நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Thursday, September 30, 2010

பாபரி மஸ்ஜித் அடிப்படையான உண்மைகள்



 http://www.tntj.net/wp-content/uploads/2009/11/51.jpg

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு ஹிந்து பயங்கரவாத அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது. சுமார் 450 ஆண்டுகால பழமைவாய்ந்த மஸ்ஜித் இருக்கும் இடம் இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடம் என்றும், எனவே அவ்விடம் தங்களுக்கே சொந்தம் என்றும் கூறி, கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 30.09.2010 அன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைந்தாலும் நடைமுறையில் உண்மையான நீதி கிடைக்குமா என்பது இந்திய அரசின் முன்னைய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்த நிலையில் இந்திய தளங்களில் -ஏ1ரியலிஸம்.காம் -முன்பு வெளியான கட்டுரைகளின் முக்கிய பகுதிகள் இங்கு தொகுப்பாக தரப்படுகின்றது விரிவாக பார்க்க

டிசம்பர் 06 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள்

டிசம்பர் 06 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்க்க பட்டது முழு உலக முஸ்லிம்களும் அதிர்ந்து போன நாள் அன்று முஸ்லிம் தலைவர்களாக தம்மை அடையாள படுத்திக் கொண்டவர்கள் அவமானத்தையும் கையாலாகாத தனத்தையும் ஏற்றுக்கொண்ட நாள் ஹிந்து பாஸிஸச் சக்திகளால் இந்திய முஸ்லிம்கள் வகை தொகையின்றி கொலை செய்யப்பட்ட நாள்

பள்ளிவாசல் இடிக்கப்பட்டவுடன் தங்கள் அதிருப்தியை வெளியே காட்டிட வந்த அத்தனை முஸ்லிம்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு பெரும் பகுதியினர் நரசிம்மராவ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். எஞ்சியோர் தடா என்ற காட்டுமிராண்டிச் சட்டத்தின் வாயில் சிக்கிச் சிறைச்hலைகளில் தங்கள் வாழ்நாள்களைத் கழித்திட வேண்டியவர்களானார்கள்.

கி.பி. 1528 ல் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட வரலாறு

இப்பள்ளிவால் உண்மையில் மிர்பக்கி என்பவரால் கட்டப்பட்டது. இந்த மிர்பக்கி பேரரசர் பாபர் அவர்களின் கீழ் பணிபுரிந்த ஓர் படைத்தலைவர். இவரது சொந்த ஊர் தாஷ்கண்ட். இப்பள்ளிவாசல் அந்தப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றிடும் முகத்தான் நிறுவப்பட்டது.

ஆட்சியாளர் ஜஹாங்கீர் அவர்கள் காலம் முதற்கொண்டு தான் இந்தப் மஸ்ஜித் பாபரி மஸ்ஜித் என்றழைக்கப்பட்டது. மஸ்ஜித் கட்டி முடிக்கப்பட்ட அந்த நாள் முதல் முஸ்லிம்கள் தொழுகைகளைக் கூட்டாக இந்தப் மஸ்ஜித்தில் நிறைவேற்றி வந்தார்கள்.

1950 ம் ஆண்டு பைஸாபாத் சிவில் நீதிமன்றம் ஓர் தடை உத்தரவைப் போட்டு முஸ்லிம்கள் மஸ்ஜித்திலுள் நுழைவதைத் தடுத்தது.அன்று வரை முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை அந்தப் மஸ்ஜித்தில் நிறைவேற்றியே வந்தார்கள்.

1855 ஹனுமன் கார்ஹி வழக்கு

19ம் நூற்றாண்டின் நடுவில் அதாவது 1855 ஆம் ஆண்டில் ஹனுமான்கார்ஹி என்பது குறித்து வழக்கொன்று எழுந்தது. இந்த வழக்கு முஸ்லிம்களுக்கும் நாகா சாதுக்களுக்குமிடையில் எழுந்தது. அப்போது அப்பகுதி நவாப் வாஜித் அலீ ஷா என்பாரின் ஆட்சியின் கீழிருந்தது.

இந்த ஹனுமான்கார்ஹி அயோத்தியில் இருக்கின்றது. இந்த ஹனுமான்கார்ஹியில் மஸ்ஜித் ஒன்று இருந்தது எனவும் அது இடிக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் முஸ்லிம்கள் கூறினார்கள்.

இது குறித்து எழுந்த கலவரங்களில் 200 இறந்துள்ளனர். பல முஸ்லிம்கள் உயிரைத் தந்தும் மஸ்ஜித் இடத்தை மீட்க இயலவில்லை.

