நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

கிறிஸ்துவர்களுடனான விவாதம்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 28 , 29 அன்று திருக்குர்ஆன் இறைவேதம் என்ற தலைப்பில் நடைபெறும் விவாதம் நமது www.onlinepj.com இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

Thursday, February 2, 2012

மர்யம்(அலை) அவர்களை நினைவுக்கூற விழா எடுக்கலாமா...?


ஓரிறையின் நற்பெயரால்....
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

அவ்லியாக்கள் எனப்படுபவர்கள் அன்பியாக்கள், சஹாபாக்கள் போன்று வலிமார்கள் எனப்படுவோரும் உள்ளனர். இப்படியான இறைநேசர்கள் தான் தர்காவில் அடங்கப்பட்டுள்ளனர் என்று சிலரை குறிப்பிட்டு வருகின்றனர். இவ்வலிமார்களைத் தான் அல்லாஹ் தன் திருமறையில் அவ்லியாக்கள் என்று குறிப்பிடுகின்றான். அவர்களை நினைவு கூருமுகமாக விழாக்கள் எடுக்கின்றோம் என கூறிவருவோரை பார்க்கின்றோம். அல்குர்ஆனில் கூறுப்படும் அவ்லியாக்கள் என்றால் யார் ..? என்பதினை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
"அல்லாஹுவின் நேசர்கள் " என்றால் யார்?
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
அல்குர்ஆனில் "أَوْلِيَاءَ" என்ற வார்த்தை 36 இடங்களில் பயன்ப்படுத்தப்பட்டுள்ளன. "பாதுகாவலர்கள்", "நண்பர்கள்", "நேசர்கள்" என பொருள் படுத்தப்பட்டுள்ளது.
"வலீ" என்ற வார்த்தையின் பன்மைதான் அவ்லியாவாகும். "வலீயுல்லாஹ்" என்றால் அல்லாஹுவின் நேசர், "அவ்லியா அல்லாஹ்" என்றால் அல்லாஹுவின் நேசர்கள் என்பது பொருளாகும்.
அல்லாஹுவின் நேசர்களின் பண்புகளையும் அவர்கள் யார் என்பதினையும் அல்லாஹ் பின்வரும் வசனங்களின் மூலம் அறிய தருகின்றதைப் பாருங்கள்.
 قُلْنَا اهْبِطُواْ مِنْهَا جَمِيعاً فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
'இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்' என்று கூறினோம். (2;38)
 يَا بَنِي آدَمَ إِمَّا يَأْتِيَنَّكُمْ رُسُلٌ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي فَمَنِ اتَّقَى وَأَصْلَحَ
فَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்து உங்களிடம் வரும் போது (என்னை) அஞ்சி, திருந்திக் கொள்வோருக்கு எந்த அச்சமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (7:35)
أَلا إِنَّ أَوْلِيَاء اللّهِ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ ﴿﴾ الَّذِينَ آمَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ 
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை)அஞ்சுவோராக இருப்பார்கள். (10:62,63)
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள்.மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (2:2,3,4)

