நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Friday, April 30, 2010

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

 ஈசா (அலை) அவர்களின் வரலாறு UPDATED

(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் திகழ்கின்றது.  (12:111)

இறைதூதர் ஈசா (அலை) அவர்கள் (இயேசு - jesus) மர்யமின் மைந்தராவார். ஆண் துணையின்றி அற்புதமான முறையில் அன்னை மர்யம் பெற்றெடுத்தார். பாலஸ்தீன் உள்ள நாசிரா - NAZARETH என்னும் ஊரில் பிறந்த இவர் மர்யமின் மைந்தர் ஈசா என்றே அழைக்கப்பட்டார்.

மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;.  (3:45)

பொதுவாக ஒருவரை அவருடைய தந்தையோடு இணைத்து கூறுவதே மரபு, ஆனால் ஈசா (அலை) அவர்களுக்குத் தந்தை இல்லாததால் அவருடைய தாயோடு இணைத்து ஈசா பின் மர்யம் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

ஒருவருக்கு இவர்தான் தாய் என்பதற்கு உலகமே சாட்சியாக இருக்கும். ஆனால் இவர்தான் தந்தை என்பதற்கு அவரது தாய் மாத்திரம்தான் சாட்சியாக இருக்க முடியும். எனவே தான் அதனை நாம் உறுதி செய்யும் பொருட்டு நமது பேருக்கு முன்னால் நமது தாயார் யாரை தந்தையென நமக்கும், உலகுக்கும் இனம் காட்டினாரோ அவரது பெயரின் முதல் எழுத்தை எழுதுகிறோம். இது நமது தாயாரை கண்ணியப்படுத்தவும், உண்மைப்படுத்தவும் உதவுகிற ஒரு வழியாகும். ஆனால் புரட்சி என்கின்ற பெயரில் தன் தகப்பன் மேலுள்ள வெறுப்பின் காரணத்தினால் அவரை இழிவுப்படுத்த வேண்டி தாயின் பெயரை தனது முதற் பெயராக வைத்தல் என்பது இன்று நாகரீகமாக கருதப்பட்டுவருகிறது. இப்படிப்பட்டவர்கள் தனது தாயைத்தான் இழிவுப்படுத்துகிறார்கள் என்ற உண்மையை மறந்துவிட்டார்கள்.

ஈசா (அலை) அவர்கள் அவரது தாயின் பெயரால் அழைக்கப்பட்டார்கள் என்றால் அவரது நிலைமை வேறு. உலக நியதிக்கு மாறாக தந்தையின்றி அற்புதமாக பிறந்தவர் ஈசா (அலை) அவர்கள், அவரது தாய் கண்ணியமானவர் என்பதை தனது தொட்டில் பருவத்திலேயே பேசி உலகத்திற்கு புரியவைத்தார். திருமறையே இவரது தாயின் கண்ணியத்திற்கு உலகம் அழியும் காலம் வரை தகுந்த சாட்சியாக விளங்குகிறது. 

மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார், நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.  (66:12)

அற்புதப் பிறப்பு

(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,  (19:16)

அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.  (19:17)

(அப்படி அவரைக் கண்டதும்,) "நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)" என்றார்.  (19:18)

"நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்.  (19:19)

அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார்.  (19:20)

"அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார்.  (19:21)

அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார் பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.  (19:22)

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது "இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா" என்று கூறி(அரற்றி)னார்.  (19:23)

(அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து "(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்" என்று அழைத்து கூறினான்.  (19:24)

"இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.  (19:25)

"ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்" என்று கூறும்.  (19:26)

பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!"  (19:27)

"ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்).  (19:28)

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; "நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கூறினார்கள்.  (19:29)

"நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.  (19:30)

"இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.  (19:31)

"என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.  (19:32)

"இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது.  (19:33)

இத்தகையவர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).  (19:34)

அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.  (19:35)

"நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்" (என்று நபியே! நீர் கூறும்).  (19:36)

தொட்டிலில் உரையாடியவர்
நபி ஈசா (அலை) அவர்கள் தொட்டில் பருவத்தில் மக்களிடம் உரையாடியதைப் போன்று யூத மத குருவான ஜுரைஜ் என்பாரின் காலத்தில் வாழ்ந்த ஒரு குழந்தையும், இஸ்ரவேலர்களிலுள்ள ஒரு பெண்ணின் குழந்தையும் தொட்டில் பருவத்திலேயே மக்களிடம் உரையாடியுள்ளார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை.
(ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். 
(மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் 'ஜுரைஜ்' என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) 'அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?' என்று கூறினார்கள். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், 'இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல், மரணிக்கச் செய்யாதே!" என்று கூறிவிட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தம் ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். எனவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு 'இது ஜுரைஜுக்குப் பிறந்தது' என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரின் ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூச் செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, 'குழந்தையே! உன் தந்தை யார்?' என்று கேட்டார். அக்குழந்தை, '(இன்ன) இடையன்" என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்த அந்த மக்கள், 'தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்" என்று கூறினார்கள். அதற்கு அவர், 'இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்" என்று கூறிவிட்டார். 

(மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். உடனே, அவள், 'இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு" என் மகனை இவனைப் போல் ஆக்கு" என்று பிரார்த்தித்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, 'இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே" என்று கூறியது பிறகு அவளுடைய மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது - பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், 'இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே" என்று கூறினாள். உடனே, அக்குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு, 'இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு" என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), 'ஏன் இப்படிச் சொல்கிறாய்?' என்று கேட்டதற்கு அக்குழந்தை, 'வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) 'நீ திருடிவிட்டாய்; விபசாரம் செய்துவிட்டாய்' என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை" என்று பதிலளித்தது. புஹாரி 3436  

ஈசா (அலை) அவர்களின் தோற்றம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" 
(மிஅராஜ் இரவில்) நான் ஈசா(அலை), மூஸா(அலை), இப்ராஹீம்(அலை) ஆகியோரைப் பார்த்தேன். ஈசா(அலை) அவர்கள் சிவப்பு நிறமுடையவர்களாகவும் சுருள் முடியுடையவர்களாகவும் அகன்ற மார்புடையவர்களாகவும் இருந்தார்கள். மூஸா(அலை) அவர்களோ மாநிறமுடையவர்களாகவும், உயரமானவர்களாகவும், படிந்த, நெருங்லான முடியுடையவர்களாகவும் சூடானிய இனத்தவர்களில் ஒருவரைப் போன்று (நீண்டு மெலிந்தவர்களாகவு)ம் இருந்தார்கள்.   புஹாரி 3438

ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதம்
(முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.  (5:46)

இயேசு என்ற ஈஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹுவால் அருளப்பட்ட இன்ஜீல் இப்போதுள்ள பைபிள் அல்ல. இது இயேசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய செய்தியாகும். இன்ஜீல் என்பது இயேசு எனும் ஈஸா நபியிடம் அல்லாஹ் உரையாடியதாகும்.

பைபிள் புதிய ஏற்பாட்டிலும் "ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை இயேசு பிரசங்கித்தார்" என்று கூறப்பட்டுள்ளது. அந்த ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் இன்று கிருஸ்துவர்களிடம் இல்லை. "இன்ஜீலுக்குரியவர்கள் அதன்படி தீர்ப்பளிக்கட்டும்" (அல் குர்ஆன் -5:47) என்று குர்ஆன் கூறுவதால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இன்ஜீல் இருந்ததை அறியலாம். அதன் பிறகு அது மறைக்கப்பட்டுவிட்டது என்றே கருத வேண்டும்.