முஸ்லிம்கள் ஹனுமன் கார்ஹியிலிருந்த மஸ்ஜித்தை மீட்கக முயற்சி செய்தார்கள் என்பதற்காக இந்துக்கள் எதிர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பாபரி மஸ்ஜித் முன்பு ராம் சாபுத்ரா ஒன்றிருந்தது என்பதே அந்த எதிர் நடவடிக்கை.

முஸ்லிம்கள் தங்கள் மஸ்ஜித்தை மீட்க நடவடிக்கை எடுக்கின்றார்ள் என்று கோபங் கொண்டெழுந்த அந்தப் பகுதிய பூர்வீக இந்துக்கள் கூட ஜென்மஸ்தான் என்றொரு முழக்கத்தை முன் வைக்கவில்லை.

அவர்கள் ஒரு எதிர் நடவடிக்கையாகத் தான் மஸ்ஜித் முன்பாக ஒரு இடத்தை இட்டுக் கட்டிப் பேசினார்கள். ஆகவே பாபரி மஸ்ஜித்தை இராமர் பிறந்த இடம் என்பது ஆதாரமற்ற அரசியல் பிழைப்புக் கோஷம் என்பதே உண்மை. (ஆதாரம் : பேராசிரியர் க. சம்பக லஷ்மி. வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் மற்றும் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவர்)

1857 நாம் சாபுத்ரா

பாபரி மஸ்ஜித் முன்பாக சற்றுத் தொலைவில் மேடு போன்றிருக்கும் இடம் ராம் சாபுத்ரா என்றும் அதுவே ராம் ஜென்ஸ்தான் என்று சாமியார் ஒருவர் திருவாய் மலர்ந்தார். அத்தோடு அங்கு பூஜா புனஸ்காரங்கள் செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

1857 ல் பாபரி மஸ்ஜித் முன்பாக சற்று தொலைவில் மேடு போன்றிருந்த இடம் ராம் சாபுத்ரா என்ற யெரில் உயர்த்தப்பட்டு இந்துக்கள் பூஜா புனஸ்காரங்களைச் செய்து வந்தார்கள். ஒரே வளாகத்திற்குள் முஸ்லிம்கள் மஸ்ஜித் தங்கள் தொழுகையை நிறைவேற்றினார்கள். இந்துகள் தங்கள் பூஜா புனஸ்காரங்களை நிறைவேற்றினார்கள்.

இரு வகுப்பரிடையேயும் பிரச்னைகள் எழுந்து விடக் கூடாது என்பதற்காக ஆங்கிலேயர்கள் இரண்டு வணக்க இடங்களை வேறுபடுத்திடும் அளவில் ஓர் சுவரை எழுப்பிட விரும்பினார்கள். அதன்படி 1859 ல் இந்தப் சுவர் எழுப்பப்பட்டும் விட்டது.

1883 ம் ஆண்டு மே மாதம் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பின்னர் பைஸாபாத் துணை ஆணையாளரிடம் இந்த இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பம் தரப்பட்டது.

இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பட்டவர்த்தனமான வகுப்ப வெறியேயன்றி வேறு எண்ணங்கள் இதற்குப் பின்னால் இல்லை. இதனால் அனுமதி வழங்கப்படவியலாது எனக் கூறி விட்டார் பைஸாபாத் துணை ஆணையாளர்.

1885 ராம் சாபுத்ராவில் கோயில் கட்ட வழக்கு

ஜனவரி 15 1885 ல் ஜென்ஸ்தான் காப்பாளராகக் காட்டிக் கொண்ட ரகுபீர்தாஸ் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.

மஸ்ஜித்க்கு முன்னால் கோவில் கட்டுவது இரண்டு வகுப்பாருக்குமிடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் எதிலும் பாபரி மஸ்ஜித் சர்ச்சையாக்கப்படவில்லை என்பது தெளிவு.

1934 ல் நடந்த வகுப்புக் கலவரங்கள் அயோத்தியைத் தாக்கியது. சில தீவிரவாதிகள் முஸ்லிம்களைத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்களையும் தாக்கி துதை தாக்கினார்கள். எனினும் முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகைகளை நிறைவேற்றி வந்தார்கள்.

இராமர் சிலைகள்

1949 டிசம்பர் 23 ல் இராமர் லாலா சிலைகள் மூட நம்பிக்கையின் அடிப்படைமஸ்ஜிதுக்குள் வைக்கப்பட்டன. இது சட்ட விரோதமான செயல் என அப்போதே அறிவிக்கப்பட்டது. இந்தக் கிரிமினல் குற்றம் சம்பந்தமாக ஒரு முதல் குற்றப்பத்தரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

22.12.1949 அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு மஸ்ஜித் கோயிலாக மாற்றப்பட்டு விட்டது.

