி என்று கூறியது பொய் என்பது நிரூபணமாகிவிட்டது!

மனிதனாக பிறந்து மனிதனாக மடிந்த ஜீலானியை ஆத்மிக கடல் என்றும், ஞானதீபம் என்றும் மெய்நிலை கண்ட ஞானி என்றும்  வர்ணிக்கிறார்களே இப்படி சாதாரண மனிதனை அல்ல மாறாக அல்லாஹ்வின் தூதர்களுக்கும் அந்த தூதர்களின் முத்திரையான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கூட வர்ணிப்பது கூடுமா? நபிகளார் (ஸல்) என்ன கூறினார்கள்? இதோ படியுங்கள்

ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவேன், மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன். (அஹ்மத்,பைஹகீ)


எனவே சாதாரண மனிதர் அப்துல் காதர் ஜீலானிய தவசீலர் என்றும் மெய்நிலை கண்ட ஞானி என்றும் சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி என்றும் சுல்தானுல் அவ்லியா என்றும் புகழ்ந்து துதி பாடிய தர்காஹ்வாதிகளை ஷைத்தான் வழிகெடுத்துவிட்டான் இதில் உள்ள மிக முக்கியமான வேடிக்கை என்னவென்றால் தங்கள் குறைகளை கேட்கிறார் என்று எந்த ஜீலானியை இவர்கள் நம்புகிறார்களோ அந்த ஜீலானியே இந்த கப்ருவணங்கிகளை ஷைத்தானிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை! (இறந்த பிறகு எவருக்காவது கேட்கும் ஆற்றல் இருந்தால்தானே காப்பாற்ற இயலும்)

கப்ருவணங்கிகள் கூறுவது 100% பொய்தான் ஆதாரங்கள்

அப்துல் காதர் ஜீலானி அவர்களுக்கு மெய்நிலை காணும் நிலை மற்றும் மறைவான ஞானம் உள்ளது என்று சப்பைகட்டி கூறும் தர்காஹ்வாதிகள் அதே வாய்களால் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் சில ஆசிரியர்களின் உதவியால்தான் கல்வி பயின்றார் எனறு கூறுகிறார்கள் இதோ ஜீலானியின் ஆசிரியர்கள்

  • அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி,
  • அபுல் உபா அல பின் ஹகீம்,
  • அபூ காலிப் அஹ்மது,
  • அபுல் காஸிம் அலி,
  • அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி

அட கப்ருவணங்கிகளே உங்கள் நாதர் ஜீலானி அவர்கள் தன்னுடைய அடிப்படை அறிவை கற்றுக்கொள்ள மனிதர்களின் உதவியை நாடியுள்ளார் என்று உங்கள் வாய்களாலேயே கூறுகிறீர்கள் அப்படியிருக்க அவருக்கு மெய்ஞானம் எங்கிருந்தய்யா வந்தது! இது உங்களின் பொய் நெ. 1

அப்துல் காதர் ஜீலானி அவர்கள் ஆத்மீக கடலாக இருக்கும் போது அவர் தனது ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தியிருக்க வேண்டும் மாறாக ஆசிரியர்களிடம் இவர் பாடம் பயின்றது ஏன்? உங்க பாஷையில் கூறுவதாக இருந்தால் ஆத்மீக கடல் ஏனப்பா குட்டையிடம் பாடம் படித்தது? சிந்திக்க மாட்டீர்களா? இது உங்களின் பொய் நெ. 2

சாதாரண ஷைகு அப்துல் காதர் ஜீலானிக்கு வழிகாட்டியா?
அப்துல் காதர் ஜீலானி எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்று நினைத்தாராம், இதைப்பற்றி கப்ருவணங்கிகள் கீழ்கண்டவாறு கூறுகிறார்கள்

அப்துல் காதர் ஜீலானி கல்வி கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள்.எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். (மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி )

மேலே உள்ள கருத்தை படித்தவுடன் தர்காஹ்வாதிகள் இட்டுக்கட்டிய பொய்களில் அவர்களே தடுமாறிய விதம் பற்றி பாருங்கள்!

  • அப்துல்காதர் ஜீலானியை ஆத்மீக கடல் என்று பொய் கூறினர் அப்படியெனில் அந்த ஆத்மீக கடலுக்கு வழிகாட்டி தேவையா? இது பொய் என்பது புரியவில்லையா?
  • அப்துல் காதர் ஜீலானி அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமானவர் என்று பொய் கூறினார்கள் இப்போது அந்த ஜீலானியே அல்லாஹ்வை நெருங்க ஒரு ஷைகுவின் வழிகாட்டுதல் தேவை என்று எண்ணிணாராம்? இது பொய்யாக தெரியவில்லையா?
  • அப்துல் காதர் ஜீலானி தனக்கு ஞானகுரு தேவை என்று துவா செய்து அந்த துவாவை இறைவன் அங்கீகரித்து ஹம்மாத் என்ற ஷைகுவை அவருக்கு தேர்ந்தெடுத்து கொடுத்தான் என்று கூறுகிறார்கள் இதுபற்றி அல்லாஹ் விடமிருந்து ஏதாவது வஹி வந்துள்ளதா? இது பொய் இல்லையா?


அப்துல் காதர் ஜீலானி Vs ஷைகு ஹம்மாத்!
அப்துல் காதர் ஜீலானி தனது ஷைகுவிடம் பாடம் படிக்கும் போது அந்த ஷைகு முன்வைத்த பல கடுமையான சோதனைகளை கடந்து சகிப்புதன்மை மற்றும் திட நம்பிக்கையின் பயனாக மூன்று ஆண்டுகளில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றாராம் பின்னர் அவரது ஷைகு ஹம்மாத் அவர்கள் ஜீலானியை பார்த்து கூறிய வார்த்தைகள் என்று இந்த கப்ரு வணங்கிகள் கூறுவது இதுதான்!

இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள் (கூறியது ஷைகு ஹம்மாத்)(மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி )

அட கப்ருவணங்கிகளே! உங்கள் கட்டுரையின் அடிப்படையில் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் அஜமி ஆகிவிட்டாரே! இதோ சற்று ஷைகு ஹம்மாத் அவர்கள் கூற்றிலிருந்து நாம் உணர்ந்த தெளிவை சற்று விளக்கமாக படியுங்கள்!

  • இந்த அஜமி அப்துல் காதிர்

அப்துல் காதர் ஜீலானியை அவரது ஷைகுவான ஹம்மாத் அவர்கள் அஜமி என்று கூறிவிட்டார் இதன் மூலம் அப்துல்காதர் ஜீலானிக்கு பிறப்பின் அடிப்படையில் எந்த ஞானமும் இல்லை என்பது தர்காஹ்வாதிகளின் மூலமாகவே தெளிவாகிவிட்டது. எனவே ஜீலானியை விட அவரது ஷைகு ஹம்மாத் அவர்கள் அறிவு படைத்தவர் என்பதை இந்த பொய்யர்கள் தங்கள் வாய்களாலேளே கூறிய பின்னரும் அதை உணர மறுக்கிறார்கள்.

  • வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார்

ஜீலானி வருங்காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார் என்று அவரது ஷைகு ஹம்மாத் கூறியதன் மூலம் ஜீலானியை விட அவரது குரு ஹம்மாத் அவர்கள் கப்ருவணங்கிகளின் கருத்துப்படி ஆத்மீக ஞானமிக்கவராக ஆகிவிட்டார்! அப்படியானால் ஜீலானி ஞானம் குறைந்தவர்தான் என்பது பொய்யர்களாலேயே உறுதிபடுத்தப்பட்டுவிட்டது.

  • தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார்

தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார் என்று ஷைகு ஹம்மாத் முன்னறிவிப்பு செய்தார் என்பதை படிக்கும் போது ஷைகு ஹம்மாத் அவர்கள் அப்துல் காதர் ஜீலானியைவிட ஆற்றல் மிக்கவராகிறார் அப்படியானல் அப்துல்காதர் ஜீலானிக்கு ஆற்றல் குறைவுதான்! இந்த கப்ருவணங்கிகளின் கருத்துப்படி ஷைகு ஹம்மாத் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டியவராகிறார் அதாவது அல்லாஹ் உத்தரவிடுவான் என்று இவர் பொய்யை இட்டுக்கட்டியிருக்கிறார் என்பதும் ஊர்ஜிதமாகிறது!

  • இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்

அப்துல் காதர் ஜீலானியை அவர் காலத்து எல்லா வலிமார்களும் தலைப் பணிவார்கள் என்று ஷைகு ஹம்மாத் கூறியதாக கப்ருவணங்கிகள் கூறுவதன் மூலம் ஜீலானியின் ஆத்மகுரு ஷைகு ஹம்மாத் கீழ்கண்ட ஹதீஸை படிக்கவில்லை என்ற உண்மையும் வெளியாகிறது!