யார் அல்லாஹுவின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்கைக் கொண்டு, அவன் தூதர்களின் மூலம் காட்டிய நேர்வழியை முழுமையாக பின்பற்றி அல்லாஹுவை அஞ்சி நடக்கின்றாரோ அவரே அல்லாஹுவின் நேசரகளாவார்கள். அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற)நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். அத்தகைய அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ் காட்டிய நேர்வழியை பின்பற்றி நடக்கின்ற அனைவரும் அல்லாஹுவின் நேசர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆறாம் நூற்றாண்டில் இறக்கப்பட்ட வசனங்கள் ஏதோ சில வருடங்களுக்கு முன் வாழ்ந்து மரணித்த சிலரை குறிப்பதாக சொன்னால் இவர்களின் கூற்றை என்னவென்று சொல்வது...!
முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களை பின்பற்றி நடந்தவர்களையும் அல்லாஹ் நேசர்கள் என்றே பின்வரும் வசனங்களில் கூறுகின்றான்.
إِنَّ الَّذِينَ آمَنُواْ وَالَّذِينَ هَادُواْ وَالنَّصَارَى وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ وَعَمِلَ صَالِحاً فَلَهُمْ
 أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ 
நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர் களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (2:62),(5:69)
அல்லாஹ்வின் நேசர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட  பிரிவினர்    என்று எங்கேயும் அல்லாஹ் சொல்லவில்லை என்பதினை தர்கா வழிபாட்டை செய்கின்றவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். 
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ இந்த வசனத்தின் நோக்கம் எல்லோரும் அல்லாஹ்வின் நேசர்களாக மாறவேண்டும் என்பதைப் பற்றிதான் குறிப்பிடுகின்றன என்பதினை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
1. நல்வழியில் செலவிட்டு , நல்லறங்கள் புரிபவர்களுக்கு கூலி உண்டு,
 الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُم بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلاَنِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (2:274)
 إِنَّ الَّذِينَ آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ وَأَقَامُواْ الصَّلاَةَ وَآتَوُاْ الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்குஎந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (2;277)
2. நல்வழியில் செலவிட்டதை சொல்லிக்காட்டாதவர்களுக்கு கூலி உண்டு
 الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللّهِ ثُمَّ لاَ يُتْبِعُونَ مَا أَنفَقُواُ مَنًّا وَلاَ أَذًى لَّهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (2: 261)
3. அல்லாஹுவின் பாதையில் உயிர்த்தியாகம் செய்பவர்களுக்கு கூலி உண்டு
 فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللّهُ مِن فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُواْ بِهِم مِّنْ خَلْفِهِمْ أَلاَّ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இது வரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். (3:170)
4. தூதர்களை நம்பி, தவறை திருத்திக் கொள்வோருக்கு கூலி உண்டு
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلاَّ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் தவிர நாம் தூதர்களை அனுப்புவதில்லை. நம்பிக்கை கொண்டு, சீர்திருத்திக் கொள்வோருக்கு அச்சமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (6:48)
5. அல்லாஹுக்கு மட்டுமே அடிப்பணிந்தவருக்கு கூலி உண்டு
 بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِندَ رَبِّهِ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
அவ்வாறில்லை! தமது முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறமும் செய்பவருக்குஅவரது கூலி அவரது இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (2: 112)
அல்லாஹ் நேசிக்கின்ற காரியங்களை இன்னும் நிறைய அடிக்கிக்கொண்டே போகலாம் .அல்லாஹுவும், அவனின் தூதர்களும் எந்த வழியை இஸ்லாம் என்று காட்டிதந்தார்காலோ அத்தகைய வழியை பின்பற்றி நடந்தால் தான் நாம் அல்லாஹுவின் நேசர்களாக மாற முடியும்,அல்லாஹ் நேசிக்கின்ற அடியானாக மாற நற்காரியங்களில் போட்டிபோடுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றதைப் பாருங்கள்.
 عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ ﴿﴾ تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ﴿﴾ يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ ﴿﴾ خِتَامُهُ مِسْكٌ وَفِي ذَلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ
நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள். உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை நீர் அறிந்து கொள்வீர். முத்திரையிடப்பட்ட மது புகட்டப்படுவார்கள். அதன் முத்திரை கஸ்தூரியாகும்.போட்டியிடுவோர் இதில் தான் போட்டியிட வேண்டும். (83:23,24,25,26)

நல்லடியார் என்றால் விழா எடுக்கலாமா..?
பொதுவாக மனிதனின் செயல்பாடுகள் அனைத்தும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் உள்ளன. ஒருவரை நல்லவரா..? தீயவர..? என்பதினை அறிய அவரின் வெளிப்படையான செயல்களை வைத்துதான் தீர்மானிக்க முடியும். உதாரணத்திற்கு, ஒருவர் நற்செயலை வெளிப்படுத்தினால் நல்லவர். அது போல தீய செயலை வெளிப்படுத்தினால் தீயவர்.வெளிப்படையான செயல்களைத் தான் நாம் அறிய முடியுமே தவிர, அவரின் அந்தரங்கதையோ, மனதில் உள்ளதையோ நம்மால் அறிய முடியாது.
இவ்வாறிருக்கும் நிலையில் நாம் எப்படி ஒருவரை இறை நேசர் என தீர்மானிக்க முடியும் என்பதினை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒருவர் இறை நேசரா...? என்பதினை அல்லாஹுவே அறிவான். அல்லாஹுவின் நேசர்களின் இறுதி பட்டியல் நாளை மறுமையில் தான் வெளியிடப்படும். ஆனால் இறைவன் தம்முடைய வேதத்தில் இறைத்தூதர்களையும், சில நல்லடியார்களையும் அவர்களின் தூய வாழ்கையை நமக்கு கூறுகின்றான். அத்தகையவர்களை போல நாமும் தியாகம் செய்ய வேண்டும் என்று தான் கூருகின்றானே தவிர, அவர்களுக்கு தர்காக்கள் கட்டி வழிபாடுகள், வான வேடிக்கைகைகள், யானை, குதிரை, ஒட்டகம் ஊர்வலங்கள், ஆடல், பாடல்கள், என விழாக்கள் நடத்த எங்கும் சொல்லவில்லை.