கே.கே.நய்யார்

பாபரி மஸ்ஜித்தில் சிலை வைக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கு கே.கே. நய்யார் என்பார் நீதிபதியாக இருந்த நீதிமன்றத்தில் தான் நடந்தது. இவர் பிற்றை நாட்களில் ஜனசங்க அதாவது முன்னாள் பிஜேபி யின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மட்டுமல்ல அவருடைய மனைவி சகுந்தலா அம்மையாரும் அதே ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆக முஸ்லிம்கள் ஒரு பிஜேபி குடும்பத்திடம் தான் பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்ப்பட்டது சம்பந்தமாக நியாயம் கேட்டிருக்கின்றார்கள்.

இந்த கே.கே.நய்யார் பைஸாபாத்திலும் உத்திரப் பிரதேசத்திலும் அரசு பொறுப்புகளிலும் பல ஆண்டுக்ள இருந்தார். முஸ்லிம்கள் – இந்துக்கள் இடையே ஏற்பட்ட பல பிரச்னைகளில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் தலைவராக இருந்தார். கிஞ்சிற்றும் கவலைப்படாத ஓர் இந்து தீவிரவாதி என்பதை யாரும் அறிந்திடவில்லை.

மஸ்ஜித்தில் சிலைகள் வைக்கப்பட்டவுடன் அவற்றை அகற்றி விட்டு தொழுகையை நிறைவேற்றிக் கொண்டே இருந்திருக்க வேண்டும் முஸ்லிம்கள். பாவம்.. அவர்கள் இந்த நாட்டு நீதிமன்றமும் நீதிபதிகளும் நியாயம் வழங்குவார்கள் என எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

சிலைகள் வைக்கப்பட்டவுடன் வழங்கப்பட்ட (அ)நீதி

சிலைகள் வைக்கப்பட்டவுடன் மாவட்ட நீதிபதி சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்திய தண்டனைச் சட்டம ;பிரிவு 145 ன் கீழ் மஸ்ஜித்தை கைப்பற்றினார். மஸ்ஜித் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நீதிபதியைக் கொண்டு நிர்வாகம் என்ற பெயரில் மஸ்ஜித்க்குள்ளிலிருந்த சிலைகளுக்குப் பூஜை புனஸ்காரங்களை அனுமதித்தார்.

நீதிபதி கே.கே.நய்யாரின் ராஜ துரோகச் செயல்

பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்கப்பட்டு விட்டது. அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் என்ற வழக்கு தன் முன்னால் வந்த போது அதனை சட்டை செய்யாமலிருந்தார் இவர். மாவட்ட நீதிபதி என்ற அளவில் அவர் செய்ததெல்லாம் பள்ளிவாசலுக்குள் பூஐஜகள் நடத்த ஆவன செய்தது தான். தொழுகைகள் முறையாக நடைபெற்று வந்த பள்ளிவாசல் சிலைகளின் இருப்பிடமாக ஆக்கப்பட்டு விட்டது என்பதை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்குத் தெரிவித்தார்கள் முஸ்லிம்கள்.
………

ஜவஹர்லால் நேரு அவர்கள் 23.12.1949 அன்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஜி.பி.பந்த் அவர்களுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். அந்தத் தந்தியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் :

‘னுயபெநசழரள நுஒயஅpடந ளை டிநiபெ ளநவ வாநசநஇ றாiஉh றடைட hயஎந டியன உழளெநஙரநnஉநள’. (மிகவும் ஆபத்தான முன்மாதிரி ஒன்று அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்).

பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் அக்கறை காட்டிக் கொண்டதாகக் கண்ணீர் வடித்தவர்கள் யாரும் அங்கிருந்து சிலைகளை அகற்றிடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.
பிரதமர் நேருவின் தந்தி கிடைத்ததும் உத்திரப்பிரதேச முதல் ஜி.கே.பந்த் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.

அவர் பைஸாபாத் நீதிபதி கே.கே. நய்யார் அவர்களிடம இரண்டு கேள்விகளை வைத்து விளக்கம் கேட்டார்:

அந்தக் கேள்விகள் : 1. சிலைகளை பள்ளிவாசலுக்குள் வைத்து விடாமல் தடுத்திட ஏன் முன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? 2. சிலைகளை ஏன் இன்னும் அகற்றிடவில்லை?

இந்த வினாக்களுக்கு விளக்கம் கேட்ட கடிதத்தில் அப்போதைய உத்திரப்பிரதேச அரசின் முதன்மை செயலர் பகவான் ஷாகே அவர்கள் கையெழுத்திட்டிருந்தார். இந்தக் கடிதம் டிசம்பர் 27 1949 அன்று அனுப்பப்பட்டது.
இதற்கு விளக்கம் தந்த கே.கே.நய்யார் முஸ்லிம்களிடம் பேசி அந்த  மஸ்ஜித்தை இந்துக்களுக்கு விட்டுக் கொடுத்திட செய்திடலாம் என்று கூறி விட்டார்.