மேலும் பைபளில் உள்ள குளறுபடியை காண்க கீழே சொடுக்காவும்.
இதுதான் பைபிள்
கிறிஸ்தவம் பார்வை
இஸ்லாமிய இணைய பேரவை
அபூமுஹை
ஏகத்துவம்
முஹம்மத் அர்ஷாத் அல் அதரி பிளாக்
தமிழ் பைபிள் பாருங்க

இஸ்ரவேலர்களின் தூதர் ஈஸா (அலை)
இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்கள் சமுதாயத்திற்கு மாத்திரமே தூதராக அனுப்பப்பட்டார்கள். இவருக்கு பிறகு உலகம் அழியும் காலம் வரை உலக மக்கள் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டவர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவார்கள்.

மர்யமின் குமாரர் ஈஸா, "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள்.  (61:6)

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அஹ்மத் என்ற பெயரும் உண்டு.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது - புகழப்பட்டவர் - ஆவேன். நான் அஹ்மத் - இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ - அழிப்பவர் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ - அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஷிர் - ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆம்ப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன். புகாரி 3532

தவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதங்களில் முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு இருந்ததை யூதர்கள் நன்கு அறிவார்கள்.


பைபிளில் நபிகள் நாயகம் பற்றிய முன்னறிவிப்பை பார்க்க கீழே சொடுக்கவும்.

மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதினா வருவார்கள் என்பதைத் தங்கள் நபிமார்களிடமிருந்து அறிந்து வைத்திருந்த யூதர்கள் தமது அன்றைய தாயகமான எகிப்து, பாலஸ்தீன் பகுதியிலிருந்து மதீனா வந்தனர். முஹம்மது நபி வந்த போது அவர்களை முதலில் ஏற்ப்பவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இங்கே வந்து குடியேரிவர்களின் வாரிசுகளோ, முஹம்மது நபி வந்த போது அவர்களை இறைத்தூதர் என்று அறிந்து கொண்டே மறுத்தனர். தமது பதவி செல்வாக்குப் போய்விடும் என்பதே அதற்குக் காரணம்.

இன்றைய கிருத்துவ சமுதாயமோ இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்ட இயேசு என்ற ஈஸா (அலை) அவர்கள் உலகமக்கள் அனைவர்க்கும் அனுப்பப்பட்டதை போன்று இஸ்ரவேலர் அல்லாதவர்களையும் இயேசுவை நோக்கி வருமாறு அழைக்கின்றார்கள். இயேசு இஸ்ரவேலர்களுக்கு மட்டும்தான் அனுப்பபட்டார் என்பதற்கு கிருத்துவர்கள் இன்று தங்களது வேதமாக நம்பும் பைபிளிலும் சான்று உள்ளது.

….இஸ்ராயீலின் மக்களுக்கு (இயேசுவை) ஒரு தூதராகவும் (அனுப்புவான் என்றும் கூறினான்)’- அல் குர்ஆன்(3:49)

இந்த அல் குர்ஆன் வசனத்தினை பின் வரும் பைபிள் வசனங்கள் தெள்ளத் தெளிவாக உண்மைப் படுத்துகின்றன. இதோ உங்கள் கவனத்திற்கு: -

‘காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார்.’ – மத்தேயு (15:24)
‘இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.’ – மாற்கு (12:29)

ஆக இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களில் ஈஸா (அலை) அவர்களும் ஒருவர். இவர் அனுப்பப்பட்ட காரணங்களில் ஒன்று இஸ்ரவேலர்களுக்கு முன்பு தடை செய்யப்பட்டு இருந்த சிலவற்றை இறைவனின் அனுமதியின் பேரில் இவர் ஆகுமாக்கினார்.


"எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்;, ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்."  (3:50)

"நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்."  (3:51)
ஈஸா (அலை) அவர்களின் சீடர்கள்
கிருத்துவ சமுதாயம் இயேசு அவர்களுக்கு பதினோரு சீடர்கள் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர்  தான் இயேசுவை எதிரிகளிடம் காட்டிகொடுத்ததாகவும் கூறுகிறது. ஆனால் இஸ்லாமோ ஈஸா (அலை) அவர்களின் தோழர்கள் நல்லவர்கள். ஈஸா (அலை) அவர்களுக்கு பெரிதும் உறுதுணையாக விளங்கியவர்கள் என்றும் பெருமைப் படுத்துகின்றது.

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர்.  (3:52)

"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)  (3:53)

ஈஸா (அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள்
அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.  (5:110)

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்).  (3:49)

பொதுவாகக் கிருத்துவர்கள் அனைவரும் ஈஸா (அலை) அவர்களை 'இறைவன்' என்று கூறுவதற்கு. "அவர் இறந்தோரை உயிர்பித்தார்; பிறவியிலேயே கண்பார்வை இழந்தவரையும் தொழுநோயாளியையும் இதர நோயாளிகளையும் குணப்படுத்தினார்; மறைவான செய்திகளை எடுத்துரைத்தார்; களிமண்ணில் பறவை பொம்மையைச் செய்து அதில் அவர் ஊதினால் உடனே (உயிருள்ள) பறவையாக அது மாறிவிடும்" என்பனவற்றை ஆதாரமாகக் காட்டுகின்றனர். உண்மையில் இவையனைத்தும் அல்லாஹுவின் ஆணையின் பேரில் நடந்தன. ஈஸ்சவை மக்களுக்கு ஒரு சான்றாக ஆக்குவதற்காக அல்லாஹுதான் இவற்றை அவர் மூலம் நிகழ்த்திக் காட்டினான்.

அல்லாஹ் ஒவ்வொரு நபியையும் அந்தந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஏற்ற அற்புதங்களைச் செய்துகாட்டுபவர்களாகவே அனுப்பினான். அந்த வகையில் இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களது காலத்தில் சூனியக் கலை பரவலாக இருந்தது.அந்தச் சமூகத்தில் சூனிய்யக்காரர்களுக்கு மரியாதை இருந்தது.

எனவே, பார்வைகளைக் கட்டிப் போடுகிற, சூனிய்யக்காரர்களையே திகைக்கவைக்கிற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும் ஆற்றலை மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கி அல்லாஹ் அனுப்பிருந்தான். அந்த அற்புதங்கள் யாவும் அடக்கியாளும் அல்லாஹுவிடமிருந்து அவருக்குக் கிடைத்தவைதாம் என்பதை மக்கள் உறுதியாக நம்பியபோது, இஸ்லாத்தில் இணைந்தனர். அல்லாஹுவின் நல்லடியார்களில் அவர்களும் சேர்ந்து கொண்டனர்.

அவ்வாறே மருத்துவர்கள் மற்றும் இயற்பியலாளர்கள் நிறைந்த காலத்தில் ஈஸா (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பெற்றார்கள். மார்க்கத்தை வழங்கிய அல்லாஹுவால் பலப்படுத்தப்பட்டவரைத் தவிர வேறு யாரும் நெருங்கக்கூட முடியாத பேரற்புதங்களை ஈஸா (அலை) அவர்கள் கொண்டுவந்தார்கள். உயிரற்ற பொருளுக்கு உயிர் கொடுத்தார்கள். பிறவிலேயே கண்பார்வை இழந்தவரையும் தொளுநோயாளியேயும் குணப்படுத்தினார்கள். சவக் குழியில் மறுமை நாள்வரை கிடக்க வேண்டிய பிரேதத்திற்கு உயிர் கொடுத்து எழுப்பினார்கள். இதற்கான சக்தி ஒரு சாமானிய வைத்தியனுக்கு எங்கிருந்து கிடைக்கும்?

அதைப் போன்றே, முஹம்மது (ஸல்) அவர்கள் செம்மொழியாலர்களும் இலக்கியவாதிகளும் வாழ்ந்த காலத்தில் நபியாக அனுப்பப்பெற்றார்கள்.  கவிஞர்களின் செம்மொழிகள் அப்போது பெயர் பெற்று விளங்கின. ஆகவே, ஓர் அற்புதமான இறைவேதத்தை மக்களிடம் அவர்கள் கொண்டு வந்தார்கள். அந்தக் குர்ஆனைப் போன்றதொரு வேதத்தையோ, அல்லது அதிலுள்ளதைப் போன்ற பத்து அத்தியாயங்களையோ, அல்லது அதைப் போன்ற ஓர் அத்தியாயத்தையோ கூட உருவாக்குவதற்காக எல்லா மனிதர்களும் ஜின்களும் ஒன்றுதிரண்டாலும் அவர்களால் ஒருபோதும் அது முடியாது. அவர்களில் சிலர் வேருசிலருக்குத் துணை புரிந்தாலும் சரியே! அது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹுவின் உரையாகும்; அது படைபினங்களின் உரைக்கு ஒரு போதும் நிகராகாது என்பதே இதற்குக் காரணமாகும்.