ஒருவர் மற்றவரின் காலில் விழுவதற்கு நான் அனுமதிப்பதாக இருந்தால் கணவனின் காலில் மனைவி விழுவதற்கு அனுமதித்திருப்பேன் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்:புகாரி, முஸ்லிம்

முடிவுரை
அப்துல் காதர் ஜீலானிதான் உலகிலேயே ஆற்றல் மிக்கவர் என்று இதுநாள் வரை இந்த கப்ருவணங்கிகள் கூறிவந்தனர் ஆனால் அது பொய் என்பதை அவர்களின் வாய்களாலேயே உணரப்பட்டு விட்டது அதாவது அஜமியாக இருந்த அப்துல் காதர் ஜீலானியை அறிவு கொடுத்தது ஒரு ஷைகு ஹம்மாத் எனும் போது அந்த ஹம்மாத் என்ற ஆசிரியர்தான் ஜீலானியைவிட அறிவாற்றல் மிக்கவராக இருந்திருக்க வேண்டும்! ஆனால் கீழ்கண்ட வார்த்தை அதையும் மறுக்கிறது!
  • தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார் (ஷைகு ஹம்மாத்) (மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி )
மேற்கண்ட வரிகளின் மூலம் இந்த ஷைகு ஹம்மாத் என்ற நபரையும் இந்த கப்ருவணங்கிகள் பொய்யராக்கி விட்டார்கள். அப்துல் காதர் ஜீலானி அவர்கள் சொல்லாததையெல்லாம் சொல்லியதாக கூறும் இந்த கப்ருவணங்கி தர்காஹ்வாதிகள் அவருடைய ஷைகுவையும் பொய்யராக்கி விட்டார்கள். எனவே திருமறையின் கீழ்கண்ட வசனம் கப்ருவணங்கிகளின் விஷயத்தில் 100 சதவீதம் உண்மையை கூறுகிறது.

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்அன் 16:105)

நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான். (அல்குர்ஆன் 6:39)

குறிப்பு
அப்துல் காதர் ஜீலானி என்ற நபர் மீது நமக்கு எந்த காழ்புணர்ச்சியும் கிடையாது மாறாக அந்த மனிதருடைய பெயரால் நிறைய கட்டுக்கதைகள் புணையப்பட்டதாகவும் அந்த கதைகளுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பல்வேறு மார்க்க அறிஞர்கள் கூறுவதை சற்று நினைத்து பாருங்கள்!

R.P.M. கனி அவர்கள் எழுதிய மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை” எனும் நூலிலிருந்து மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணியினர் தொகுத்து தங்களது பிளாக்தளத்தில் பிரசுரித்த கட்டுரையை ஆதாரமாக கொண்டு இங்கு அப்துல் காதர் ஜீலானி அவர்கள் மீது புணையப்பட்ட கட்டுக்கதைகளை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது!

மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவர் அணியினரே உங்கள் சுன்னத் ஜமாஅத் அவிழ்த்து விடும் பொய்களை பார்த்தாவது சிந்தித்து, செயல்படுங்கள் இஸ்லாம் கூறும் தவ்ஹீதின் பக்கம் விரைந்து வாருங்கள்! 

மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணியினருக்கு இஸ்லாத்தின் அழைப்பு இங்கிருந்தே விடப்படுகிறது!
 Islamic Paradise's Blog

Sunday, October 24, 2010

'அவரை நிர்வாணமாக்கி தீவைத்துக் கொளுத்துவதை நான் கண்டேன்' - ஸாகியா ஜாஃப்ரியின் கண்ணீர் சாட்சியம்


புதுடெல்லி,அக்.24:தனது கணவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டுபோய் நிர்வாணமாக்கிய பிறகு அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்வதை தான் நேரடியாக கண்டதாக, குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா கண்ணீர் சாட்சி அளித்துள்ளார்.
     


குல்பர்கா சொசைட்டி கூட்டு இனப் படுகொலையில் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கும் பொழுதுதான் கண்ணீர் மல்க இதனைத் தெரிவித்தார் ஸாகியா. 2002 பிப்ரவரி 22 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது.

ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்திருந்தது.

"கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து பந்த் அறிவிக்கப்பட்டதால் வன்முறைக்களமாக மாறியது சூழல். அதிகாலை முதல் அக்கம்பக்கத்து முஸ்லிம்கள் எங்கள் வீட்டை நோக்கி வரத் துவங்கினர்.

அவர்களை ஹிந்துத்துவாவாதிகளின் தாக்குதலிருந்து பாதுகாக்க போலீஸை அழைக்க அவர்கள் ஜாஃப்ரியிடம் கோரினர்.

காலை 7.30 க்கு அவர்களை வீட்டிற்குள் அழைத்த ஜாஃப்ரி, ஒன்றாக இருக்கக் கூறியதுடன் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் எனக் கூறினார்.



http://upload.wikimedia.org/wikipedia/en/1/19/EhsanJafri.gifhttp://beenasarwar.files.wordpress.com/2009/09/52riot_ahmadabad_ahsan_jafri.jpg?w=300&h=200

இந்த நேரத்திலிருந்தே ஜாஃப்ரி தொலைபேசியில் பலரையும் அழைக்க ஆரம்பித்தார். 11.30 மணிக்கு போலீஸ் கமிஷனர் பி.ஸி.பாண்டே வீட்டிற்கு வந்து ஜாஃப்ரியை வெளியே அழைத்தார். இதர முஸ்லிம்களை காப்பாற்றுவதற்கு பதிலாக தனது காரில் ஜாஃப்ரியையும், குடும்பத்தினரையும் மட்டும் அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக வாக்குறுதியளித்தார் பாண்டே.

ஆனால், மிரண்டுபோன இதர முஸ்லிம்களை விட்டுச்செல்ல ஜாஃப்ரி மறுத்துவிட்டார். பாண்டே திரும்பிச் சென்றபிறகு, வன்முறையாளர்கள் சிறிய கேட்டின் வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் வீட்டை நெருங்கிய பொழுது வீட்டின் மாடிக்கு செல்லுமாறு என்னிடம் கூறினார் ஜாஃப்ரி.

கோஷங்களை எழுப்பியவாறு வந்த ஆயுதங்கள் ஏந்திய கும்பல் ஜாஃப்ரியிடம் வெளியே வருமாறு கூறினர். தான் வெளியே வருவதாகவும், ஆனால் தனது வீட்டில் புகலிடம் தேடி வந்தவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் எனவும் ஜாஃப்ரி வன்முறையாளர்களிடம் கூறினார்.

வெளியேவந்த ஜாஃப்ரியை அவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஆடைகளை கீறி எறிந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக்கி அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி எறிந்து தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்தனர்." -இதனை சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி பி.யு.ஜோஷியின் முன்னால் ஸாகியா தெரிவித்தார்.

"ஆனால் போலீஸ் வந்தது மாலை 5.30 மணிக்காகும். வீட்டின் உள்ளே ஒழிந்திருந்த எங்களை வெளியேவருமாறு கூறினர். 18-19 உடல்கள் வீட்டின் வராந்தாவிலும் இதர இடங்களிலும் கிடந்தன. அதில் ஒன்று, தங்களுடைய அயல் வீட்டாரான கஸம்பாயின் கர்ப்பிணியான மருமகளாவார். அவருடைய வயிறு கிழிக்கப்பட்டு அதிலிருந்து சிசு வெளியே வந்திருந்தது.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அக்கிரமக்காரர்கள்தான் இந்தக் கொலைகளை நடத்தினர்." இவ்வாறு ஸாக்கியா கூறினார்.

அதேவேளையில், குறுக்கு விசாரணையின்போது ஸாகியாவுக்கு மனித உரிமை ஆர்வலரான டீஸ்டா செடல்வாட், முன்னாள் போலீஸ் அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார், வழக்கறிஞர் ஷொஹைல் திர்மிஜி, ரைஸ்கான் பத்தான் ஆகியோருடன் தொடர்பிருப்பதாக கூற முயன்றார் எதிர்தரப்பு வழக்கறிஞர் மிதேஷ் அமீன். ஆனால், ஸாகியா அதனை மறுத்தார்.

டீஸ்டா செடல்வாட்டிடமிருந்து ஒரு உதவியையும் தான் பெறவில்லை எனவும், பல காலமாக அவரை தான் காணக்கூட செய்யவில்லை எனவும் ஸாகியா தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் ஸாகியா கண்ட ஏதேனும் உடல் சேதமாக்கப்பட்ட இறந்துப்போன ஒருவரின் பெயரைக் கூற இயலுமா என எதிர் தரப்பு வழக்கறிஞர் மிதேஷ் அமீன் கேள்வி கேட்டபொழுது, தனது கணவரை கொலைச் செய்த பாதகர்களிடம்தான் இதனைக் கேட்கவேண்டும் என ஸாகியா பதிலளித்தார்.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

 paalaivanathoothu



Friday, October 22, 2010

சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகளும் நன்மைகளின் வாயில்களும்.

                                                      https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsK8-XbS0C3yjdd9RPAYiG7kVNF5Mrluh7wSk0DtqErRnYp1AvraGrlhmjKZYf-by1ob4M9GnEqbkR27czhxnZ64lOjYwed_ZaEIG4kAb90g4bRabojrhtOY3o34jDf0P5hT6YJSrIYJY/s1600/Bismillah_2.JPG

சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்!

கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்!
யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்)

சுவனத்தில் மாளிகை வேண்டுமா? பள்ளியைக் கட்டுங்கள்!
“எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவனத்தில் அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!
‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். (புகாரி)

நோய் விசாரிக்கச் சென்றால் சுவனத்தில் ஒரு தோட்டம்!
ஒரு முஸ்லிம் நோயுற்ற முஸ்லிமை விசாரிக்கக் காலையில் சென்றால் அவருக்காக ஏழாயிரம் வானவர்கள் மாலை வரை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே மாலையில் நோய்விசாரிக்கச் சென்றால் மறுநாள் காலை வரை ஏழாயிரம் வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அவருக்கு சுவனத்தில் ஒரு தோட்டம் இருக்கும். (திர்மிதீ)

நரகம் ஹராமாக்கப்பட வேண்டுமா?
‘எவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விடும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

மக்களை அதிகமாக சுவனத்தில் சேர்ப்பவைகள்!
மக்களை சுவனத்தில் சேர்ப்பதில் அதிகக் காரணமாக விளங்குவது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது ‘இறையச்சமும் நற்குணமும் தான்’ எனக் கூறினார்கள்’ (திர்மிதீ)

உண்மை பேசுவது சுவனத்திற்கு வழிகோலும்!
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.(புகாரி)

கோபத்தை அடக்கினால் சுவனத்து கண்ணழகிகளில் விரும்பியவரை மணக்கலாம்!
யார் கோபத்தை வெளிப்படுத்தும் சக்தியுள்ள நிலையில் அதை அடக்குகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் மத்தியில் அழைத்து ஹூருல் ஈன்களில் – சுவர்க்கத்து கண்ணழகிகளில் தாம் விரும்பியவரை அனுபவித்துக்கொள்ளக்கூடிய உரிமையை வழங்குவான் (திர்மிதீ)

பெற்றோரைப் பேணுவதால் சுவனம் கிடைக்கும்!
‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து (அவர்களுக்காக பணிவிடை செய்யாமல்  அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

இரண்டைப் பேணுவதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சுவர்க்கத்திற்கு பொறுப்பேற்பார்கள்!
“எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில்!
“நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபிகள் (ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்” (புகாரி)

நான்கு விசயங்கள் ஒரே நாளில் ஒருவர் செய்தால் அவர் சுவனம் சென்று விட்டார்!
எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.

விரும்பிய வாயிலின் வழியாக சுவனம் செல்ல!
எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலியில்லை!
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)

சுன்னத்தான தொழுகைகளைப் பேணினால் சுவனத்தில் மாளிகை!
“ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்”.


நன்மைகளின் வாயில்கள்!

வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா?
“ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்றால் அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார்” (முஸ்லிம்)

காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா?
ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள். (புகாரி ஹதீஸ் சுருக்கம்)

நோன்பு திறக்க ஏற்பாடு செய்வதன் சிறப்புகள்:
யார் நோன்பாளி நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு செய்கின்றாரோ அவருக்கு நோன்பாளியின் கூலி கிடைக்கும். எனினும் நோன்பாளியின் கூலியில் எந்தக்குறைவும் ஏற்படாது. (திர்மிதீ)

பன்மடங்கு நன்மைகளை பெற குர்ஆனை ஓதுங்கள்!
“யார் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒரு நன்மை. ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்கு. ‘அலிப்’ ‘லாம்’ ‘மீம்’ என்பது ஒரு எழுத்து இல்லை. ‘அலிஃப்’ ஒரு எழுத்து, ‘லாம்’ ஒரு எழுத்து, ‘மீம்’ ஒரு எழுத்து” (புகாரி, முஸ்லிம்)

இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை வேண்டுமா?
“எவர் ‘இஷாத்’ தொழுகையை ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் பாதி இரவை நின்று வணங்கியவர் போலாவார். எவர் சுப்ஹ் தொழுகையையும் ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் முழு இரவும் தொழுததைப் போன்றதாகும்.” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு ஹஜ் செய்த நன்மையைப் பெற!
“ரமளான் மாதத்தில் உம்ரா செய்வது ஒரு ஹஜ் அல்லது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்குச் சமமானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மை வேண்டுமா?

 لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
‘லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்

(பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)

‘என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர! (புகாரி)

பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்பட வேண்டுமா?

                   ”சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி”      سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
(பொருள் : அல்லாஹ் துய்மையானவன், அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்).

ஒரு நாளைக்கு நூறு தடவைக் கூறினால் அவருடைய பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நுல்கள்: புஹாரி, முஸ்லிம்)

காலையிலும் மாலையிலும் நூறு தடவை கூறுபவரைவிட மறுமை நாளில் சிறந்த செயலுடன் யாரும் வரமாட்டார். ஆனால் இவரைப் போன்றோ அல்லது இவரைவிட அதிகமாகவோ திக்ர் செய்தவரைத் தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)


இறைவனின் தராசில் நன்மையின் எடை கனமாக வேண்டுமா?

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ
 ”சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி”     سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
(பொருள் : அல்லாஹ் துய்மையானவன், அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்).

”சுப்ஹானல்லாஹில் அளீம்”   سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ
(பொருள் : கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துய்மையானவன் எனத் துதிக்கிறேன்)

இந்த இரண்டு வார்த்தைகளும் சொல்வதற்கு மிக எளிதானவை. இறைவனின் தராசில் மிக கனமானவை. இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)


அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிய வேண்டுமா?
“என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்பவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை வேண்டுமா?
(தொழுகை அழைப்பான) பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும்போது,
அல்லாஹூம்ம ரப்ப ஹாதிஹித் தஃவத்தித் தாம்மாத்தி வஸ்ஸலாத்தில் காயிமத்தி ஆத்தி முஹம்மதனில் வஸீலத்த வல்ஃபளீலத்த வப்அஸ்ஹூ மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹூ

பொருள்: பரிபூரணமான இந்த அழைப்புக்கும் நிலைபெறப் போகும் தொழுகைக்கும் சொந்தக்காரணமாகிய அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ‘வஸீலா’ என்ற உயர் பதவியையும் சிறப்பையும் வழங்கி, அன்னாரை நீ வாக்களித்துள்ள புகழுக்குரிய இடத்தில் எழுப்புவாயாக!
என்று யார் ஓதுகின்றாரோ அவருக்கு எனது பரிந்துரையுண்டு’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

லுஹா தொழுகையின் சிறப்புகள்:
உங்களில் ஒருவர் தனது எலும்பு மூட்டுகளுக்காக தர்மம் வழங்க வேண்டும். (நீங்கள் கூறுகின்ற) ஒவ்வொரு சுபுஹானல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு லாயிலாஹ இல்லல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் தர்மமாகும்.
நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். முற்பகல் நேரத்தில் இரண்டு ரக்ஆத்துகள் தொழுவது இவை அனைத்திற்கும் போதுமான தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

மலைகளைப் போல நன்மைகள் வேண்டுமா?
“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு ‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

சுவனத்தின் வர்ணனை



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsK8-XbS0C3yjdd9RPAYiG7kVNF5Mrluh7wSk0DtqErRnYp1AvraGrlhmjKZYf-by1ob4M9GnEqbkR27czhxnZ64lOjYwed_ZaEIG4kAb90g4bRabojrhtOY3o34jDf0P5hT6YJSrIYJY/s1600/Bismillah_2.JPG
நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 3:133

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)

''நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள். உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.'' (54:54,55.)


http://ipcblogger.net/musawir/files/2010/07/paradise.jpg
 

இவ்வுலகில் வாழ்கின்ற  நல்லடியார்கள் சுவனபதியை அடைவதற்காக பெரும் முயற்சி எடுக்கின்றனர். மார்க்க வழிபாடுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வாழ்ந்து வருபவர்களின் உள்ளத்திலும் இந்த சுவனபதியை அடைய வேண்டும் என்ற ஆசையோடு வாழ்வதை நாம் காண முடிகிறது. உயர்வான இச்சுவனபதி வாழ்க்கையை அது ஒரு பிளாட்பார சரக்கு போன்று சாதாரணமாக எண்ணி வாழ்பவர்களை நாம் அதிகமாக காண முடிகிறது. இந்த உயர்வான வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் அதற்காக நம்மை தயார் செய்ய வேண்டும்.

சுவனத்து இன்பங்கள் பற்றி எடுத்துரைக்கும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம் வந்துள்ளன!

அல்லாஹ் கூறுகிறான்: பயபத்தியாளர்களுக்காக வாக்களிக் கப்பட்டுள்ள சுவனத்தின் தன்மை என்னவெனில்,  அதன் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அதன் கனிகளும் நிரந்தரமானவை. அதன் நிழலும் நிலையானது! (13 : 35)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: 'பயபக்தியாளர்களுக்காக வாக்களிக்கப்பட்டுள்ள சுவனத்தின் உன்னதத்தன்மை என்ன வெனில், அதில் தூய்மையான நீராறுகளும் சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும் குடிப்பவாகளுக்குச் சுவையூட்டும் மது ஆறுகளும் சுத்தமான தேனாறுகளும் ஓடிக்கொண்டிருக்கும். மேலும் அங்கே அவர்களுக்கு எல்லா விதமான கனிகளும் இருக்கும். அவர்களின் இறைவனிடம் இருந்து மன்னிப்பும் கிடைக்கும். (47 : 15)

வேறோரிடத்தில் கூறுகிறான்: மேலும் (நபியே, இவ்வேதத்தில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு- கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் நிச்சயம் உண்டு என்று நற்செய்தி கூறுவீராக! அங்கு ஏதேனும் ஒரு கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும்போதெல்லாம் - அக்கனிகள் பூமியின் கனிகளுக்குத் தோற்றத்தில் ஒத்திருப்பதால் - இத்தகைய கனிகள்தாம் முன்பு (உலகில்) நமக்கு உணவாக வழங்கப்பட்டதாக அவர்கள் கூறுவார்கள். இன்னும் அங்கு அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உண்டு. மேலும் அங்கு அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்' (2 : 25)