உதாரணத்திற்கு மர்யம்(அலை) அவர்களைப் பற்றி பார்ப்போம்.
وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا
(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது, (19:16)
 وَإِذْ قَالَتِ الْمَلاَئِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاء الْعَالَمِينَ
''மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண் களை விட உம்மைச் சிறப்பித்தான்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக! (3:42)
 وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். (66:12)

நாம் இன்று யாரைலாமோ இறை நேசர் என்று கூறி கொள்கின்றோம். ஆனால் அல்லாஹுவோ நம்பிக்கை கொண்டோருக்கு உதாரணாமாக மர்யம்(அலை) அவர்களை நமக்கு கூறுகின்றான். நல்லடியார்களுக்கு கொடியேற்றி விழா எடுக்கணும் என்றிருந்தால் நாம் முதலில் இவர்களுக்கு தான் எடுக்கணும்.
யாராவது கூறுவார்களா...? மர்யம்(அலை) அவர்களை நினைவு கூறுவதற்காக அவர்களுக்கு ஆலயத்தை எழுப்பி, கொடியேற்றி விழாக்கள் எடுத்து வழிபாடு நடத்துவதற்கு. அவர்கள் கூறமாட்டார்கள் ஏன் என்றால் மர்யம்(அலை) அவர்களுக்கு வழிபாடு நடத்திய நஸரானிகளை தான் அல்லாஹ் வழிதவரியவர்கள் என்று கூறியுள்ளானே.
நஸரானிகள் மர்யம்(அலை) அவர்களுக்கு ஆலையம் கட்டி வழிபாடு மற்றும் கொடியேற்றி விழாக் கொண்டாடுகின்றார்கள்.  நஸரானிகள் செய்தால் அது இணைவைப்பு, அதே முஸ்லிம் என்று பெயர் வைத்து தர்காக்கள் கட்டி  வழிபாடு மற்றும் கொடியேற்றி விழாக் கொண்டாடினால் அது ஏகத்துவமா...? நபிவழியா....? என்னே மதியீனம்.
சூரத்துல் பாத்திஹாவில் நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. என்று ஒவ்வொரு தொழுகையிலும் பிரார்த்தனை செய்துவிட்டு, வழிதவரிய நஸரானிகளின் வழிமுறையை பின்பற்றி நடந்தால் என்ன என்று கூறுவது. பின்வரும் நபிமொழி
நம் நடைமுறையை ஊர்ஜீதப்படுத்துவதைப் பாருங்கள்.
"நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் நீங்களும் அதனுள் நுழைவீர்கள்" என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்) "அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு, வேறு யார் என்று பதிலளித்தார்கள். நூல்: ( புஹாரி 3456)

அல்லாஹுவின் நேசத்தை பெற எளிய வழி இதோ பாருங்கள்...
 قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)
 لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவுவைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப் போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது". (அல்குர்ஆன் 33:21)
அன்பார்ந்த அல்லாஹுவின் நல்லடியார்களே! அல்லாஹுவின் நேசத்தை பெறுவதற்காக ஆண்டுக்கணக்கில் தவம் இருந்து சிரமப்பட தேவையில்லை. இரவு முழுக்க ஒற்றை காலில் நின்று வணங்கத் தேவையில்லை, முறையாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி நடந்து அல்லாஹுவின் நேசத்தை பெற்று நாம் உயர்ந்த சுவனத்தை பெறுவோமாக!
அல்லாஹ் மிக அறிந்தவன்.