அத்துடன் முஸ்லிமக்கள் போல் தோற்றந்தந்த சிலரைத் தனது லட்சியம் நிறைவேறத் தயாரித்தார். அவர்களில் 15 பேரை ஒன்று திரட்டி ஒரு குழவை அமைத்தார். அந்தக் குழவின் கையில் ஓர் விண்ணப்பத்தை வடிவமைத்துத் தந்தார். அந்த விண்ணப்பத்தில் அந்த  மஸ்ஜித்துகுள் சிலைகள் வைக்கப்பட்டு விட்டதால்  மஸ்ஜித் செயல்படவில்லை. அது கோயிலாகவே செயல்படுவதால் அதை இந்துக்களுக்கே தந்து விடலாம் என முஸ்லிம்களே முறையிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
(ஆதாரம் : அயோத்தியா முழு உண்மைகள் பக்கம். 3 வெளியீடு : Dangerous Example is being set there, which will have bad consequences? 500 044).

மஸ்ஜித்தை இந்து அராஜகவாதிகளிடமிருந்து மீட்டே தீர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட முஸ்லிம்கள் கவர்னர் ஜெனரல் இராஜகோபால் ஆச்சாரியார் அவர்களுக்குத் தகவல்கள் தந்தார்கள்.

இராஜகோபால் ஆச்சாரியார் அவர்கள் பிரதமர் நேரு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் மஸ்ஜித்தை சுற்றி நடப்பவை தனக்கு அதிர்ச்சியைத் தருகின்றன. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நான் கலங்கிப் போயிருப்பதாகவும் குறிப்பிட்டார். கவர்னர் ஜெனரல் கடிதத்திற்கு நேரு அவர்கள் உடனேயே பதில் எழுதினார்.

அந்தப் பதில் இது தான் : United Academics International, Vidyanagar, Hyderabad ? 500 044 (உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கும் எண்ணத்திலிருக்கின்றார்.

5.12.1950 அன்று ஜவஹர்லால் நேரு அவர்கள் தான் அயோத்தியாவுக்கு வர விரும்புவதாக கடிதம் எழுதினார். அவரை வரவிடாமற் தடுத்து விட்டார் உ.பி. முதல்வர் ஜி.பி.பந்த்.

முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதில் 1950 ல் நீதிமன்றம் இன்னொரு தீர்ப்பை வழங்கிற்று. அது வேறொன்றுமில்லை. இந்துக்கள் பூஐஜ நடத்தவார்களாம். முஸ்லிம்கள் அதில் எந்த இடையூறுகளையும் செய்து விடக் கூடாதாம்.

உத்திரப்பிரதேச முதல்வர் ஜி.பி. பந்த் அவர்களும் ஓர் இந்து மதவெறியர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள நீண்ட காலமாகி விட்டது.

1959 ல் அரசு பொறுப்பாளரை அகற்றி விட்டு பள்ளிவாசலை இந்துக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றொரு வழக்கு தொடரப்பட்டது. 1961 ல் சுன்னி வக்ப் போர்டு மஸ்ஜித்தையும ;அதைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் அடக்கத்தளத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைத்திட வேன்டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் இன்று வரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. பாபரி மஸ்ஜித்தைக் கோயிலா மாற்றிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளில் உடனுக்குடன் தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்கள் தமது நியாயமான உரிமைகளுக்ககாகத் தொடர்ந்த வழக்குகளில் இது வரை தீர்ப்புகள் வழங்க்பபட்வில்லை.

இன்னும் முஸ்லிம்கள் இந்த நீதி மன்றங்களை நம்புகின்றார்கள். இதே போல் தான் 1986 ல் மஸ்ஜித் கதவுகளைத் திறந்து பொதுமக்களின் பூஐஜக்காக அனுமதி வழங்கிட வேண்டும் என்ற தீர்ப்பும் வந்தது!

மஸ்ஜித்தை திறந்து பொதுமக்களின் பூஐஜயை அனுமதிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தவர் உமேஷ் சந்திர பாண்டே என்பவர். இவர் பாபரி மஸ்ஜித் சம்பந்தமாகத் தொடரப்பட்ட எந்த வழக்கோடும் சம்பந்தப்படவில்லை.

இவர் 1986 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் மஸ்ஜித்தை பொதுமக்கள் பூஐஜக்காகத் திறந்திட வேண்டும் என்றொரு வழக்கைப் பதிவு செய்கின்றார். மூன்றே நாட்களில் அதாவது பிப்ரவரி மாதம் 1 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பூட்டு திறக்கப்பட்டு விட்டது. பாபரி மஸ்ஜித் சம்பந்தப்பட்ட அடிப்படை வழக்குகள் பல உயர்நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது பல ஆண்டுகளாக!