ஆக அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதற்காக ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்று கூறுவதானால்; செங்கடலை இரண்டாகப் பிளந்த மூஸா (அலை) அவர்கள் (மோசஸ்),  சந்திரனை இரண்டாகப் பிளந்த இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) ஆகியோரையும் அவ்வாறு கூற வேண்டும், இவர்களெல்லோரும் தாம் இறைத்தூதர்தாம் என்பதைப் பாமர மக்களுக்குப் புரியவைப்பதற்காக அல்லாஹுவின் பேருதவியால் செய்து காட்டிய அற்புதங்களே இவை. எனவே, இவர்கள் மனிதர்களே தவிர கடவுளர்கள் அல்லர்.

இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) ஆகியோரையும் அவ்வாறு கூற வேண்டும். இவர்களெல்லோரும் தாம் இறைதூதர்தாம் என்பதைப் பாமர மக்களுக்குப் புரியவைப்பதற்காக அல்லாஹுவின் பேருதவியால் செய்து காட்டிய அற்புதங்களே இவை. எனவே, இவர்கள் மனிதர்களே தவிர, கடவுளர்கள் அல்லர்.

அதைப் போன்றே கிருத்துவர்கள் ஈஸா இறைவனின் குமாரர் என்பதற்கு, அவருக்குத் தந்தை யாருமில்லை அது மட்டுமின்றி, மனித சமுதாயத்தில் யாருமே செய்திராத வகையில் மழலைப் பருவத்தில் அவர் பேசினார் என்பதையெல்லாம் சான்றாகக் கூறுகின்றனர்.

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் 'குன்' (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.  (3:59)

அல்லாஹுவின் ஆற்றலைப் பொறுத்தவரையில், தந்தையில்லாமல் படைக்கப் பெற்ற ஈஸா (அலை) அவர்களின் நிலை, ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் நிலையைப் போன்றதே! ஆதம் (அலை) அவர்களை தாயும் தந்தையும் இல்லாமலேயே அல்லாஹ் படைத்தான்.

இன்னும் சொல்வதானால், ஆதமை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்தான். பின்பு அவரை நோக்கி 'ஆகுக' என்றான். உடனே அவர் ஆகிவிட்டார். எனவே, ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களைத் தாயும் தந்தையுமின்றி படைத்த இறைவன், தந்தையின்றி ஈஸா (அலை) அவர்களைப் படைப்பதற்குத் தாரளமாக ஆற்றல் பெற்றவன் ஆவான். தந்தையின்றிப் படைக்கப்பெற்ற்வர் என்பதால் ஈஸா (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என்று வாதிடுவதானால், அதனினும் கூடுதலாக ஆதம் (அலை) அவர்களை அவ்வாறு வாதிக்க வேண்டிவரும். அந்த ஆதம் (அலை) அவர்களையே அல்லாஹுவின் மைந்தர் என்று கூறுதல் தவறு என்பது அனைவரும் அறிந்த விஷயம். அப்படியிருக்க, ஈஸா (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என்று வாதிப்பது வெளிப்படையான தவறல்லவா?

ஆதம் (அலை) அவர்களை ஆண் மற்றும் பெண்ணின் துணையின்றி அல்லாஹ் படைத்தான். அவருடைய துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களைப் பெண்ணின் துணையின்றி ஓர் ஆணிலிருந்து மட்டுமே படைத்தான். ஈஸா (அலை) அவர்களை ஆண்  துணையின்றி ஒரு பெண்ணிலிருந்து படைக்கின்றான். இதன் மூலம் தனது ஆற்றலைத் தான் படைப்புகளுக்கு வெளிப்படுத்திக் காட்டவேண்டும் என்பதே இறைவனின் நோக்கமாகும்.

இதனாலேயே மற்றொரு வசனத்தில் "அவரை (ஈஸாவை) மக்களுக்கு ஒரு சான்றாக நாம் ஆக்குவதற்காக " (19:21) என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் குமாரன் இல்லை என்பதை எளிய முறையில் விளங்க கீழே சொடுக்கவும்.
இயேசு இறைமகனா?

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

இன்ஷா அல்லாஹ் தொடரும்.......................................................................

Monday, April 26, 2010

லூத் (அலை) அவர்களின் சமுதாயம் அழிக்கப்பட்ட வரலாறு

நபி இப்றாஹீம் (அலை) அவர்களை தொடர்ந்து ஒரு நபியைக் குறிப்பிடுவதாக இருந்தால் லூத் (அலை) அவர்களைத் தான் குறிப்பிட வேண்டும்.ஏனெனில் இந்த இருவரும் ஒரே காலத்தில் வெவ்வேறு இடங்களுக்கு இறைதூதர்களாக அனுப்பட்டார்கள்.

லூத் (அலை) அவர்களின் சமுதாயம் அழிக்கப்பட்டது ஏன்?
லூத் (அலை) அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் சகோதரர் புதல்வர் ஆவார். விவிலியம் பழைய ஏற்பாட்டில் லோத்து எனும் பெயரில் அவர்கள் குறிப்பிடபட்டுள்ளர்கள்.


நபி லூத் (அலை) அவர்கள் கிழக்கு ஜோர்டானில் உள்ள சதூம் (சோதோம்) பகுதி மக்களை நல்வழிபடுத்த அனுப்பப்பெற்றார்கள். அந்த மக்கள் செய்துவந்த குற்றங்களை எதிர்த்து அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். அந்த மக்களிடம் இருந்து வந்த கெட்ட பழக்கங்களில் முதன்மையானது ஓரினச் சேர்க்கை (SODOMY).

அதற்கு முன்புவரை இந்தப் பழக்கம் மனித சமுதாயத்தில் இருந்ததில்லை. சதூம் வாசிகளிடையே தான் இந்தப் பழக்கம் முதன் முதலில் தோன்றியது. இதை எதிர்த்து லூத் (அலை) அவர்கள் கடுமையாகப் போராடினார்கள். தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்கள். (எய்ட்ஸ் நோய் உருவாக ஓரினச் சேர்க்கையும் காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

லூத் (அலை) அவர்களின் பிரச்சாரத்தை ஏற்க மறுத்து அந்த மக்கள் மேலும் மேலும் அந்த தீமையைச் செய்யலானார்கள். இதனால் கோபம் கொண்ட இறைவன் வானவர்களை அனுப்பி அந்த சமுதாயத்தை அழித்தான்.

மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?"  (7:80)


"மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."  (7:81)


நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.  (7:82)


எனவே, நாம் அவரையும், அவருடைய மனைவியைத்தவிர, அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின் தங்கி விட்டாள்.  (7:83)


இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.  (7:84)


அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்; "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று கூறியபோது,  (26:160)


"நிச்சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.  (26:161)


"ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.  (26:162)


"மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவிலலை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.  (26:163)


"உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்ட நோக்கோடு) நெருங்குகின்றீர்களா?  (26:164)


"இன்னும், உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவிமார்களை விட்டு விடுகிறீர்கள்; இல்லை, நீங்கள் வரம்பு கடந்த சமூகத்தாராக இருக்கின்றீர்கள்."  (26:165)


அதற்கவர்கள்; "லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்" எனக் கூறினர்.  (26:166)


அவர் கூறினார்; "நிச்சயமாக நான் உங்கள் செயல்களைக் கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறேன்.  (26:167)


"என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!" (எனப் பிரார்த்தித்தார்.)  (26:168)


அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும்பத்தாரையும் யாவரையும் காத்துக் கொண்டோம்.  (26:169)


(அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கிவிட்ட கிழவியைத் தவிர  (26:170)


பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.  (26:171)


இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.  (26:172)


நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.  (26:173)


மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.   (26:174)

லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தை அழிக்க வந்த வானவர்கள் அழகிய ஆண்களின் தோற்றத்தில் இருந்ததன் காரணத்தால் அவர்களையும் அந்த சமுதாயத்திலுள்ள ஆண்கள் தகாத உறவுக்கு அழைத்தனர்.

லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தை அழிக்க வந்த இந்த வானவர்கள் முதலில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நற்செய்தி கூறிவிட்டு பின்னர் லூத்துடைய ஊரை நோக்கிப் புறப்பட்டனர். இதுபற்றி திருமறை பின்வருமாறு எடுத்தியம்புகிறது!

மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; "நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.  (29:28)


நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிராயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்" என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்; "நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீருhக" என்பது தவிர வேறு எதுவுமில்லை.  (29:29)


அப்போது அவர்; "என் இறைவனே! குழப்பம் செய்யும் இற்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.  (29:30)


நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, "நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்" எனக் கூறினார்கள்.  (29:31)


"நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே" என்று (இப்றாஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.  (29:32)


இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் 'நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்' என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.  (29:33)


நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.  (29:34)


(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்.  (29:35)
"(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?" என்று (இப்றாஹீம்) கேட்டார்.  (15:57)


அதற்கவர்கள், "குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.  (15:58)


"லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.  (15:59)


ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்" என்று (வானவர்கள்) கூறினார்கள்.  (15:60)


(இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.  (15:61)


(அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்" என்று (லூத்) சொன்னார்,  (15:62)


(அதற்கு அவர்கள்,) "அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;  (15:63)


(உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.  (15:64)


ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.  (15:65)


மேலும், 'இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்'.  (15:66)


(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.  (15:67)


(லூத் வந்தவர்களை நோக்கி;) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;"  (15:68)
"
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்" என்றும் கூறினார்.  (15:69)


அதற்கவர்கள், "உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?" என்று கேட்டார்கள்.  (15:70)


அதற்கவர், "இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்" என்று கூறினார்.  (15:71)


(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.  (15:72)


ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது.  (15:73)


பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.  (15:74)


நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.  (15:75)


நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது.  (15:76)


திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது.  (15:77)


(இது கேட்டு) இப்றாஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.  (11:74)


நிச்சயமாக இப்றாஹீமை சகிப்புத் தன்மை உடையவராகவும், (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.  (11:75)
"
இப்றாஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது - மேலும், அவர்களுக்குத் தவிர்க்கமுடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும்.  (11:76)


நம் தூதர்கள் (வானவர்கள்) லுத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சரங்கியவராக் "இது நெருக்கடி மிக்க நாளாகும்" என்று கூறினார்.  (11:77)


அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.  (11:78)


(அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள்.  (11:79)


அதற்கு அவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே" என்று (விசனத்துடன்) கூறினார்.  (11:80)


(விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்; "மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?"  (11:81)


எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.  (11:82)


அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன் (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.  (11:83)

லூத் நபியின் சமுதாயத்தை அல்லாஹ் பல கோணத்தில் அழித்துள்ளான். பேரிடி முழக்கத்தோடு, சுடப்பட்ட செங்கற்களை மழை போல் பொழிய வைத்து, அந்த ஊரின் மேல்தட்டைக் கீழ்த் தட்டாக்கி தழைகீழாகப் புரட்டி அழித்ததோடல்லாமல் அந்த சமுதாய மக்களின் கண்களையும் குருடாக்கினான்.


அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். "என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்" (என்றும் கூறினோம்).  (54:37)


எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.  (54:38)

லூத் (அலை) அவர்களைப் பற்றிய வரலாற்று குறிப்புகள் இத்துடன் முடிவடைகிறது. லூத் (அலை) அவர்களின் சமுதாய மக்கள் ஆரம்பித்து வைத்த இந்த ஓரினச் சேர்க்கை இன்றைய சமுதாய மக்களிடமும் காணக்கிடக்கின்றன. இந்த தீமையைச் செய்த லூத் நபியின் சமுதாயம் இறைவனின் கோபத்திற்க்குள்ளாகி எந்தளவிற்குக் கொடூரமாக அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மையைச் சிந்தித்தாவது இந்த மாபெரும் தீமையிலிருந்து நமது சமுதாயம் தன்னைத் தற்காத்து கொள்ளவேண்டும். ஓரினச் சேர்க்கை, விபச்சாரத்தை விடவும் கொடூரமாக வர்ணிக்கப்படுகிறது.

இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் எவரேனும் நபி லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் செயலைக் கண்டால் செய்பவனையும், செய்யப்படுபவனையும் கொன்றுவிடுங்கள்.                             முஸ்னத் அஹ்மத் - 6565

Wednesday, April 21, 2010

கப்ரு ஜியாரத் செய்யும் பெண்கள்

இஸ்லாத்தின் ஆரம்பக்காலக் கட்டங்களில் கப்ருகளுக்கு ஜியாரத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் முழுமையாகத் தடுத்திருந்தார்கள். பின்னர் ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஓரளவு விளங்கிக் கொண்டதும் அவர்களை கப்ருகளை ஜியாரத் செய்யுமாறு கூறினார்கள். அதுவும் ஆண்களுக்குத் தான். பெண்கள் ஜியாரத் செய்வது குறித்து எச்சரித்து, அவ்வாறு செய்யும் பெண்களை சபிக்கவும் செய்தார்கள்.

“கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் : திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத் மற்றும் இப்னு ஹிப்பான்.

ஜியாரத் செய்வதின் நோக்கம்:-
கப்ருகளில் ஜியாரத் செய்யக்கூடிய ஆண்களின் நோக்கம் மறுமையைப் பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்காக மட்டுமே இருக்கவேண்டும்.
http://i47.tinypic.com/2dluteh.jpg“கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள், நிச்சயமாக அது உலகப் பற்றை நீக்கும், மறுமையை நினைவு படுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரி, நூல் : அஹ்மது.

கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் செய்யவேண்டிய துஆ:-
“முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே!” அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.

“முஃமினான, முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ், நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகவாழ்வைக் கேட்கிறோம்” அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அஹ்மது, இப்னு மாஜா.

ஜியாரத் செய்யும் போது கவனிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்கப்பட வேண்டியவைகள்: -

    * கப்ரு தரைக்கு மேல் உயர்த்தப்பட்டதாக இருக்கக்கூடாது
    * பூசி, மெழுகிய கட்டடமாக இருக்கக்கூடாது
    * கப்ரில் அழுது புலம்புவது கூடாது
    * கப்ரில் உள்ளவர்களிடம் நமது தேவைகளைக் கூறி பிரார்த்திக்கக் கூடாது
    * கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆவைச் செய்யவேண்டும்
    * இஸ்லாத்திற்கு மாற்றமான எந்தக்காரியங்களையும் செய்யக்கூடாது

தர்ஹாக்களுக்கு ஜியாரத் செய்யச் செல்லலாமா?
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஜியாரத் செய்ய அனுமதி வழங்கியபோது இறந்தவர்களை அடக்கம் செய்யப்படும் இடங்களுக்குச் சென்று அங்கு தான் ஜியாரத் செய்ய அனுமதித்தார்களே தவிர கப்ருகளில் கட்டங்கள் கட்டி, பூசி, மெழுகி இஸ்லாத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லச் சொல்லவில்லை. இது போன்ற இடங்களுக்குச் சென்று வருவது நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறுபவர்களுக்குத் துணைபோவது போலாகும் என்பதை பின்வருபவைகள் விளக்குகின்றது.