Reference:

Saturday, December 24, 2011

பகுத்தறிவை நோக்கி ஓர் பயணம்


நாத்திகனுக்குள் உண்மையைத் தேடி...



                                         ஓரிறையின் நற்பெயரால்.

     பொதுவாக எல்லா மதம் சார்ந்த / சாரா கொள்கைகள் நன்மை செய்வதை முன்னிலைப்படுத்தி கோட்பாடுகளை வகுத்தாலும் ஏனைய மதங்களை விட இஸ்லாமே நாத்திகவாதிகளால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

 ஏனெனில் ஏனைய கொள்கைகள் போல நன்மைகள் மேற்கொள்வதை முன்னிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாது, அதன் எதிர் விளைவான தீமையை தடுக்கவும் இஸ்லாம் அதை பின்பற்றுவோர் மீது சமூக கடமையாக பணிக்கிறது.

  ஆக அதனடிப்படையில் இன்று எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் இஸ்லாமியர்கள் அவரவர் பங்களிப்பை முடிந்த வரையில் அளித்து வருகிறார்கள்.  குறிப்பாக இணையத்தில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது., எல்லா துறைச்சார்ந்த கோட்பாடுகளை விளக்கும் தளங்களை விட இஸ்லாத்தை விளக்கும் தளங்கள் தமிழில் அதிகம்., நான் வாசித்த வரையில் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் மேலாக இருக்கிறது 

   ஒரு கொள்கையை விளக்கும் போது நேர்மறை எதிர்மறை கருத்துக்கள் எழ தான் செய்யும் ஆனால் எந்த ஓரு நிகழ்வையும் ஏற்பதும் மறுப்பதும் ஒருவரது நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட விஷயம். ஆனால் தான் கொண்ட கொள்கை தான் உண்மையானது எனக் கூறி பிறரை ஏற்க செய்வதாக இருந்தால் அச்செய்கையை பொதுவில் நிறுத்தி, 
  • அறிவியல் ரீதியாக 
  • தர்க்கரீதியாக 

     ஒன்றின் கீழாக நிறுத்தி அவை விளக்கப்பட வேண்டும். அது இஸ்லாத்திற்கும் பொருந்தும் -நாத்திகத்திற்கும் பொருந்தும்., ஆனால் இஸ்லாம் எப்படி குர்-ஆன் சுன்னாவை முன்னிருத்தி பிறரை தன்பால் அழைக்கிறதோ, அதுப்போல நாத்திகம் அதுக்கொண்ட கொள்கையே முன்னிருத்தி அழைப்பதில்லை. மாறாக ஒரு நிலையில் இஸ்லாத்தை விமர்சித்து -தவறான புரிதலுடன் குற்றப்படுத்தி தம் கொள்கையை பறைச்சாற்றுகிறது. எண்ணற்ற தளங்கள் இஸ்லாம் சார்ந்த விமர்சனத்திற்கு / குற்றச்சாட்டிற்கு தெளிவான விரிவான விளக்கம் தந்துக்கொண்ட இருக்கின்றன.

     மேலும் ஒரு கோணத்தில் உயிரின தோற்றத்தின் மூலத்திற்கு பரிணாமத்தை அடிப்படையாக கொண்ட சித்தாந்தத்தை அறிவியலாகவும்,  கண் முன் இல்லா கடவுளை ஏற்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாது என தர்க்க ரீதியாகவும் வாதமெழுப்ப நாத்திகம் முயல்கிறது., அவற்றை மறுக்கும் விதமாக கீழ்கண்ட தளங்களில்  நாத்திகத்தை பொய்ப்பித்து படைப்பியல் கொள்கையை நிறுவ இஸ்லாத்தை முன்னிருத்தாமல் அவர்களிலும் வழியிலேயே பரிணாமம் -கடவுள் -கம்யூனிசம் குறித்து ஆய்வு ரீதியாவும் தர்க்கரீதியாகவும் ஆக்கங்களை வெளியிடுகிறது.



     நீங்களும் பார்வையிடுங்கள் இந்த ஆக்கங்கள் சமூக பயன்பாடு உடையது என நீங்கள் நினைத்தால் இந்த பதிவை மீள்பதிவாகவோ அல்லது தனிப்பக்கமாகவோ உங்கள் வலைத்தளத்தில் வெளியிடுங்கள். குறைந்த பட்சம் நாத்திக சகோதரர்களுக்காவது இப்பக்கத்தை அறிய செய்யுங்கள். 