'சுவனத்தின் நிழல்கள் அவர்கள் மீது தாழ்ந்திருக்கும். மேலும் அதன் கனிகள் எப்போதும் (விருப்பப்படி பறித்துக் கொள்ளும் அளவில்) அவர்கள் அருகில் இருக்கும். வெள்ளிப் பாத்திரங்களும் கண்ணாடிக் குவளைகளும் அவர்களுக்கு முன்னிலையில் சுற்றி வருமாறு செய்யப்பட்டிருக்கும். அதன் கண்ணாடிகளும் வெள்ளி வகையைச் சேர்ந்தவையாக இருக்கும். அவற்றைச் (சுவனத்தின் ஊழியர்கள்) சரியான அளவில் நிரப்பி இருப்பார்கள். அந்தக் கிண்ணங்களில் இஞ்சிச் சுவை கலந்த பானங்கள் அவர்களுக்கு அங்குக் குடிப்பதற்கு வழங்கப்படும். அது சுவனத்திலுள்ள ஒரு நீரூற்றாகும். அதன் பெயர் ஸல்ஸபீல். மாறாத இளமையுடைய சிறுவர்கள் அவர்களுக்(கு ஊழி யம் புரிவதற்)காகச் சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் தெறித்துக் கிடக்கும் முத்துக்கள் என்று எண்ணுவீர்! அங்கு நீர் எந்தப் பக்கம் நோக்கினாலும் அருட்கொடைகள் நிரைந்திருப்பதையும் மாபெரும் பேரரசுக்கான அத்தனை சாதனங்களையும் காண்பீர்' (76:14-20)

மற்றோர் இடத்தில், (வேறு சில முகங்கள்) உன்னதமான சுவனத்தில் இருக்கும். அவை அங்கு வீணானவற்றைச் செவியுறமாட்டா. ஓடிக் கொண்டிருக்கும் நீருற்று அங்கு உண்டு. உயர்ந்த கட்டடில்கள் அங்கிருக்கும். கிண்ணங்களும் வைக்கப்பட்டிருக்கும். தலையணைகளும் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். எழிலான விரிப்புகளும் விரிக்கப்பட்டிருக்கும்(88:10-16)

இன்னோர் இடத்தில், 'எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் அல்லாஹ் நுழைவிப்பான். அங்கு அவர்களுக்குத் தங்கக்காப்புகளும் முத்துக்களும் அணிவிக்கப்படும். பட்டு அங்கு அவர்களின் ஆடையாக இருக்கும்' (22 : 23)

'அங்கு அவர்கள் உயர்ந்த கட்டில்களில் தலையணைகள் வைத்து சாய்ந்திருப்பார்கள். வெயிலின் வெப்பமோ கடும் குளிரோ அங்கு அவர்களைத் துன்புறுத்தாது' (76 : 13)

மென்மையான மற்றும் கனமான பச்சை நிறப்பட்டாடைகள் அவர்களின் மீதிருக்கும். மேலும் அவர்களுக்கு வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படும். அவர்களின் அதிபதி அவர்களுக்குத் தூய்மை மிக்க பானம் புகட்டுவான் (76 : 21)

(அந்தச் சுவனவாசிகள்) பச்சைக் கம்பளங்களிலும் விலை மதிப்பற்ற அழகிய விரிப்புகளிலும் தலையணை வைத்து சாய்ந்திருப்பார்கள். (55 : 76)

இறையச்சம் உடையவர்கள் அமைதியான இடத்தில் இருப்பார்கள். தோட்டங்களிலும் நீருற்றுகளிலும் இருப்பார்கள். தடித்த மற்றும் மெல்லிய பட்டாடைகள் அணிந்து எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இதுவே அவர்களின் வெற்றி. மேலும் நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம். அங்கு அவர்கள் மனநிம்மதியுடன் எல்லாவித சுவையான பொருட்களையும் கேட்பார்கள் (44 : 51-55)

செல்லுங்கள், சுவனத்தில்! நீங்களும் உங்கள் மனைவியரும்! அங்கு நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்! (என்று அவர்களிடம் சொல்லப்படும்) (43 : 70)

இந்த அருட்கொடைகளுக்கு மத்தியில் நானும் விழிகளைக் கொண்ட பெண்களும் இருப்பார்கள். இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும் எந்த ஜின்னும் அவர்களைத் தொட்டுக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்! உங்கள் இறைவனின் எந்தெந்த வெகுமதிகளைப் பொய்யென்பீர்கள்? அந்தப் பெண்கள் அழகு மிக்கவர்களாய் இருப்பார்கள். மாணிக்கத்தையும் முத்தையும் போன்று! (55 : 56-57)

இந்த அருட்கொடைகளுடன் நன்னடத்தையும் பேரழகும் கொண்ட மனைவிகளும் இருப்பர். உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளைப் பொய்யெனக் கூறுவீர்கள்? கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட எழில்விழி மங்கைகள்' (55 :70-72)

அவர்களுடைய செயல்களின் பயனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை யாரும் அறியமாட்டார்! (32:17)

எவர்கள் நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்கு (கூலி) மிக அழகிய நன்மையாகும். இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களின் முகங்களில் பாவப்புழுதியும் இழிவும் படியமாட்டா! அவர்கள் சுவனத்திற்குரியவர்கள். அவர்கள் அதில் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்' (10: 26)



சுவர்க்கத்தில் படித்தரங்களுண்டு
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்:  நிச்சயமாக சுவனத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. இறைவழியில் போர் புரியும் வீரர்களுக்காக அல்லாஹ் அவற்றைத் தயார் செய்து வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே உள்ள தூரம்,  வானம்-பூமியின் தூரம் போன்றதாகும். நீங்கள் இறைவனிடம் இறைஞ்சுவதாயின் ஃபிர்தௌஸை கேட்டு இறைஞ்சுங்கள்! திண்ணமாக அது சுவனத்தின் நடுவிலும் சுவனத்தின் உச்சியிலும் உள்ளது. அங்கிருந்துதான் சுவனத்தின் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதன் மேலே கருணைமிக்க இறைவனின் அர்ஷ் உள்ளது' (நூல் : புகாரி)


அபூ ஸயீதுல் குதிரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனவாசிகள் தங்களுக்கு மேலே பால்கனிகளில் இருப்போரைக் காண்பார்கள். கிழக்கு அல்லது மேற்கின் அடிவானத்தில் இலங்கக்கூடிய ஒளிரும் நட்சத்திரத்தை நீங்கள் பார்ப்பது போன்று பார்ப்பார்கள்! அது அவர்களின் படித்தரத்தின் ஏற்றதாழ்வினாலாகும்'

தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இவை நபிமார்களின் அந்தஸ்துகளாயிற்றே! அவர்களல்லாதவர் யாரும் இவற்றை அடைந்திட முடியாதே! அதற்கு நபி(ஸல்) சொன்னார்கள்: சரிதான்! எனது உயிரை தன் கைவசம் வைத்திருக்கும் இறைவன் மீது சத்தியமாக! எவர்கள் அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொண்டு ரஸூல்மார்களை உண்மைப்படுத்தினார்களோ அவர்களும் இவற்றை அடைவார்கள்' (புகாரி)



சுவர்க்க வாழ்வு
என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தத் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் செவியுறாத, எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை எல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

'ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு கூலியாக அவர்களுக்கு (தயாரித்து) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்தவொரு ஆத்மாவும் அறியாது' என்ற 32:17 வசனத்தையும் ஓதினார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி,முஸ்லிம், திர்மிதி)



நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு
சுவர்க்கத்திற்குறியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்துவிட்டால், "நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி நோயுறமாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜீவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் எப்போதும் மரணிக்கவே மாட்டீர்கள்; நீங்கள் இளமையாக இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆக மாட்டீர்கள்; என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), திர்மிதி)


சுவர்க்க வாயில்கள்
நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்பவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார் என்று கூறியதும், 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? என்று அபூபக்கர்(ரழி) கேட்டார்கள்; 'ஆம்' அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹ்லுப்னு ஸஅத்(ரழி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், இப்னு மாஜ்ஜா)

"நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன்; சுவர்க்க வாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுவர்க்கவாசிகளின் இதயங்கள்

பாவங்கள், விரோதங்கள், பொறாமைகள் போன்ற அனைத்து கெட்டவைகளும் நீங்கிய இதயங்களாக இருப்பார்கள்.