அடிப்படை வழக்குகளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தீர்த்து வைக்காத வரை அது தொடர்பான எந்த வழக்குகளிலும் கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிடக் கூடாது. இந்த நீதிமன்ற நெறிமுறைகளையெல்லாம் எடுத்தெறிந்து விட்டு பைஸாபாத் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. அந்தத் தீர்ப்பு உடனேயே செயல்படுத்தவும்படுகின்றது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் உடனேயே உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள் முஸ்லிம்கள். உயர்நீதிமன்றம் பிப்ரவரி 3 ம் நாள் (1986) முஸ்லிம்களின் முதகில் குத்தி ஒரு தீர்ப்பை வழங்கியது.

அதாவது பாபரி மஸ்ஜித் இருக்கும் சொத்தின் அப்போதைய நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு!

இதன் பொருள் மஸ்ஜிதில் தொடர்ந்து பூஐஜ நடத்தலாம் என்பதே.

1985 முதல் அயோத்தியாவை யைமாகக் கொண்டு சுளுளுஇ ஏர்Pஇ டீதுP முதலிய கட்சிகள் ஒரு பெரும் இயக்கத்தைத் துவங்கின. 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த கும்பமேளா திருவிழாவைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக இந்த இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஸ்ரீராம் எனப் பொறிக்கப்பட்ட செங்கல்கள் அயோத்தியை நோக்கி அனுப்பப்பட்டன. 1989 ஆம் ஆண்டு இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. நவம்பர் மாதம் 9 ம் நாள் நடைபெற்ற இந்த கால்கோள் விழாவில் இராஜிவ் காந்தி அரசு முஸ்லிம்களின் முதகில் குத்தியது.

நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்ட ஒரு இடத்தில் கோயில் கட்ட அடித்தளம் அமைக்கப்பட்டது. பண்பாடு நாகரீகம் இவற்றின் அடிப்படையில் பார்த்தால் மிகவும் கீழ்த்தரமானதோர் செயல் இது. இந்தக் கீழ்த்தரமான செயலை இந்து வட்டாரங்களில் மிகப் பெரிய சாதனை எனப் பீற்றிக் கொண்டன சங்க் பரிவாரங்கள்.

நவம்பர் 1989 ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்ற இடம் சர்ச்சைக்குரிய இடம் என்றும் அதன் அந்தஸ்தில் எந்த மாற்றமும் கொண்டு வந்திடக் கூடாது அதில் ஒரு துரம்பைக் கூட மாற்றிடக் கூடாது என அறிவித்தது. எனினும் அந்த இடம் பாழ்படுத்தப்பட்டது.

இந்த நாட்டின் நீதிமன்றத்தை ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தினார்கள் இந்து மத வெறியர்கள். வெறி கொண்ட இந்த நாட்டுத் துரொகத்திற்குப் பெயர் தாய் நாட்டின் மீதுள்ள மாளாத பற்று.

1989 ஆண்டுத் தேர்தல்கள்.

1989 ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் பாஜக நாடாளுமன்றத்தில் 80 இடங்களைப் பிடித்தது. அதற்கு முந்தைய நாடாளுமன்றத்தில் அது பெற்றிருந்தது வெறும் 2 இடங்களே!

அப்போதைய அரசியல் கதாநாயகனாகவும் சமூக நீதியின் காவலனாகவும் காட்டப்பட்ட வி.பி.சிங் போஃபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் சிக்கிக் கொண்டது. இவையெல்லாம் இந்தத் தேர்தலை நிர்ணயித்தன.

தேசிய முன்னணி என்ற பெயரில் பிஜேபி வி.பி.சிங்குடன் இணைந்து நின்றது. இவையெல்லாம் பிஜேபி இதில அதிகமான இடங்களைப் பிடித்திட வகை செய்தன. ஆனால் பாஜக வினர் இது கோயிலுக்காகக் கிடைத்த ஓட்டு என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.

பிஜேபி கூட்டுடன் பணியாற்றிய தேசிய முன்னணி பல பிரச்னைகளை பிஜேபி பினராலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. பாபரி மஸ்ஜி பிரச்னையை பிஜேபி பெரிதாக்கவே வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை உடனேயே செயல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில் பிஜேபி ன் உயர் சாதி வெறி வெளிப்பட்டது.

1990 ல் விஷ்வ இந்து பரிஷத் பாபரி மஸ்ஜித் இருக்குமிடத்தில் கோயில் கட்டும் பணி ஜனவரி 2 ம் தேதி ஆரம்பமாகும் என அறிவித்தது. வி.பி.சிங் அவர்களின் வேண்டுகோளின் கீழ் இது நான்கு மாதம் தள்ளிப் போடப்பட்டது. 1990 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்வானி மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் கிடைக்கவிருக்கின்ற சமூக நீதியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிடவும் இராமர் கோயில் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வந்திடவும் ரத யாத்திரையை மேற்கொண்டார். இந்த ரத யாத்திரையின் பெயரால் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களினால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிர் துறந்தார்கள். ரத யாத்திரை நாடு முழவதும் ஏற்படுத்திய கொந்தளிப்புகளின் அடிப்படையில் அதைத் தடை செய்திட வேண்டும் என விண்ணபித்தனர் மக்கள்.