* * *

" சகோதரர் ஆஷிக் அஹ்மத்தின் பரிணாமம் குறித்த பதிவுகள் "  
  









மேலும் பரிணாமம் குறித்து இந்த தளத்தில் உள்ள கட்டுரைகள்



25. வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்.

    * * *



    " சகோதரர் பைசலின் பரிணாமம் குறித்த பதிவுகள் ".
         

    * * *

    " சகோதரர் ஹைதரின் கம்யூனிசம் குறித்த பதிவுகள். "
         






    * * *


    " சகோதரர்  குலாம் 'ன்' பகுத்தறிவு குறித்த பதிவுகள். "


    நான் முஸ்லிம்

     அல்லாஹ் மிக்க அறிந்தவன்


    உங்கள் சகோதரன்
                                                G u l a m 
                                                                                                                                                         இறை நாடினால் இனியும் சந்திப்போம்...

    Wednesday, December 14, 2011

    இருளிலும் பிரகாசிக்கும் மார்க்கமும் வழித்தவரும் முஸ்லிம்களும்

    ஓரிறையின் நற்பெயரால்....
    நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

    (நபியே!) இவர்கள் வணங்குபவை பற்றி நீர் சந்தேகப்பட வேண்டாம்; (இவர்களுக்கு) முன் இவர்களுடைய மூதாதையர் வணங்கி வந்த பிரகாரமே தான் இவர்களுக்கும் வணங்குகிறார்கள்;நிச்சயமாக (தண்டனைக்குரிய) இவர்களின் பங்கைக் குறைவின்றி, முழமையாக நாம் இவர்களுக்குக் கொடுப்போம். 11:109

    ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மனித சமூதாயத்தை நல்வழிப் படுத்துவதற்காக இறைவன் அவர்களிலிருந்தே ஒரு தூதரை எற்படுத்துகின்றான். இறை நெறிகளையும், இறைக் கட்டளைகளையும் இறைவனிடமிருந்து வேதத்தின் மூலம் மக்களுக்கு ஓதிக்காண்பித்து இருளிலிருந்து பிரகாசத்தின் பால் மக்களை அழைக்கின்றனர்.

    'என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!'என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை. (21:25)

    முதன்மையாக அனுப்பப்பட்ட தூதர் முதல் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வரை ஓரிறைக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அனுப்பப்பட்டனர். அவர்களில் தூதர்களை உண்மைப்படுத்தியவர்களும் உள்ளனர், பொய்ப்பித்தவர்களும் உள்ளனர். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

    மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்;ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.(16:36)

    இறைவனுடைய தூதர்களை பொய்பித்தவர்கள் இறைவனுக்கு இணையாக சிலைகளையும், சூரியன்,நெருப்பு, இறந்தவர்களின் மன்னரைகளிலும் வழிபாடு செய்துவந்தனர். இறைவனுடைய கட்டளைகளையும், தூதர்களையும் பொய்பித்த காரணத்தினால் இறைவன் அவர்களை உரு தெரியாமல் அழித்தும் விட்டான். இறைவனின் கட்டளை பொய்யர்களின் பால் இறங்கிய போது அவர்கள் வணங்கிய அல்லாஹ் அல்லாத பொய்யான தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை.

    (நபியே! மேற்கூறப்பட்ட) இவை (சிற்) சில ஊர்களின் வரலாறுகள் ஆகும்; இவற்றை நாம் உமக்கு எடுத்துரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன; சில (அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின.(11:100)

    அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். உம் இறைவனிடமிருந்து கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த அவர்களின் தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை; மேலும் அவை அவர்களுக்கு நஷ்டத்தை தவிர (வேறெதையும்) அதிகரிக்கச் செய்யவில்லை. (11:102)

    மேலும் அத்தூதர்களை உண்மைப்படுத்தியவர்கள் தூதர்கள் அவர்களோடு இருக்கும் குறிப்பிட்ட காலம் வரை நல்வழியில் இருக்கின்றனர். அத்தூதர்கள் அவர்களை விட்டும் பிரிந்த பின் இறைநெறிகளையும், இறைக்கட்டளைகளையும் புறக்கணித்து இறைவனுக்கு இணையாக இறைத்தூதர்களையும் வணங்கி தமக்கு தாமே அநீதி இழைத்து வழிதவறிய சமூகமாகவும் ஆகிவிட்டனர்.