கப்ருகளை வணங்குவதும், அதனிடம் கையேந்தி நிற்பதும் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே இருந்துவரும் பழக்கமாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு முன்னால் வாழ்ந்த நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் கப்ருகளில் கட்டடம் எழுப்பி, இன்று நம்மவர்கள் தர்ஹாக்களில் செய்வதைப் போல அதில் விளக்கு ஏற்றி, அதை பூசி, மெழுகி பூஜை போன்ற சடங்குகள் செய்து அவர்களின் நினைவு நாட்களில் திருவிழாக்கள் (கந்தூரிகள்) நடத்தி வந்தனர்.

கற்களையும், சிலைகளையும், கப்ருகளையும், இறந்தவர்களையும் வழிபடும் மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றி சத்தியத்தின் அறிவு என்னும் ஒளியை பரப்ப வந்த நபி (ஸல்) அவர்கள், கப்ருகளின் மேல் கட்டடங்கள் (தர்ஹா, மஸ்ஜிதுகள்) எழுப்பி, அதில் விளக்கு ஏற்றி, பூசி, மெழுகி, கந்தூரி நடத்துபவர்களைக் கடுமையாக சபித்ததோடல்லாமல் அந்த உயர்த்தப்பட்ட கப்ருகளை அலி (ரலி) அவர்கள் மூலமாக இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். இதுபற்றி நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் அடங்கிய ஹதீஸ்கள் சிலவற்றைக் காண்போம்.

அவ்லியாக்களின் கப்ருகளில் மஸ்ஜிதைக் கட்டுபவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள்:-
ஹதீஸ் ஆதாரம்:- யஹுதிகளையும், நஸாரக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக்கொண்டனர் (நூல் : புகாரி)

அவ்லியாக்களின் கப்ருகளில் தர்ஹாக்களை எழுப்புபவர்கள் அல்லாஹ்வின் படைப்பினங்களிலேயே மிகவும் கெட்டவர்கள் ஆவார்கள்:-

ஹதீஸ் ஆதாரம்:- அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்வர்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் புகாரி மற்றும் முஸ்லிம்.

அவ்லியாக்களின் கப்ருகளில் சந்தனம் போன்றவற்றைப் பூசக்கூடாது:-
ஹதீஸ் ஆதாரம்-1:- கப்ருகள் பூசப்படுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தனர் அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதார நூல்கள் : அஹ்மத், முஸ்லிம், நஸயீ மற்றும் அபூதாவுத்.

ஹதீஸ் ஆதாரம்-2:- கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படுவதையும் அவற்றின் மீது கட்டடம் (தர்ஹா) எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர் அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதார நூல் : திர்மிதி.

அவ்லியாக்களின் கப்ருகளில் கந்தூரி விழாக்கள் நடத்தக்கூடாது:-
ஹதீஸ் ஆதாரம்:- எனது கப்ரை (கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். அது என்னை வந்தடையும் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.

அவ்லியாக்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கக்கூடாது:-
ஹதீஸ் ஆதாரம்-1 :- யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

ஹதீஸ் ஆதாரம்-2 :- உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளையும், நல்லடியார்களின் கப்ருகளையும் வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். அறிந்து கொள்க! கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிவிடாதீர்கள்! அதை நான் தடுக்கிறேன் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி), நூல் : முஸ்லிம்.

தர்ஹாக்களைக் கட்டுபவர்கள் வேண்டுமானால் நாங்கள் அவ்லியாக்களை வணங்குவதற்காக கட்டவில்லை என்று கூறலாம். ஆனால் இவைகள் எல்லாம் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்கள் என குர்ஆனும், ஹதீஸும் கூறுகிறது: -

    * நேர்ச்சை ஒரு வணக்கமே, அதை அல்லாஹ்வுக்கு மட்டுமே           செய்யவேண்டும் (2:265)
    * பிரார்த்தனை (துஆ) ஒரு சிறந்த வணக்கமாகும் (72:18, 2:186, 3:135, 27:62)
    * முறையிடுதல், மன்றாடுதல் மற்றும் உதவி தேடுதல் ஒரு வணக்கமாகும் (1:4 மற்றும் திர்மிதி)
    * அறுத்துப்பலியிடுதல் ஒரு வணக்கமாகும் (6:162, 108:2 மற்றும் முஸ்லிம்)
    * பயபக்தியும் ஒரு வணக்கமாகும் (2:197, 2:2, 2:194)
    * பேரச்சமும் ஒரு வணக்கமாகும் (2:40, 2:150, 2:223, 2:231)

இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய வணக்கங்களான இவைகள் அனைத்தும் அந்த தர்ஹாக்களில் நடைபெறுவதால் அதுவும் வணங்குமிடமாகவே உள்ளது.

அவ்லியாக்களின் கப்ருகளின் மீதுள்ள கட்டடங்களை தரைமட்டமாக்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டாகள்:-

ஹதீஸ் ஆதாரம்:- உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள் என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ் அல் அஜதி (ரலி), நூல்கள் : அபூதாவுத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்.

எனவே சகோதர சகோதரிகளே, நபி (ஸல்) அவர்களால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள கப்ருகளில் கட்டடம் எழுப்பி அதில் செய்யப்படும் அனாச்சாரங்கள் எப்படியோ இஸ்லாத்தின் எதிரிகளால் நமது மார்க்கத்தில் புகுத்தப்பட்டுவிட்டது. இஸ்லாத்தைப் பற்றி மார்க்கம் போதிக்கும் தவ்ஹீது பற்றிய போதிய தெளிவு இல்லாத பாமர முஸ்லிம்ள் இதில் ஈடுபட்டு, இறைவனிடமிருந்து என்றுமே மன்னிப்பு கிடைக்காத இணை வைத்தல் என்னும் கொடிய பாவத்தைச் செய்த குற்றவாளியாகின்றனர். அல்லாஹ் நம் அனைவரையும் இதுபோன்ற செயல்கள் புரிவதிலிருந்து காப்பாற்றி நமது பாவங்களை மன்னித்து, அவனுடைய நல்லடியார்கள் வாழ்ந்து சென்ற நேரான வழியை நமக்கு காட்டி அருள் புரிவானாகவும். ஆமின்.

Tuesday, April 20, 2010

விரிவடையும் பிரபஞ்சம்

வானத்தை வலிமை மிக்கதாக படைத்;தோம்; நிச்சயமாக நாம் விரிவடைய செய்யும் ஆற்றலுடையவராவோம். (குர்ஆன் 51:47).
http://deadboywalking.files.wordpress.com/2008/08/266035main_hubble100k_hi.jpg
1400 வருடங்களுக்கு முன்னர் வானியல் என்றால் என்னவென்றே தெரியாத அக்காலப்பகுதியில் பிரபஞ்சம் விரிவடைந்து செல்வதை பற்றி அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'ஸமாஉ' என்ற சொல்லானது குர்ஆனின் பல இடங்களில் வெளி,பிரபஞ்சம் என்ற கருத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இவ்வசனத்திலும் அக்கருத்திலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது. அதாவது பிரபஞ்சம் விரிவடைந்து செல்கிறது எனும் கருத்தை தருகிறது. இது இன்றைய நவீன விஞ்ஞானம் கூறுகின்ற தீர்க்கமான முடிவாகும்.

'இன்னா ல மூசிஊனா' என்ற அரபு மூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு 'அதை நாமே உறுதியாக விரிவடைய செய்யும் ஆற்றலுடையவராவோம்' என்பதாகும். இது 'அவ்சா' - 'விரிவடைதல்' என்ற வினைசொல்லிருந்து வந்ததாகும். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 'லா' என்ற முற்சேர்க்கை பெருமளவு என்ற கருத்தை தருகிறது. இதனடிப்படையில் ';நாம் இந்த பிரபஞ்சத்தை பெருமளவு விரிவாக்கியுள்ளோம்'; என்பது இதன் கருத்தாகும்.

இந்த முடிவைதான் விஞ்ஞானம் இன்று அடைந்துள்ளது.