ரத யாத்திரையைத் தடை செய்தால் வி.பி.சிங் அவர்களின் அரசுக்கு அளித்து வரும் ஆதரவைப் பின் வாங்குவோம் என அறிவித்தார்கள் பிஜேபி யினர். அப்போது உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அத்வானியும் அவருடைய பரிவாரங்களும் உத்திர பிரதேசத்திற்குள் புகுந்து கலவரங்களை உருவாக்குவதற்கு முன்னால் ரத யாத்திரையைத் தடுத்திட வேண்டும் என முடிவு செய்து ரத யாத்திரை பீகாரில் சமஸ்திப்பூர் வந்த போது 23.10.1990 அன்று அத்வானி கைது செய்யப்பட்டு அரசு விருந்தினர் மாளிகையின் காவலில் வைக்கப்பட்டார். அத்வானியைக் கைது செய்ததும் ஒரு பெரும் கூட்டம் அயோத்தியை நோக்கிப் பாய்ந்தது. முலாயம் சிங் யாதவ் அவர்களின் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டது.

இதே அக்டோபர் மாதம் 30 ம் நாள் (1990) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முலாயம் சிங் யாதவ் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் மஸ்ஜித் இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டது. ஆனாலும் மஸ்ஜித் வெளிச்சுவர்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலர் மஸ்ஜித் மேல் காவிக் கொடியையும் ஏற்றினார்கள். இப்படிப் மஸ்ஜித் தகர்ப்பதைத் தடுத்து விட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையைச் செயல்படுத்த முனைந்து சமூக நீதி வழங்கிட முனைந்தது – இவற்றை மனதிற் கொண்டு பிஜேபி யினர் விபிசிங் அரசுக்கு தந்த ஆதரவைப் பின் வாங்கினர்.

வி.பி. சிங் பதவி இழந்தார். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் சுமூகமான முடிவு காண்போம் எனத் தொடர்ந்து வந்த காங்கிரஸ் சூளுரைத்தது. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் தான் என்பதற்கான ஆதாரங்களை முஸ்லிம்கள் தந்திட வேண்டும். அது கோயில் தான் என்பதை நிரூபித்திட ஆதாரங்கள் இருந்தால் இந்துக்கள் தந்திட வேண்டும் என்றொரு அறிவிப்பு இரு தரப்பாரையும் நோக்கி வைக்கப்பட்டது.

பாபரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழு என்ற முஸ்லிம்களின் அணி ஆதாரங்களோடு வந்தது. இந்துத் தீவிரவாதிகளோ இது மத நம்பிக்கை. இதற்கு ஆதாரங்கள் என எதுவும் தரத் தேவை இல்லை என்று அறிவித்தார்கள். அத்தோடு மதுரா வாரணாசி ஆகிய இடங்களிலிருக்கும் மஸ்ஜித்களையும் இந்துக்களிடம் ஒப்படைத்திட வேண்டும்எனவும் இந்துத் தீவிரவாதிகள் அறிக்கை விட்டார்கள். இதிலிருந்து இந்துத் தீவிரவாதிகளிடம் ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் ஆதாரங்களால் சாதிக்க இயலாதவற்றை அடாவடித்தனங்களால் சாதிக்க முனைகின்றார்கள் என்பதும் தெளிவானது
1991 தேர்தல்களும் பமஸ்ஜித் இடிப்புகளும்

வி.பி.சிங் அவர்களின் அரசு வீழ்ந்தவுடன் சந்திரசேகர் தனது அரசை அமைத்தார். சந்திரசேகரை அரசு அமைக்க பணித்தது காங்கிரஸ் தான். பின்னர் இதே காங்கிரஸ் சந்திரசேகர் அவர்களைப் பதவியிலிருந்து வீழ்த்திற்று. 1991 ம் ஆண்டு ஜுன் மாதம் பொதுத் தேர்தல்கள் நடந்தன. பாரதீய ஜனதா கட்சி இதில் தன்னுடைய எண்ணிக்கையைச் சற்று அதிகப்படுத்திக் கொண்டது. அதாவது 80 அங்கத்தினர்கலிருந்து 117 அங்கத்தினரானார்கள். நாடாளுமன்றத்தில் இடம் பெற்றார்கள்.