"விசுவாசங்கொண்டு, நற்காரியங்கள் செய்து சுவர்க்கத்தில் நுழைந்துவிட்ட அவர்களின் நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்" என்ற இறை வசனத்தின்படி பரிசுத்தமான நெஞ்சங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அல்குர்ஆன் 7:43, 15:47

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை
சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழு நிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள். மூக்குச்சளி சிந்த மாட்டார்கள்; எச்சில் துப்பமாட்டார்கள்; அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவர்களுடைய குணங்கள் ஒரே மனிதருக்குள்ள குணத்தைப் போன்று (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது காலை, மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி, முஸ்லிம், திர்மிதி

சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை
அச்(சுவனத்தில்) வீண் வார்த்தைகளையோ, பொய்யையோ செவியுறமாட்டார்கள்; 'ஸலாமுன்' (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்ற வார்த்தையை தவிர அதில் அவர்களுடைய முகமன் வார்த்தை 'ஸலாமுன்' என்பதாகும். அல்குர்ஆன் 78:35, 10:10

இறைநம்பிக்கையாளனுக்கு வழங்கப்படும் ஹூருல் ஈன்கள்.
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;  அப்பெண்களைக் கன்னிகளாகவும்; (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,  வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).  (அல்குர்ஆன் 56:35-38)
 

ஒரே வயதுள்ள கன்னிகளும்.  (78:33)

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழிகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர் (55:72)

ஹூருல் ஈன்கள் அழகிய நெடிய கண்களையுடையவர்கள் ஆவார்கள்: -

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:56)

அவர்கள் வெண்முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். (55:58)

http://ipcblogger.net/musawir/files/2010/07/363.jpgசொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் ‘ஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும். ஆதாரம்: புகாரி.

சுவர்க்கத்து தோட்டங்கள், ஆறுகள், நீரூற்றுகள்
அல்லாஹ்வை பயந்து வாழ்ந்த நல்லடியார்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது; அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும் தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. அல்குர்ஆன் 47:15

பசி, நிர்வாணம், தாகம்,வெயில் இருக்காது“நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர். (20:118)
“இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிலில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்). (20:119)
எச்சில் துப்பவோ, மலஜலம் கழிக்கவோ, மூக்கு சிந்தவோ மாட்டார்கள்!
ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) கூறினார்கள்: சுவனவாசிகள் சுவனத்தில் உண்பார்கள்., பருகுவார்கள்! ஆனால் எச்சில் துப்பமாட்டார்கள்., மலஜலம் கழிக்க மாட்டார்கள். மூக்கு சிந்தமாட்டார்கள்! தோழர்கள் கேட்டார்கள்: அப்படியானால் உணவின் நிலை என்ன? அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: ஒரு ஏப்பம் வரும்., வியர்வை வெளிப்படும்! அவ்வளவுதான்! அந்த வியர்வை கஸ்தூரி மணம் கமழும்! மூச்சு விடுவது போன்று -அல்லாஹ்வைத் துதிப்பதற்கும் புகழ்வதற்கும் அவர்களுக்கு உள்ளுதிப்பு அளிக்கப்படும்'(முஸ்லிம்)


சுவர்கத்தின் கட்டட அமைப்பு
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நாங்கள் கேட்டோம்: அல்லாஹ்வின்தூதரே! சுவனத்தைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். அதன் கட்டட அமைப்பு எத்ததையது? அதற்கு நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்: செங்கற்கள் தங்கம் - வெள்ளியினால் செய்யப்பட்டவை., அதன் பூச்சு கஸ்தூரியாகும். அதன் கற்கள், முத்து - மாணிக்கத்தினால் ஆனவை., அதன் மணல் குங்குமமாகும். சுவனத்தினுள் பிரவேசித்தவர் இன்பத்தில் திளைத்திருப்பார். சங்டத்துக்கு ஒருபோதும் ஆளாகமாட்டார்., நிரந்தரமாக வாழ்வார். என்றைக்கும் மரணம் அடையமாட்டார்! அவருடைய ஆடைகள் கந்தலடையமாட்டா! அவரது இளமை என்றைக்கும் முடிவடையாது' (நூல்: முஸ்னத் அஹ்மத்,  திர்மிதி)

இறைநம்பிக்கையாளனுக்குச் சுவனத்தில் வழங்கப்படும் கூடாரம்.
அபூ மூஸா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளனுக்குச் சுவனத்தில் ஒரு கூடாரம் உள்ளது. நடுப்பகுதி ஒரு காலி முத்தினால் அமைந்ததாகும் அது! வானத்தில் அதன் நீளம் அறுபது மைல்களாகும். இறைநம்பிக்கையாளனுக்கு அங்கு மனைவியர் இருப்பர்;. அவர்களிடம் அவன் போய்வந்து கொண்டிருப்பான். அவர்கள் சிலர் வேறு சிலரைக் காண முடியாது' (நூல்:புகாரி,  முஸ்லிம்)


இறைநம்பிக்கையாளனுக்கு நூறு மனிதர்களின் சக்தி கொடுக்கப்படும்.ஜைத் பின் அர்கம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எந்த இறைவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒரு சுவனவாசிக்கு உண்பது,  பருகுவது, உடலுறவு கொள்வது, ஆசைப்படுவது ஆகியவற்றில் நூறு மனிதர்களின் சக்தி கொடுக்கப்படும். அவர்களின் இயற்கைத் தேவை என்பது வியர்வையாகி மேனிகளின் வழியாக வெளியேறும்! அது கஸ்தூரி மணம் போன்று கமழும்! அவர்கள் வயிறு ஒட்டியிருக்கும்'  (முஸ்னத் அஹ்மத், நஸஈ).
(முன்திரி அவர்கள், அத் தர்ஃகீப் வத் தர்ஹீப் எனும் நூலில் கூறியுள்ளார்கள்: இதன் அறிவிப்பாளர்கள் ஸஹீஹ் ஹதீஸில் ஆதாரப்பூர்வமாய் ஏற்கப்படுபவர்களாய் உள்ளனர். இமாம் தபரானியும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புத் தொடர் கொண்டு இதனை அறிவித்துள்ளார்கள். இப்னு ஹிப்பானும் ஹாகிமும் கூட அறிவித்துள்ளார்கள்.)

சுவனவாசிகளின் அழகை பிரகாசிக்க செய்யும் அங்காடி.
அனஸ்(ரலி) அவர்கள் மேலும் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனத்தில் அங்காடி ஒன்றுள்ளது. சுவனவாசிகள் ஒவ்வொரு ஜும்ஆ நாளிலும் அங்கு வருவர். தென்றல் காற்றடித்து அவர்களின் முகங்களிலும் ஆடைகளிலும் புழுதி வாரிப்போடும். அதனால் அவர்கள் அதிக அழகையும் பிரகாசத்தையும் பெறுவார்கள். தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வார்கள். மேலும் அவர்களிடம் கூறுவார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் வெளியே சென்ற பிறகு நீங்கள் அதிக அழகையும் பிரகாசத்தையும் பெற்று விட்டீர்கள் என்று! அதற்கு அவர்கள் பதில் கூறுவார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்களும் தான் இங்கிருந்து சென்ற பிறகு அதிக அழகையும் பிரகாசத்தையும் பெற்றுள்ளீர்கள்' (நூல்: முஸ்லிம்)


சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: சுவனத்தில் சென்றதும் ஓர் அறிவிப்பாளர் கூறுவார்: சுவனவாசிகளே! நிச்சயமாக! அல்லாஹ்விடத்தில் உங்களுக்கென ஒரு வாக்குறுதி உள்ளது. அதனை உங்களுக்கு நிறைவேற்றித் தர அல்லாஹ் விரும்புகிறான் -அதற்கு அவர்கள் சொல்வார்கள்: என்ன அது? அவன் எங்களின் எடைத்தட்டுகளைக் கனப்படுத்தவில்லையா? மேலும் எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? மேலும் அவன் எங்களைச் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து,  நரகத்தை விட்டும் எங்களைத் தூரமாக்கவில்லையா? நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: அப்போது அவர்களுக்குத் திரை விலக்கப்படும். இறைவனை அவர்கள் காண்பார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியத்தை விடவும் அதிக விருப்பமான அதிகக் கண்குளிர்ச்சியான எதையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருக்கமாட்டான்!, (நூல்: முஸ்லிம்)
 
மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்று நீங்கள் உங்கள் இரட்சகனை பார்ப்பீர்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் சொன்னார்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்'  (32 : 17)


அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அவர்களின் இந்த அறிவிப்பும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது: 


சுவனவாசிகளிடம் அல்லாஹ் கூறுவான்:'எனது உவப்பை உங்களுக்கு நான் அருளுகிறேன்! இனி ஒரு போதும் உங்களின் மீது நான் கோபம் கொள்ளமாட்டேன்'

யா அல்லாஹ்! உன்னுடைய சுவனங்களில் நிரந்தரமாகத் தங்கி வாழும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக! அங்கு உனது உவப்பை எங்கள் மீது அருள்வாயாக! உன் முகத்தைக் காண்பதன் இன்பத்தையும் உனது சந்திப்பின் ஆர்வத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக!


Tuesday, October 19, 2010

இஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsK8-XbS0C3yjdd9RPAYiG7kVNF5Mrluh7wSk0DtqErRnYp1AvraGrlhmjKZYf-by1ob4M9GnEqbkR27czhxnZ64lOjYwed_ZaEIG4kAb90g4bRabojrhtOY3o34jDf0P5hT6YJSrIYJY/s1600/Bismillah_2.JPG


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் நிலவுவதாக...ஆமின். 

சில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர்,  இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்......

முன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்வற்ற வேண்டுமோ? என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை. 

இந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக....

இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.

அவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).

பணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்............................


"எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது. 

இப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை, 

  • என் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும். 
  • அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும். 
  • எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும். 

என்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.

இது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.

என்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,

"எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது" 

இதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.

ஆம்... நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.

"ஆம், நான் ஏற்றுக்கொண்டேன்"

அவ்வளவுதான்...அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.