'பிரபஞ்சமானது ஒரு மாறா இயல்புடையதும் அறியமுடியாத ஆரம்பத்தைக் கொண்டதுவும் ஆகும்' என்பதே 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அன்றைய விஞ்ஞானம் ஏற்றுக்கொண்ட ஒரே கருத்தாக இருந்தது. எனினும், நவீன தொழிநுட்பங்களின் உதவியை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினதும் அவதானங்களினதும் முடிவானது, 'பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் இருந்தது, மேலும் அது தொடர்சியாக விரிவடைந்து செல்கிறது' என்பதாகும்.

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்ய பௌதீகவியளாளர் அலெக்ஸான்டர் பிரீட்மேன் (Alexander Friedmann) என்பவரும் பெல்ஜிய பிரபஞ்சவியலாளரான ஜோர்ஜஸ் லேமாட்ரே ( Georges Lemaître) என்பவரும் 'பிரபஞ்சம் தொடர்ச்சியான இயக்கத்தை கொண்டுள்ளதுடன் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது' என்ற கருத்தை கோட்பாடடாக முன்வைத்தனர்.
[Is-the-Universe-Really-Expanding-2.jpg]
இவ்வுண்மையானது 1929ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு அவதானிப்புத் தரவுகள் ( Observation) மூலம் உறுதிசெய்யப்பட்டது. அமேரிக்க வானியலாளரான எட்வின் ஹப்ள் (Edwin Hubble) தொலைநோக்கியினூடாக வானை அவதானித்த போது நட்சத்திரங்களும், பால்வெளி மண்டலங்களும் (galaxies) தொடர்ச்சியாக ஒன்றினிலிருந்து மற்றயது விலகி செல்வதை கண்டுபிடித்தார் இக் கண்டுபிடிப்பு வானியல் வரலாற்றில் பெரும் திருப்பு முனை என்று கருதப்படுகிறது.

இவ்வாறு ஹப்பிள் அவதானித்து கொண்டிருந்த போது நட்சத்திரங்களிலிருந்து சிகப்பு நிற ஒளி வருவதை கண்டார். இதற்கு காரணம் வான் பொருளிலிருந்து பார்வை புள்ளியை நோக்கி வரும் ஒளி ஊதா (violet) நிறமாக இருந்தால் அப்பொருள் அப்புள்ளியை நோக்கி வருகிறது என்றும், பார்வை புள்ளியை நோக்கி வரும் ஒளி சிகப்பு (RED) நிறமாக இருந்தால் அப்பொருள் பார்வை புள்ளியை விட்டும் விலகி செல்கிறது என்பது பௌதீகவியலின் பொதுவான விதியாகும். ஹப்பிள் அவரது அவதானிப்பின் போது நட்சத்திரங்களிலிருந்து சிகப்பு நிறம் வருவதை கண்டறிந்தார்.

நட்சத்திரங்களும் பால்வெளிமண்டலங்களும் எம்மை விட்டு மட்டும் விலகி செல்லவில்லை. மாறாக அவை ஒன்று மற்றயதிலிருந்தும் விலகி செல்கிறது. சுருங்க சொல்வதாயின், நட்சத்திரங்கள் மென்மேலும் விலகி செல்கின்றன.

பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் ஏனைய பொருளிலிருந்து விலகி செல்கிறது என்பதன் கருத்து பிரபஞ்சம் விரிவடைந்து செல்கிறது என்பதாகும். தொடர்ந்து வந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புகள் (observations) பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைகிறது என்ற கருத்தை உறுதிப்படுத்தியது.

ஒரு சிறு உதாரணத்தை கொண்டு இதை நன்கு விளங்கி கொள்ளலாம். நாம் இந்த பிரபஞ்சத்தை காற்று ஊதப்படும் ஒரு பலூனோடு ஒப்பிடலாம். பலூன் மேலும் ஊதப்பட்டால் அதன் மேற்பரப்பிலுள்ள புள்ளிகள் ஒன்றிலிருந்து மற்றயது விலகி செல்லும். அதை போன்று பிரபஞ்சம் விரிவடையும் போது வானிலுள்ள பொருட்களும் ஒன்றிலிருந்து மற்றயது விலகி செல்கிறது. 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாக கருதப்படும் அல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) இந்நிகழ்வை கோட்பாட்டு ரீதியல் கண்டுபிடித்தார். இருப்பினும் அக்காலத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 'நிரந்தர பிரபஞ்ச திட்டத்' தோடு மோத விரும்பாததன் காரணமாக தனது கண்டுபிடிப்பை வெளியிடவில்லை. பிற்காலத்தில் இந்நிகழ்வை 'தனது வாழ்வின் பெரும் பிழை' என கூறி வருதப்பட்டார்.

தொலைநோக்கி என்றால் என்ன என் அறிந்திறாத காலத்தில்தான் குர்ஆன் இவ்வுண்மையைத் தெளிவுபடுத்தியது. ஏனெனில் குர்ஆன் இந்த முழுப் பிரபஞ்சத்தையும் படைத்து ஆளுகின்ற இறைவனின் திருவசனமாகும்.

Sunday, April 18, 2010

இறைதூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் வரலாறு


வலிமை மிக்க ஆது சமுதாயத்தின் அழிவிற்குப் பிறகு பல சமுதாயங்கள் இந்த புவியில் வந்து சென்றிருக்கலாம் என்றாலும் ஆது சமுதாயத்திற்கு அடுத்து அல்லாஹ் பெயர் குறிப்பிட்டுக் கூறும் சமுதாயம் ஸமூது சமுதாயமாகும். இவர்களும் ஆது சமுதாயத்தைப் போன்று சிலைகளை வணங்கக்கூடியவர் களாகவே இருந்தார்கள். இவர்களின் சமுதாயாதைச் சார்ந்த இவர்களது சகோதரரான நபி ஸாலிஹ்  (அலை) அவர்களயே இவர்களுக்கு இறைத்தூதராக அல்லாஹ் அனுப்பினான்.

ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை"  (7:73)
'ஆது' கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். (7:74) 

ஸமூது சமுதாயம் வாழ்ந்த இடம்.
இவர்கள் வாழ்ந்த இடத்தைப் பற்றி திருமறை குர்ஆன் குறிப்பிடுகையில் அவர்கள் ஹிஜ்ர் ஊர் வாசிகள் என்று குறிப்பிடுகிறது.
cave house of 
Samud people
]%J ($l;lj;jpdH) tho;e;j Fif tPLfs;
(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.  (15:80)

அல்லாஹ் குறிப்பிடும் இந்த ஹிஜ்ர் என்ற ஊர் தற்போதும் உள்ளதா? என்று ஆராயும் போது பின்வரும் வசனம் அதற்கான விளக்கத்தை தருகின்றது.

ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் (அதோ அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது.  (27:52)

அல்லாஹ் இந்த வசனத்தில் "அவர்கள் வீடுகள் இதோ பாழடைந்து கிடக்கின்றன" என்று குறிப்பிடுகிறான். அப்படியென்றால் இன்றளவும் அவர்கள் வாழ்ந்த இடம். வசித்த வீடுகள் ஆகியன மனிதனின் படிப்பினைக்காக அவன் அறியும் விதத்தில் அவன் கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் நபியவர்களின் பொன் மொழியை ஆராயும்போது ஸமூது கூட்டாத்தார் வசித்த ஹிஜ்ர் என்ற பகுதி மக்காவிற்கும் தபூக்கிற்கும் இடையே அமைந்திருக்ககூடிய பகுதியில் ஒரு பகுதியாகும் என்பதை அறியமுடிகிறது.