    முன் சென்ற சமூகம் வழிதவறியதைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.


    யூதர்களையும், கிறித்தவர்களையும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய காரணத்தால், அல்லாஹ் சபித்துவிட்டான் என தன்னுடைய மரண தருவாயில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா அவர்கள் அறிவித்துவிட்டு,"இவ்வாறு ரசூல் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்காவிட்டால் அவர்களின் கப்ரும் (தரைமட்டத்தைவிட) உயாத்தப்பட்டிருக்கும்" என்றும் கூறினார்கள். ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

    மேலும் முன் சென்ற சமூகம் வழிதவரியதைப் போன்று தமது சமூகமும் இவ்வாறான காரியங்களை செய்துவிடக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், "அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்'' என்று கூறுவதை நான் கேட்டேன். அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 925

    மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளதை பாருங்கள்.

    கப்ருகளைப் பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள். நூல்: முஸ்லிம் 1610

    நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிக்கும் தருவாயிலும் முன் சென்ற நபிமார்களின் அடக்கதளம் வணக்கதலமாக மாறியதைப் போன்று தம்முடைய அடக்கத்தலமும் இவ்வாறு ஆகிவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்காமல் இருந்திருந்தால் அவர்களின் கப்ரும் உயர்தப்பட்டிருக்கும் என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம் கப்ரை உயர்த்தியோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது என்பதை. ஆனால் நாமோ நல்லடியார்கள் கப்ர் வேறு சாமானியர்கள் கப்ர் வேறு என்று கூறி இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை கேலி செய்யும் வகையில் நாம் நடந்து கொள்கின்றோம்.

    இருளிலும் பிரகாசிக்கும் மார்க்கம்..

    "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அஹ்மது,இப்னு மாஜா 

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த மார்க்கம் இருளிலும் பிரகாசிக்கும் அளவிற்கு வெள்ளை வெளேரென்ற நிலையில் விட்டுச் சென்றுள்ளார்கள். முன்னோர்களை நினைவுக் கூறுகின்றோம் என்ற பெயரால்.. இனைவைப்பையும், சந்தனக்கூடு விழாக்களையும், மாற்று மத கலாச்சாரத்தையும்,வீணான அனாச்சாரங்களையும் இஸ்லாம் என்ற போர்வையில் பின்பற்றப்படுகின்றன. இவைகள் அனைத்தும் நபி(ஸல்) அவர்கள் காட்டிதராத தடை செய்துள்ள காரியங்களாகும்.


    '"எனது கப்ரை விழாக்கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது சலவாத்து சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய சலவாத்து எனக்கு எடுத்துரைக்கப்படும். நூல் : அபூதாவுத் (1746)

    பொதுவாக கப்ரை உயர்த்திக் கட்டுவதையும், கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

    மேலும் நபியவர்கள் தன்னுடைய கப்ரைக் கூட விழாக் கொண்டாடக் கூடிய இடமாக ஆக்கிவிடக்கூடாது என எச்சரிக்கை செய்திருக்கும் போது இன்றைக்கு நாம் நம்முடைய முன்னோர்களுக்கு தர்ஹாக்கள் கட்டி விழாக் கொண்டாடுகிறோமே இது எவ்வளவு பெரிய பாவச் செயல் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    இறைவனுக்கு இணைவைத்தால் சுவர்க்கம் தடை செய்யப்பட்டுள்ளது  என்றும், இறைவனிடம் மன்னிப்பு கிடையாது என்றும், அணைத்து அமல்களும் அழிந்து விடும் என்றும் அல்லாஹும் தன் திருமறையில் எச்சரித்துள்ளான். இறைவனுக்கு இணைவைக்கக்கூடிய காரியங்கள் அனைத்தையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு தெளிவுப்படுத்தி எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்கள். எனவே உரியமுறையில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் நடைமுறைகளைப் பின்பற்றி சுவர்க்கத்தில் அவர்களோடு இருக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள் புரிவானாக!