மனதால் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன், அதிகாரப்பூர்வமாக இன்னும் இல்லை என்பது தான் என்னுடைய விளக்கமாக இருந்தது. ஆனால் என்னுடைய இந்த அணுகுமுறை அவருக்கு மேலும் குழப்பத்தையே தந்தது. அவரை இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டுமென்ற என்னுடைய முயற்சியும் இதனால் தள்ளிப்போனது.

நாட்கள் சென்றன....

இந்த நேரத்தில் முஸ்லிம்களுடன் தொழக்கூடிய வாய்ப்பு அமைந்தது. அது ஒரு வார இறுதி நாள். ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து தொழுவதற்கான அழைப்பு விடப்பட்டது. அவ்வளவு தான், கடைகள் அடைக்கப்பட்டன. தெருவோர கடைகளின் பொருட்கள் துணிகளால் மூடப்பட்டன. வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் மக்கள் மசூதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அது என்னை மிகவும் கவர்ந்தது.

முஸ்லிம்களின் தொழுகை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்வதென முடிவெடுத்து விட்டேன்.

பள்ளிவாசலுக்கு சென்றவர்களை பின்தொடர்ந்தேன். நான் போவதற்குள் தொழுகையில் இரண்டு வரிசைகள் பூர்த்தியாகி விட்டன. வரிசையில் மக்கள் தோளோடு தோளாக நெருங்கி நின்றார்கள். அவர்களுடன் நானும் என்னை ஐக்கியப்படுத்தி கொண்டேன். அந்த வரிசையில் என்னோடு பல சிறுவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

எனக்கு அருகில் இருந்தவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்று ஓரக்கண்ணால் கவனித்தபடியே இருந்தேன். அவர்கள் எப்படி குனிந்து நிமிர்ந்தார்களோ அப்படியே நானும் செய்தேன். அவர்களை அப்படியே பின்பற்றினேன்.

எனக்கு நன்றாக தெரியும், இவர்கள் என்னை விட அதிகமாக மனதை ஒருநிலைபடுத்துகின்றார்கள் என்று. அவர்கள் தொழுகையில் தங்களுக்குள் என்ன சொல்லிக்கொள்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு மனதில் அப்போது என்ன வார்த்தைகள் தோன்றினவோ அதனைக்கொண்டு இறைவனை தொழுதேன்.         

"இறைவா, என் விருப்பம் நிறைவேற உதவி செய். என்னுடைய மனைவிக்கு நேர்வழி காட்டு. உன்னிடத்தில் மட்டுமே நான் உதவி கோருகின்றேன். உன்னால் படைக்கப்பட்டு இன்று கடவுள்களாக இருக்கின்றனரே, அந்த மனிதர்களிடத்தில் அல்ல"

இதனை நான் ஒரு மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடன் தொழுது கொண்டிருந்தார்களே அவர்கள் அளவுக்கு நான் இறைவனிடத்தில் தொடர்பு கொண்டிருந்தேனா என்று தெரியாது. ஆனால் தொழுகை முடிந்தவுடன் ஒருவிதமான மன அமைதியை உணர்ந்தேன்.

என்னுடைய காலணிகளை அணிய சென்றேன். ஷூவையும், சாக்சையும் எடுத்த போது இரு சிறுவர்கள் என் முன்னால் வந்து நின்றார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, எனக்கு அருகில் நின்று தொழுதவர்கள்.

"Anta Muslim? Limada tusalli? ‘adam wa’dha al yedduka al yameen ala shimal.” (நீங்கள் முஸ்லிமா? நீங்கள் எதற்காக தொழுகின்றீர்கள்? தொழும்போது வலது கையை, இடது கைக்கு மேல் வைக்க வேண்டும்)

ஆம், அந்த சிறுவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நான் முஸ்லிமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டது.

பிறகு அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்தார்கள். எப்படி ருக்கூ (How to Bow) செய்ய வேண்டுமென்று, எப்படி சஜிதா (How to Prostrate) செய்ய வேண்டுமென்று மற்றும் எப்படி கால்களை வைக்க வேண்டுமென்று. அவர்கள் அதோடு விடவில்லை. அவர்களை பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்தார்கள். எனக்கு இன்னும் நிறைய பயிற்சி வேண்டுமென்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.

அவர்களது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். நான் வீட்டின் வெளியிலேயே நின்று விட்டேன். சங்கடம் தான் காரணம். முன்னே சென்றே அந்த சிறுவர்களில் ஒருவன் நான் தயங்கி நிற்பதை பார்த்து என்னருகில் வந்து "come on" என்று சைகை செய்து என்னை உள்ளே அழைத்து சென்றான். அங்கே 15-16 வயது மதிக்கத்தக்க டீனேஜ் இளைஞர் ஒருவர் என்னை வரவேற்றார். அவர் இந்த சிறுவர்களின் அண்ணனாம்.

என்னை மிக அன்பாக உபசரித்தார். அரேபிய காபியும், சில பேரித்தம் பழங்களையும் கொடுத்தார். ஆனால் எனக்கு புரியவில்லை, என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று. வீட்டை சுற்றிமுற்றி பார்த்தேன். இந்த சிறுவர்களை தவிர வேறு யாருமில்லை. பேச்சை ஆரம்பித்தேன்.

"உங்கள் தாய், தந்தையர் எங்கே?"

நான் கேட்ட கேள்விக்கு அவரால் சைகையால் பதில் சொல்ல முடியவில்லை. சற்று பொறுங்கள் என்பது போன்று சைகை செய்தார். நான், இருவரும் வெளியே போயிருப்பார்கள் போல என்று நினைத்து கொண்டேன்.

அப்போது மற்றொரு டீனேஜ் இளைஞர் வீட்டிற்கு வந்தார். இவரும் அவர்களது சகோதரர் தான். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். பின்னர், உள்ளே வந்த அந்த இளைஞர் என்னைப் பார்த்து கேட்டார்.

"அமெரிக்கி?" (அமெரிக்கரா?)

"இல்லை, நான் பிரிட்டிஷ்"

"காபி அருந்துகின்றீர்களா?"

இல்லை, நான் ஏற்கனவே அருந்தி விட்டேன் என்று சொல்வது போல தலையசைத்தேன்.
                   
"Tawadha" (உளு செய்யலாம் வாருங்கள்)

உளு (Wudu is the Islamic act of washing parts of the body using water) செய்ய சொல்லிக்கொடுத்தார்.

"வாருங்கள் தொழப்போகலாம்"...

மாலை நேர தொழுகைக்காக கிளம்பினோம்.

"கையை உயர்த்துங்கள்" என்று சொல்லியபடியே என்னுடைய வலது கையை மேலே எழுப்பினார். "பிறகு இப்படி வையுங்கள்" என்று என்னுடைய இடது கையின் மேல் வலது கையை வைத்தார். பிறகு இரு கைகளையும் மார்பில் படியுமாறு மேலே தூக்கினார்.

நாங்கள் நடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ரோட்டின் நடுவில் நின்று கொண்டே அடுத்த பாடத்தை சொன்னார், "நான் செய்வதை போல செய்யுங்கள்" என்று இரு கைகளையும் உயர்த்தி காதுகளுக்கு அருகில் வைத்து கொண்டார்.

பள்ளிக்குள் நுழைந்தோம். அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டேன். இப்போது முன்பை விட சரியான முறையில் தொழுதேன்.

பள்ளியிலிருந்து திரும்பியவுடன் இரவு நேர உணவு பரிமாறப்பட்டது. நான் மறுபடியும் கேட்டேன், 

"உங்கள் அம்மா எங்கே?"

அவர் தலையசைத்து விட்டு, தூங்குவது போல சைகை காட்டி கீழே பூமியை காட்டினார்.       

"Baba wa mama fiy mout, yarhamhummullah. Sister make" (மரணம் எங்கள் பெற்றோரை தழுவிவிட்டது. அவர்கள் இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக. என் சகோதரி தான் உணவு தயாரித்தார்"

அப்போது தான் புரிந்தது, இவர்கள் பெற்றோரை இழந்த சிறுவர்கள் என்று. குடும்பத்தை காக்கவேண்டிய பொறுப்பை இந்த இளைஞரும் அவருடைய சகோதரியும் தான் ஏற்றிருக்கின்றார்கள். அந்த இளைஞனின் ஆங்கிலம் தெளிவாக இல்லை. அதனால் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.

"உங்களுக்கு இஸ்லாம் பிடித்திருக்கின்றதா?" அவர் கேட்டார்.

"ஆம்"

"பிறகு ஏன் நீங்கள் முஸ்லிமாகவில்லை"

"எனக்கு டைம் தேவை"

அவர் எனக்கு என் வீடு வரை லிப்ட் கொடுத்தார்.

"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள். எங்கள் வீட்டிற்கு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்"

நான் அவருக்கு நன்றி கூறினேன்.

அந்த குடும்பத்தின் அன்பு என்னை விட்டு விலகவில்லை. அவர்கள் என் மீது காட்டிய அக்கறையால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். எனக்கு நேர்வழி காட்ட அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டினேன்.

இதற்கு பிறகு என் வாழ்வில் நுழைந்த மனிதர் என்னால் மறக்க முடியாதவர். அவர் பெயர் அலி ஜமீலி. ஈரான் நாட்டை சேர்ந்த அமெரிக்கர். உம்ரா (The Umrah is a pilgrimage to Mecca performed by Muslims that can be undertaken at any time of the year) செய்வதற்காக சவுதி அரேபியா வந்திருந்தார்.