பதவி ஏற்ற மறு நாள் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் கல்யாண் சிங் தன்னுடைய அமைச்சரபை; பரிவாரத்துடன் அயோத்தியா சென்று பாபரி மஸ்ஜித்துக்குள் நுழைந்தார். அங்கே ஓர் உறுதி மொழியையும் எடுத்தார். அதில இதில் (மஸ்ஜித்துக்குள்) நிச்சயமாக ஓர் கோயில் கட்டப்படும் என சூளுரைத்தார்.

வழிபாட்டுத் தலங்களின் சட்டம்

1991 ல் நரசிம்ம ராவ் அரசு ஓர் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது.  1991. இந்தச் சட்டம் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் எந்தப் பள்ளிவாசலும் ஆலயமாகவோ கோயிலாகவோ மாற்றப்படலாகாது என்றும் எந்தக் கோயிலும் ஆலயமாகவோ பள்ளிவாசலாகவோ மாற்றப்பட முடியாது என்று பறை சாற்றியது

இந்தச் சட்டம் 15.08.1947 அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாள் முதற் கொண்டு வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியே பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்தது. அதே நேரத்தில் பாபரி மஸ்ஜித் இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் சொல்லிற்று. அதாவது பாபரி மஸ்ஜித்தை வேண்டுமானால் கோயிலாகக மாற்றிக் கொள்ளலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிற்று. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனைகள் தரப்படுமாம். அதாவது 3 ஆண்டுகள் சிறையிலிருக்க சித்தமாக இருப்போர் தங்கள் விருப்பம் போல் செயல்படலாம். இந்தச் சட்டம் இன்னொரு ஏமாற்று மோசடி வேலை அவ்வளவு தான்.

இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததும் முஸ்லிம்களுக்கு ஒரு சிறு ஆறதல். வாரணாசியிலும் மதுராவிலும் இருக்கும் மஸ்ஜிதுகள் காப்பாற்றப்பட்டு விடும் என்பது தான் அந்த ஆறதல். மஸ்ஜிதுகள் சுற்றியுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1991 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஜேபி ன் உத்திரப்பிரதேச அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது.

இதற்கு அது கூறிய காரணம் சுற்றுலாவை வளர்ப்பதும் அயோத்தியா வரும் யாத்திரீகர்களுக்கு வசதிகள் செய்து தருவதுமாகும். இந்தப் பிஜேபி அரசு பிறப்பித்த ஆணைகளின் அடிப்படையில் அக்டோபர் மாதம் 12 ம் நாள் 1991 முதல் பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலம் அரசுக்குச் சொந்தம்.

இதன் உள்நோக்கம் என்னவெனில் பாபரி மஸ்ஜித்தை இடித்து விட்டு இராமர் கோயில் கட்டுவதே! அக்டோபர் 17 1991 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஓர் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனு உத்திரப் பிரதேச அரசின் ஆணை அதாவது பாபரி மஸ்ஜித் உட்பட்ட இடத்தில் 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திய ஆணை செல்லாது என அறிவிக்கும்படி வேண்டியது.

இதன் அடிப்படையில் அலகாபாத உயர் நீதிமன்றம் 1991 அக்டோபர் 25 ம் நான் அந்த ஆணை செல்லாது என்று சொல்லாமல் கையகப்படுத்திய இடத்தில் நிரந்தரமான கட்டடங்கள் எதையும் கட்டிடக் கூடாது என்றும் இறுதித் தீர்ப்பு வரும் வரை அந்த இடத்தை யாருக்கும் சொந்தமாக்கிப் பெயர் மாற்றம் செய்திடக் கூடாது என்றும் அத்தோடு அந்த இடத்தில் நடக்கும் அத்தனைக் கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்தி விட வேண்டும் என்று ஆணையிட்டது.

ஆனால் கல்யாண் சிங் அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியதும் விஹெச்பி தொண்டர்கள் அசோக் சிங்காலின் மேற்பார்வையின் கீழும் பஜ்ரங்தள் தொண்டர்கள் வினய் கட்டியார் தலைமையிலும் இந்த நிலப்பரப்பிலிருந்து சிறு சிறு கோயில்களை எல்லாம் இடித்தார்கள். இந்தச் சிறு கோயில்களை இவர்கள் இடித்தற்குக் காரணம் பெரிய இராமர் கோயிலைக் கட்டுவதேயாகும்.

இதே வேகத்திலும் வெறியிலும் அவர்கள் இராமர் கோயில் கட்டுவதற்கான பிரதான வாசலை எழுப்புதவற்கு அடிக்கல்லும் நாட்டி விட்டார்கள். இந்த அடிக்கல் நாட்டுப் பணி 22 அக்டோபர் 1991 ல் நடைபெற்றது. நரசிம்ம ராவ் அரசு இத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு கைகட்டி வாய் பொத்தி நின்றது. இத்தனையையும் முடிந்த பின்னர் தான் நீதி மன்றம் தனது ஆணையை அக்டோபர் 25 ல் பிறப்பித்தது.