மக்கள் (தபூக் போரின்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான 'ஹிஜ்ர்' என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிடும்படியும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டு விடும்படியும் கட்டளையிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் - அலை- அவர்களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) எந்தக் கிணற்றிற்கு வந்து கொண்டிருந்தோ அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளும் படியும் உத்திரவிட்டார்கள்.  புகாரி 3379

நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்ற பொழுது, 'அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்குக் கிடைத்து விடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர நுழையதீர்கள்" என்று கூறினார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தம் போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள். புகாரி  3380  

மேற்கண்ட நபிமொழிகளின் மூலம் அவர்கள் வாழ்ந்த ஹிஜ்ர் என்ற பகுதி மக்காவிலிருந்து தபூக்கிற்குச் செல்லும் வழியில் இன்றளவும் உள்ளது என்பதையும் உலகம் அழியும் காலம் வரை வாழும் மக்களுக்குப் படிப்பினையாக அந்த இடம் இருக்கும் என்பதை  அறியமுடிகிறது.

தற்போதைய வரலாற்றுக் குறிப்பின்படி 'அல் ஹிஜ்ர்' என்பது வட சவூதியில் 'தைமா' வுக்கு தென் மேற்கே உள்ள ஓரிடத்தின் பெயராகும். இப்போது அதை 'மதாயின் ஸாலிஹ்' என அழைகின்றனர். நபி (ஸல்) அவர்கள் தபூக் போரின்போது அந்த இடத்தில தான் தங்கினார்கள் என்று ஆதாரப்பூர்வமாகக் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து பின்வரும் குறிப்பை தப்ஸீர் மாஜிதீயிலுருந்து அறிஞர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஸமூது என்பது வடமேற்கு அரேபியாவில் வாழ்ந்த ஒரு பழம் பெரும் சமூகத்தாரின் பெயராகும். ஹிஜ்ர் எனும் ஊர் அவர்களின் தலைநகராக விளங்கியது. அது இன்று மதாயினு ஸாலிஹ் என அழைக்கப்படுகிறது. ஆது சமூகத்தாருக்குப்பின் வாழ்ந்த இந்த கூட்டத்தார். கட்டடக் கலையில் சிறந்து விளங்கினர். கல் மாளிகைகள், மலைக்குகைக்குள் அமைத்து அவர்கள் வசித்து வந்தனர்.  ஸமூது கூட்டத்தாரை நல்வழிபடுத்த அவர்களில் ஒருவரான ஸாலிஹ் (அலை) அவர்களை நபியாக அனுப்பினான். விவிலியம் பழைய ஏற்பாட்டில் ஸாலிஹ் (அலை) அவர்களயே சாலா என்று குரிப்பிடப்ப ட்டிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். சினாய் தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஸாலிஹ் (அலை) அவர்களின் அடக்கத்தலம் உள்ளது.

செல்வச் செழிப்பு மிக்க சமூதாயம்.
ஸாலிஹ் நபியின் சமுதாயமான ஸமூது சமுதாயத்தினர் மிக மிக சுகபோகமாக வாழ்ந்தார்கள் என்று திருமறை குறிபிடுகிறது.

"தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்- (26:146)

"வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,  (26:147)

"மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்காளா?)  (26:148)

இன்னும் நினைவு கூறுங்கள்; 'ஆது' கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்" (என்றும கூறினார்).  (7:74)

சுக போகங்களில் மூழ்கித் திளைத்திருந்த இந்த  சமூதாயதிற்குத் தூதராக தேர்தெடுக்கப்பட்ட ஸாலிஹ் நபியும் அந்தச் சமூதாயத்தில் அந்தஸ்து மிகுந்தவர்களாகவே வாழ்ந்த்ஹு வந்தார்கள். இதனை அவர்களது சமூதாய மக்களே நாவுகளால் ஒப்புகொள்கின்றனர்.

"ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக் குரியவராக இருந்தீர்; (11:62)

ஸாலிஹ் (அலை) அவர்களின் பிரச்சாரம்.
ஸாலிஹ் (அலை) ஏகத்துவப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைப்பதற்கு முன்னால் அந்த மக்களிடத்தில் மிகுந்த செல்வாக்கு உடையவராகவே வாழ்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர்கள் தங்கள் பிரச்சாரப் பணியை மேற்கொள்ள வேண்டிய நபித்துவத்தை அல்லாஹ் வழங்கினான். அந்தச் சமயத்தில் சுகபோக வாழ்கையில் மூழ்கி இருந்த அவரது சமூதாய மக்கள் அவரை ஏற்க மறுத்தனர். அந்தச் சமுதாயத்தில் வாழ்ந்த ஒரு சில பலவீனமான  ஏழைகள் மாத்திரமே அவரை முதலில் ஏற்றுக்கொண்டனர்.

அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி; "நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?" எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், "நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்" என்று (பதில்) கூறினார்கள்.  (7:75)

அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்; "நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள்.  (7:76)

சுகபோக வாழ்கையில் மதி மயங்கி  சைத்தானின் உற்ற நண்பர்களாக மாறி வாழும் தமது சமுதாய மக்களை நினைத்து, ஸாலிஹ் நபியவர்கள் மிகுந்த வேதனை கொள்ளலானார்கள். அல்லாஹுவை மறந்து சிலைகளை வணங்குவதிலேயே மூழ்கித்திளைத்த அந்த மக்களை நேர் வழிப்படுத்த பலவாறு முயன்றார்கள். பல உபதேசங்களை அவர்கள் முன் எடுத்துரைத்தார்கள். ஸாலிஹ் நபியை இறைத்தூதராக ஏற்க மறுத்து அந்த மக்கள் உம்மைப் போன்ற ஒரு மனிதரைத் தாங்கள் பின்பற்றப் போவதில்லை என்றும் ஸாலிஹ் நபியை  பெரும் பொய்யர் என்றும் கூறினர்.

இன்னும், ஸமுது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்; "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்."  (11:61)

அதற்கு அவர்கள், "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக் குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்" என்று கூறினார்கள்.  (11:62)

ஸாலிஹ் நபியை அவரது சமுதாயம் பொய்யரெனத் தூற்றியது 
ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.  (54:23)

"நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்" என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.  (54:24)

"நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்" (என்றும் அவர்கள் கூறினர்).  (54:25)

இவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் முகமாக அல்லாஹ் பின்வருமாறு பதிலளித்தான்.

"ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?" என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.  (54:26)

அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!  (54:27)

அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்; "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" எனக் கூறியபோது  (26:141)

"நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.  (26:142)

"ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.  (26:143)

"மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.  (26:144)

"இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா?  (26:145) 

அத்தாட்சியாக அனுப்பப்பட்ட ஒட்டகம்
ஸாலிஹ் (அலை) அவர்களைப் பொய்யரெனக் கருதியதோடு அவரைச் சூனியக்காரர் என்றும் வர்ணித்தார்கள். மேலும் ஸாலிஹ் நபி இறைதூதர் தாம் என்பதை நிரூபிக்க ஓர் அடையாளத்தைக் கொண்டு வருமாறு வேண்டினர். அவர்களது வேண்டுதலுக்கு இணங்க அல்லாஹ் அற்புதமான ஓர் ஒட்டகத்தைச் சான்றாக அனுப்பினான்.

"நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்" (என்றனர்).  (26:153)

அவர் சொன்னார்; "இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்."  (26:154)
It is believed 
to be the place where Allah's Camel drunk the water
my;yh`; mDg;gpa xl;lfk; jz;zPh; Fbj;j ,lk; vd;W ek;gg;gLfpwJ.
"இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்."  (26:155)

அவர்கள் அதன் கால் நரம்பதை; துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.  (26:156) 

ஆக, அல்லாஹுவால் ஸமூது சமுதயாத்திற்கு அத்தாட்சியாக வழங்கப்பட்ட ஒட்டகம் ஏனைய ஒட்டகங்களைவிட முற்றிலும் வேறுப்பட்டுதான் இருக்கும் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. மேலும் ஸமூது சமுதயாத்திற்கென் றுள்ள கிணற்றில் ஒரு நாள் அந்த சமுதாய மக்கள் நீர் பருக வேண்டும். மற்றொரு நாள் ஒரு சமுதாயம் அருந்தும் நீரை ஒரே ஓர் ஒட்டகம் அருந்தவேண்டுமென்று அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கின்றான் என்றால் அந்த ஒட்டகம் மிக மிக பிரம்மாண்டமானது என்பதையும் விளங்கி கொள்ள முடிகிறது. அதே சமயம் அந்த பிரம்மாண்டம் உடல் அமைப்பிலா? உருவத்திலா? என்று எந்த வித முடிவுக்கும் நம்மால் வர முடியாது.