எனக்கு இஸ்லாத்தை பற்றி தெரியுமா? என்று கேட்டார். உங்கள் புனித நூலை நான் படித்திருக்கின்றேன் என்று கூறினேன்.அவரது அடுத்த கேள்வி நான் எதிர்பார்த்ததுதான்...

"நீங்கள் முஸ்லிமாகவில்லையா?"

என்னுடைய மூன்று நிபந்தனைகளைப் பற்றி கூறினேன்.

"உங்களுக்கு என்ன பைத்தியமா?, அல்லாஹ்விடம் நிபந்தனைகள் விதிக்க கூடாது. இப்போதே சஜிதா செய்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். இஸ்லாம் தான் இறைவனின் மார்க்கம் என்பதில் உங்களுக்கு ஐயங்கள் இல்லையென்றால் இப்போதே ஷஹாதா (Shahada is the testimony of faith indicating belief in one God, Allah, who has no partners and belief that the Prophet Muhammad (peace be upon him) is his final prophet and messenger) சொல்லுங்கள்"

"நான் ஏன் நிபந்தனைகள் போடக்கூடாது?, என் குடும்பமும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அது தவறா?"

"இங்கே பாருங்கள். இறைவன் யாரை நாடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுகின்றான். உங்கள் குடும்பத்தை காரணமாக காட்டி அவனுடைய வழிகாட்டுதலை அலட்சியப்படுத்துகின்றீர்களா?. இவ்வளவு ஏன்...நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கூட இறைவன் நேர்வழி காட்டவில்லையே!!! நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர்களது தந்தையின் சகோதரர் முஸ்லிமாகவில்லையே"

எனக்கு தெளிவாக விளக்கினார் ஜமீலி. ஆனால் நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.

"நான் என் குடும்பத்தினருடன் பேச வேண்டும்"

"நீங்கள் அதற்கு முன்னே இறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?. நீங்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதனை நிராகரித்து விட்டு இறந்தால் நீங்கள் செல்லும் இடம் நரகம் தான். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர் என்பது உங்களுக்கு புரியவில்லையா? உங்களை போல எல்லோருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை புறக்கணிக்க போகின்றீர்களா?"

அவருடைய அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது சரிதான். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் நான் ஒரு முட்டாள்.

உடனடியாக நான் அடுத்த அடியை எடுத்து வைத்தேன். இஸ்லாமிய தாவாஹ் சங்கத்திற்கு சென்று, அதிகாரப்பூர்வமாக இஸ்லாத்தை தழுவ என்ன செய்யவேண்டுமென்று கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.

என்னுடன் டேவிட், ஜான் என்ற இரு சகோதரர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள்.

இஸ்லாத்தை தழுவ நினைப்பவர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இஸ்லாம், உங்களுக்கான ஆன்மீக அடைக்கலம். 

இறைவன், நம்பிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சோதனைகளை தருவான். இவ்வுலகின் உங்கள் பிரச்சனைகளானது தானியங்கியாக தீர்ந்து விடாது. ஆனால் இறைவனின் உதவி இருந்தால் அவை ஒன்றன் பின் ஒன்றாக விலகிவிடும்.

அதனால் உங்களை அர்ப்பணியுங்கள், பிறகு பொறுமையோடு காத்திருங்கள், இறைவன் உங்களுக்கு அதிகமாக அருளை கொடுப்பானென்று"


சுபானல்லாஹ். இந்த பதிவின் மூலம், நான் இஸ்லாத்தை தழுவும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புவது...நீங்கள் இஸ்லாத்தை நன்றாக ஆய்வு செய்யுங்கள். அது தான் உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்கள் முடிவை தள்ளிப் போடாதீர்கள். முதலில் உங்களை அர்ப்பணித்து விடுங்கள், பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமென்று துஆ செய்யுங்கள். உங்களுக்காக நாங்களும் துவா செய்வோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சகோதரர் ஜெறோம் பௌல்டரை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் பின்வரும் முகவரியில் அவரை நீங்கள் சந்திக்கலாம்...

Jerome Boulter,
LTAP Language Teacher,
English Language Centre,
Faculty of Academic Services,
Taibah University,
PO Box 344
Medina 42353,
Kingdom Saudi Arabia
cel. +966 54 3328708
jerboulter@gmail.com


இதனை எழுதும்போது டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களின் ஒரு உரையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது, நீங்களும் பார்த்திருக்கலாம்.

அந்த உரையின் கேள்வி பதில் நேரத்தில் ஒரு சகோதரி,

"குரான் இறைவேதமென்றால், இஸ்லாம் தான் உண்மையென்றால் அதனை ஏற்க ஏன் மக்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றார்கள்?" என்று கேட்க,

அதற்கு டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கூறி விட்டு அந்த சகோதரியை பார்த்து கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வியை,

"சகோதரி, நீங்கள் என்னைப் பார்த்து கேட்டீர்கள், இப்போது நான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன். இஸ்லாத்தை ஏற்கவிடாமல் உங்களை தாமதப்படுத்துவது எது?" என்று கேட்க, அதன் பிறகு நடந்தது உணர்வுப்பூர்வமான நிகழ்வு. அதனை நீங்களே கீழே பார்க்கலாம்.

இறைவன் ஒருவருக்கு நேர்வழி காட்ட நினைத்து விட்டால் யார் தடுப்பது?

இறைவா, இஸ்லாத்தை ஏற்கும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு மனபலத்தை தந்தருள்வாயாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
சகோதரர் ஜெறோம் பௌல்டர் குறித்த இந்த மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. பதிவிற்கு தேவைப்பட்ட தகவல்கள் மட்டும் அவரது வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிற்கு வந்த விதம் குறித்த அவரது கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரது இணையதள முகவரியை பயன்படுத்தவும்.    


My Sincere thanks to:
1. Brother Jerome Boulter..
2. Islam Religion Website.

Reference: 
1. Why I became Muslim - http://www.jboulter.com/index_files/Page987.html

 

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும்...



அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

      எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் ஈமான் என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று துவா செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப்பட்டிருப்போம்.  

அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த என் பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து நான் சேகரித்ததுண்டு. 

இவரும் நாத்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான்.

டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் (Dr. Lawrence Brown), கனடியன் தாவாஹ் அசோசியேசனின் (Canadian Dawah Association) interfaith துறையின் தலைவர். அமெரிக்க விமானப்படையில் மதிப்புமிக்க கண் மருத்துவராக பணியாற்றியவர்.            



1990 ஆம் ஆண்டு இவருடைய வாழ்க்கை திசை திரும்பியது. அது தான் இவர் இறை நம்பிக்கையின்பால் வந்த நேரம்.


"அது 1990 ஆம் ஆண்டு. நான் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழக மருத்துவமனையில் பணியாற்றிய நேரம். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி என்னுடைய இரண்டாவது மகள் பிறந்தாள்.


மார்பிலிருந்து பாதங்கள் வரை அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த அவளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவளுடைய இதய குழாய்களில் இருந்த பிரச்சனையால் அவளுடைய உடம்பால் தேவையான இரத்தத்தை பெற முடியவில்லை. ஒரு மருத்துவராக அவள் அதிக நாட்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தேன். மிகவும் உடைந்து போனேன். இப்போது அவளுக்கு தேவை அவசர அறுவை சிகிச்சை.


குழந்தைகள் இதய சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார். என் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்து விட்டு வெளியேறினேன்.


இப்போது எனக்கு துணை யாருமில்லை, என்னுடைய பயத்தை தவிர. அது என்னை அந்த மருத்துவமனையின் வழிபாட்டு அறைக்கு செல்ல வித்திட்டது.


பாரம்பரியமிக்க கிருத்துவ குடும்ப பின்னணியை கொண்ட நான், இறைவனை குறைந்த அளவாவது அங்கீகரித்தது என்றால் அது இப்போது தான். அதுகூட சந்தேகத்தில் தான் பிரார்த்தித்தேன்....


"இறைவா நீ இருந்தால்..."


அவன் இருந்தால், அவன் என் குழந்தையை காப்பாற்றினால், என்னை அவனுடைய மார்க்கத்திற்கு வழி காட்டினால் நிச்சயம் அவனை நான் பின்பற்றுவேன். இதுதான் அப்போது இறைவனுக்கு நான் அளித்த வாக்குறுதி. பிறகு அவசர சிகிச்சை பிரிவிற்கு திரும்பினேன்.


என் மகள் நலமாகி விடுவாள் என்று மருத்துவர் கூறினார். அவர் சொன்னது போன்றே இரண்டு நாட்களில் அவள் சரியாகி விட்டாள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே.... இன்று அவளுக்கு பதினெட்டு வயது. நலமாக இருக்கிறாள்.


நான் முன்னமே கூறியது போன்று நான் ஒரு மருத்துவர். அவள் குணமானதற்கு மருத்துவ ரீதியாக patent ductus arteriosis, low oxygenation and spontaneous resolution என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக இதில் இறைவனின் பங்குள்ளது என்றே என் மனம் சொல்லியது.


பயத்தில் இறைவனிடம் வாக்குறுதி கொடுக்கும் பலரும், அவர்களுடைய தேவை நிறைவேறிய பின்னர் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க புது புது காரணங்களை கண்டுபிடிப்பர்.


என் மகள் குணமடைந்ததற்கு மருத்துவ காரணங்களை காட்டி என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம், நம்பிக்கை என்னுள் ஆழமாக நுழைந்து விட்டது. நாங்கள் எடுத்த cardiac ultrasounds, ஒருநாள் பிரச்சனை இருப்பதாக காட்டியதையும் மறுநாள் அந்த பிரச்சனை இல்லை என்று காட்டியதையும் என்னால் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.


நான் நினைத்ததெல்லாம் இதுதான், இறைவன் நான் கேட்டதை நிறைவேற்றி விட்டான், இப்போது நான் அவனுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.


அடுத்த சில வருடங்கள் என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால், அவை யாவும் தோல்வியை தழுவின. கிருத்துவம் மற்றும் யூத மார்க்கத்தை பற்றி நிறைய படித்தேன். ஆனால் அவை எனக்கு முழு திருப்தியை தரவில்லை. அதுமட்டுமல்லாமல் அவற்றுடன் என்னால் ஒன்றவும் முடியவில்லை.


பிறகு ஒருநாள் குரானும், மார்டின் லின்க்ஸ் (Martin Lings) அவர்களின் புத்தகமான "Muhammed: His life based on the Earliest Sources" னும் அறிமுகமாயின.


நான் மார்க்கங்கள் குறித்து ஆராய்ந்த போது, யூத நூல்கள், வரப்போகும் மூன்று நபிமார்களை பற்றி குறிப்பிடுவதை படித்திருக்கிறேன். யஹ்யா(அலை) மற்றும் ஈசா(அலை) போன்றவர்கள் அவர்களில் இருவர், யார் அந்த மூன்றாவது நபர்?      


பைபிளில் ஏசு(அலை) அவர்கள், தனக்கு பின் வரும் நபியைப் பற்றி குறிபிட்டிருக்கிறார்கள்.


ஆக, குரானைப் படிக்கும் போது அனைத்தும் ஒத்துவர ஆரம்பித்தன (Everything started to make sense). நபிமார்கள், ஒரே இறைவன், இறைவேதம் என்று அனைத்தும் அறிவுக்கு ஒத்துவர ஆரம்பித்தது.


இஸ்லாத்தை ஏற்று கொண்டேன்.


நான் கற்றுக்கொண்ட பாடமென்றால், என்னை விட அறிவில் சிறந்த பலர் இஸ்லாம் என்னும் உண்மையை அறியாமல் இருக்கின்றனர்.


நீங்கள் புத்திசாலியா என்பது மட்டும் இங்கு முக்கியமல்ல, அந்த அறிவு உங்களுக்கு சரியான முறையில் புகட்டப்படுகிறதா என்பது தான் முக்கியம்.

"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" --- குரான் 42:13  
"...தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்" --- குரான் 24:46     

அல்லாஹ் என்னை தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியிருக்கிறான். அதற்காக அவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


இப்போது என்னிடத்தில் ஒரு எளிமையான பார்முலா உள்ளது. அது, முதலில் படைத்தவனை அங்கீகரிப்பது, அவனை மட்டுமே வழிபடுவது மற்றும் அவனிடத்தில் மட்டுமே வழிகாட்ட கோருவது.


அவன் யாருக்கு நல்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழிகெட செய்ய முடியாது..."    


அல்ஹம்துலில்லாஹ்.

இவர் கண் மருத்துவர் என்பதால், டார்வின் கண்ணைப் பற்றி ஆராயும் போது ஏற்பட்ட தடுமாற்றத்தை அழகாக விளக்குவார்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்பு தான் இவருக்கு இறைவனின் சோதனை அதிகமிருந்தது. இஸ்லாத்தை ஏற்கும் பலரும் இது போன்ற நிலையை தாண்டி தான் வருகிறார்கள் என்றாலும், ஒரு சிலருக்கு இது போன்ற சோதனைகள் அதிகமாகவே இருக்கின்றன.


"நான் முஸ்லிமானதை என் மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  என்னிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டார்.


நீதிபதி "உங்களுக்குள் என்ன பிரச்சனை" என்று கேட்ட போதும், "விவாகரத்து வேண்டுமென்று" மட்டும் தான் சொன்னார். அவர் சென்றது மட்டுமல்லாமல் என் குழந்தைகளையும் என்னிடமிருந்து அழைத்து சென்று விட்டார். என் குழந்தைகளை நான் பார்க்க வேண்டுமென்றால் பாதுகாப்பு அதிகாரியின் துணையுடன் தான் பார்க்க வேண்டும்.


என் குழந்தைகளுடன் என் வீடு, செல்வம் என்று அனைத்தையும் தன்னிடத்தே கொண்டு சென்று விட்டார் என் மனைவி. வாரமொருமுறை வாடகை செலுத்தும் அறைகளில் பிறகு என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன்.


என் பெற்றோர்களோ என்னை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர். ஒருமுறை அவர்களிடமிருந்து வந்த கடிதம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதில், அவர்கள், என்னை பார்க்கவோ, என்னிடம் பேசவோ விரும்பவில்லை என்றும், நானும், இனிமேல் அவர்களை பார்க்க வரக்கூடாதென்றும், கடிதம் கூட அனுப்ப கூடாதென்றும் எழுதப்பட்டிருந்தது.


என் மனைவி மீதோ அல்லது என் பெற்றோர்கள் மீதோ இந்த நிகழ்வுகளுக்காக வருத்தம் இருந்ததில்லை. அவர்கள் நிலையிலிருந்து எண்ணி பார்க்கவேண்டும். அவர்கள் நான் தவறான வழியில் சென்று விட்டதாகவே நினைத்தனர். அன்றைய காலகட்டத்தில் ஊடகங்களும் அப்படி ஒரு நிலையைத் தான் ஏற்படுத்தி இருந்தன.


என் நண்பர்களும் என்னை விட்டு பிரிந்து செல்ல ஆரம்பித்தனர். இனி அவர்கள் எதிர்பார்க்கும் பழைய நபரில்லை நான்.



தற்போது நிலைமை பெரிதும் மாறி விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


என் மனைவியை விட்டு பிரிந்த எனக்கு மற்றொரு அன்பான துணையை இறைவன் ஏற்படுத்தினான். மற்றொரு குழந்தையை கொடுத்தான்.


அமெரிக்காவில் வசிக்க சிரமப்பட்ட எனக்கு இப்போதைய இருப்பிடம் புனித மதீனா நகரம். குடும்பத்தினரை விட்டு பிரிந்த நான் இப்போது உலகளாவிய இஸ்லாமிய குடும்பத்தில் ஒருவன். எங்கள் சகோதரத்துவம் போல எதுவும் வராது. நான் சொல்வது உண்டு, சகோதரத்துவம் என்றால் என்னவென்று ஒருவர் இஸ்லாத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று.


தற்போது என் பெற்றோர் என்னிடம் நெருங்கி வர ஆரம்பித்துள்ளனர். என் சகோதரர் இஸ்லாத்தை தழுவி விட்டார். என் குழந்தைகளை சுலபமாக பார்க்க முடிகிறது.


இறைவன் குர்ஆனில் சொல்லுவது போன்று, கஷ்ட காலங்களுக்கு பின்னர் சூழ்நிலைகளை எளிதாக்கி வைத்துள்ளான். நான் இழந்ததை விட பெற்றவை அதிகம்.


என்னுடைய அனுபவங்கள் மூலம், இஸ்லாத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவதெல்லாம், நீங்கள் ஒரு நொடி கூட, இஸ்லாத்திற்கு வந்தால் இதை இழக்க நேரிடுமோ என்று எதை எண்ணியும் அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதியையும், பலத்தையும் கொடுக்கச் சொல்லி இறைவனிடம் துவா செய்யுங்கள். அப்படியே அவன் உங்களுக்கு சோதனைகளை தந்தாலும் அது உங்களால் தாங்கக்கூடிய அளவாக இருக்க வேண்டுமென்று அவனிடம் கேளுங்கள்.


என் அனுபவத்தின் மூலமும், நான் பார்த்த புதிய முஸ்லிம்களின் அனுபவத்திலிருந்தும் கூறுகிறேன், நீங்கள் இஸ்லாத்தை தழுவ நேர்ந்தால் அதனால் நீங்கள் பெரும் மன அமைதி என்பது, நீங்கள் இதுவரை பெற்ற எந்த ஒரு விசயத்தையும் விட மேலானதாக இருக்கும்....."


சுபானல்லாஹ்....ஈமானை இறுக பற்றி பிடித்திருக்கும் இவர்களைப் போன்றவர்களை காணும் போதெல்லாம்  நம்முடைய ஈமானும் அதிகரிக்கிறது.
  
டாக்டர் லாரன்ஸ் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. இவருடைய கட்டுரையான "The Big Questions", ஒருவர் தன் வாழ்நாளில் கேட்க நினைக்க கூடிய கேள்விகளை அடிப்படையாக கொண்டது.

பல நூல்களை எழுதியிருக்கும் இவர், கனடா, அமெரிக்கா, அரேபிய நாடுகள் என்று தன் தாவாஹ் பணியை செய்து வருகிறார். 

இறைவன் இவர் போன்றவர்களின் மன பலத்தை நமக்கும் தந்தருள்வானாக...ஆமின்...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


by Aashiq Ahamed. A