ஸாலிஹ் நபியின் சமுதாயம் ஸாலிஹ் நபியை நபியென விசுவாசம் கொள்ள ஓர் அத்தாட்சியைக் கேட்டன. அதற்காக அல்லாஹ் ஒட்டகத்தை அத்தாட்சியாக அனுப்பினான். இதுவே திருமறை குறிப்பிடும் உண்மை.

ஸாலிஹ் (அலை) அவர்களை கொள்ள சதி திட்டம்
அத்தாட்சியை ஏற்க மறுத்த அந்த மக்கள் ஸாலிஹ் நபியைப் பீடையெனக் கருதி கொலை செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டனர். அந்த மக்கள் 9 பிரிவுகளாக இருந்தார்கள்.

தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை "நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்" (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள்.  (27:45)

(அப்போது அவர்) "என்னுடைய சமூகத்தாரே! நன்மைக்கு முன்னால், தீமைக்காக நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள், நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்கப்மாட்டீர்களா?" எனக் கூறினார்.  (27:46)

அதற்கவர்கள்; "உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்" என்று சொன்னார்கள்; அவர் கூறினார்; "உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது எனினும், நீங்கள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்."  (27:47)

இன்னும், அந்நகரில் ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நன்மை எதுவும் செய்யாது பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிந்தார்கள்.  (27:48)

அவர்கள்; "நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!" பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) "உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்" என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்).  (27:49)

(இவ்வாறு) அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்; ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம்.  (27:50)

ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (முடிவு) அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம்.  (27:51)

அத்தாட்சிகளை  கொன்றொழித்தனர்
அடுத்த கட்டமாக தங்களுக்கு அற்புதமாக வழங்கப்பட்ட ஒட்டகத்தை அறுத்து வதை செய்ய முன் வந்தனர். இந்த ஒட்டகமானது மக்கள் மத்தியில் பாதுகாப்பாக நடமாட வேண்டும் என்றும், அதற்கு அநீதி இழைக்ககூடாது என்றும் அல்லாஹுவால் கட்டளை பிறப்பிக்கப்பட்டு அத்தாட்சியாக அனுப்பபட்டதாகும். ஆனால், அந்த மக்களோ அல்லாஹுவின் கட்டளையை மீறி அறுக்கத் துணிந்தனர்

"அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்" (என்று கூறினார்).  (11:64)

ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்); "நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.  (11:65)

ஒட்டகத்தை அறுப்பதற்குப் பலர் கூடி முடிவெடுத்தாலும் அநியாயக்காரன் ஒருவன்தான் அதனை வெட்ட முன் வந்து வெட்டினான்.
'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.  (91:11)

அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,  (91:12)

அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.  (91:13)

ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.  (91:14)

அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.  (91:15)

பின்வரும் பொன்மொழியைச் சிந்திப்போம்
(ஸாலிஹ் - அலை- அவர்களின் தூதுத்துவத்திற்குச் சான்றாக வந்த) ஒட்டகத்தை (அதன் கால் நரம்புகளை) வெட்டிக் கொன்றவனை நினைவு கூர்ந்தபடி நபி(ஸல்) அவர்கள், 'ஸாலிஹ் உடைய சமுதாயத்தில் அபூ ஸமஆவைப் போல் மதிப்பும் வலிமையும் வாய்ந்த ஒரு மனிதன் அதைக் கொல்ல ஒப்புக் கொண்டு முன்வந்தான்" என்று கூறினார்கள்.  புகாரி  3377

அநியாயக்கார மக்களில் பலமும் செல்வாக்கும் மிக்க ஒருவன் அந்த அபூர்வ ஒட்டகத்தை கொன்றுவிட்டான். இதனை  நினைவுகூர்ந்த இறைதூதர் (ஸல்) அவர்கள் ஸாலிஹ் நபி காலத்தில் ஒட்டகத்தைக் கொன்ற செல்வாக்குமிக்கவனுக்கு தமது காலத்தில் வாழ்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை உதாரணமாகக் குறிப்பிட்டார்கள். அவர்தான் அபூசம் ஆ  அவரது முழுப்பெயர் அஸ்வத் பின் முத்தலிப் என்பதாகும். இவண் இறைமறுப்பாளனாக இருந்தவன். இந்த நபி மொழியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரழி) அவர்களின் பாட்டனாராவார். இவர் மிகுந்த செல்வாக்குடனும் வலிமையுடனும் திகழ்ந்தார். (உம்தத்தல் காரீ, இர்ஷாதுஸ்ஸாரீ).

தங்களுக்குத் தாங்களே வேதனையை வேண்டினர்:
அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய அற்புதத்தை அநியாயமாகக் கொன்றொழித்ததோடு "நீர் எச்சரித்த வேதனையைக் கொண்டு வாரும் பார்க்கலாம்" எனத் தமது நாவுகளால் வேதனையை வேண்டினர். அதன் விளைவு அவர்களை இடியாலும் பூகம்பத்தாலும் அல்லாஹ் அழித்தான்.

பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); "ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.  (7:77)

எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.  (7:78)

ஸாலிஹ் நபியையும் அவரை பின்பற்றிய நல்லடியார்களையும் அல்லாஹ் காப்பாற்றிவிட்டு அநீதி இழைத்த சமுதாயத்தை மாத்திரம் பெரும் சப்தத்தால் அழித்தான்.


நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.  (11:66)
http://foto-work.co.uk/blog/wp-content/uploads/2009/06/graf-art-tags1.jpg
அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்,  (11:67)

(அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டதினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர் அறிந்து கொள்வீர்களாக! 'ஸமூது' (கூட்டத்தினர்)க்கு நாசம்தான்.  (11:68) 

ஸாலிஹ் (அலை) அவர்களுக்கு அவர்களுடைய சமுதாயத்தார் மாறு புரிந்து. அல்லாஹ் விஷயத்தில் அவர்கள் பிடிவாதம்  கொண்டு உண்மையை ஏற்க மறுத்து, நல்வழியைப் புறக்கணித்துக் குருட்டு வழியில் சென்றதால் அவர்களை அல்லாஹ் அழித்தான். அவர்களை அழிந்த பின்னர் அவர்களை கண்டித்து நகைக்கும் முகமாக ஸாலிஹ் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); "ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.  (7:77)

எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.  (7:78)

அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் "என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, "உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை" என்று கூறினார்.  (7:79)

இந்த கண்டனம் ஸமூது கூட்டத்தாரின் காதுகளில் விழாமலில்லை பின்வரும் நபிமொழி இதற்குச் சான்றாகும்.

பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி(ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி(ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாள்கள் தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம் வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களின் தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் ஏதோ தம் தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (ம்ணற்றோரம் நின்றிருந்த) நபி(ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, 'இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?' என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (ம்ணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை" என்று கூறினார்கள்.
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கதாதா(ரஹ்) கூறினார்கள்: 

அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப் படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி(ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும்) அல்லாஹ் அவர்களை உயிராக்கினான்.   புகாரி 3976

இவ்வாறே ஸாலிஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரிடம். "நான் என் இறைவனின் தூதுச் செய்தியை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்கு நலம் நாடிவிட்டேன்"  என்று கூறினார்கள் என்கிறது இந்த வசனம்.
அதாவது நான் எனது பணியைச் செய்துவிட்டேன். ஆனால், நீங்கள்தான் அதன் மூலம் பயன் பெறத் தவறிவிட்டீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையை நேசிப்பதில்லை. உங்களுக்கு நலம் நாடுபவரை நீங்கள் பின்பற்றுவதில்லை என்று கூறினார்கள்.