நீதிமன்ற ஆணைக்குப் பின்னரும் அங்கு கட்டுமாணப் பணிகள் தொடர்ந்தன. 1991 அக்டோபர் 30 ல் கொடியேற்றினார்கள். இந்நாளில் விஹெச்பி தொண்டர்கள் மஸ்ஜித் முன் கூடி 1990 ல் அங்கு வந்த கரசேவைக்காரர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினார்கள். இதில் இந்து வெறி தலைவர்கள் குழமி இருந்தோரைத் தூண்டி விடும் அளவில் வன்முறைப் பேச்சுக்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.
………..

ஆத்திரம் கொண்ட கூட்டத்தினர் பள்ளிவாசலின் மேல் ஏறி காவிக் கொடியைக் கட்டினர். கல்யாண்சிங் அரசு அவர்களுக்கு ஊக்கம் தந்தது. நரசிம்ம ராவ் அரசு அமைதி காத்தது.
http://www.tntj.net/wp-content/uploads/2009/11/12.jpg

1992 பிப்ரவரி
8 ம் நாள் உத்திரப்பிரதேச அரசு தான் கையகப்படுத்திய இடத்தைச் சுற்றித் தடுப்புச் சுவர் எழுப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.

1992 மார்ச்
கல்யாண்சிங்கின் பாஜக அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றி இன்னும் 42 ஏக்கர் நிலத்தை இராமஜன்ம பூமி அறக்கட்டளைக்குக் குத்தகைக்கு விட்டது. இந்த இடம் இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தது அரசு.

1992 மார்ச் 22
இதில் உற்சாகம் பெற்ற விஹெச்பி பஜ்ரங்தள் தொண்டர்கள் இன்னுமிருந்த சிறு சிறு கோயில்களை இடித்து இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட வகை செய்தனர்.

இந்தச் சாக்கில் சுற்றி இருந்த வீடுகளையும் கடைகளையும் இடித்துத் தரைமட்டமாக்கினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு மாநில அரசை மிரட்டி சில அறிக்கையை வெளியிட்ட வாளாவிருந்தது.

1992 ஏப்ரல்
7 ம் நாள் நாடாளுமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய ஒருமைப்பாட்டுக் குழவின் உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட 35 உறுப்பினர்கள் அயோத்தியாவில் பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள் என்ன தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் பார்வையிடச் சென்றனர். இந்தப் பார்வைக் குழுவுக்கு ஜனதா தளத் தலைவர் எஸ்.ஆர். பொம்மை அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

இந்தக் குழு அயோத்தியாவிலும் பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள்ளும் நீதி மன்ற ஆணைகளும் நீதிமன்ற நெறிகளும் தொடர்ந்து மீறப்பட்டிருக்கின்றன என்ற அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கரசேவை ஜுலை 1992

9 ம் நாள் 2.774 ஏக்கர் நிலத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஆணைகள் புறக்கணிக்கப்பட்டு கரசேவைகள் நடைபெற்றன. நீதிமன்ற ஆணைப் புறக்கணிப்புக்கு நடவடிக்கை ஏதமில்லை. 15 ம் நாள் விஹெச்பி க்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஓர் ஆணையிட்டது. அந்த ஆணை பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள் நடக்கும் அத்தனை கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்திட வேண்டும் என்பதே! நீதிமன்ற ஆணை புறக்கணிக்கப்பட்டது. நடவடிக்கை ஏதமில்லை. ஜுலை 22 1992 அன்று உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்து கட்டுமானப் பணிகளை நிறுத்திட வேண்டும் எனப் பணித்தது. 23 ஜுலை 1992 ல் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்தில் இனி அதன் ஆணைகளை நிபந்தனைகளின்றி அடிபணிந்திட சித்தமாய் இருப்பதாக அறிவித்தார்.

பிரதமர் நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களுக்குத் தந்த உறுதிமொழி

ஜுலை 22 1992 அன்று நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களை – சாமியார்களை அழைத்துப் பேசினார். நீதிமன்ற ஆணைகளைச் செயல்படுத்த மனமில்லாத அவர் சாதுக்களை அழைத்துச் சமாதானம் பேசினார். அந்தச் சாதுக்களிடம் கரசேவையை நிறுத்திட வேண்டும் என்று முறையிட்டார். நான்கே மாதங்களில் தான் மொத்தப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு பிடித்து விடுவேன் என்றும் வாக்களித்தார். கரசேவையை நிறுத்திட வேண்டும் என முறையிட்ட அவர் கரசேவை செய்பவர்களின் மீது எந்தப் பலப் பிரயோகமும் செய்யப்பட மாட்டாது என்றும் ஒரு தேவையற்ற யாரும் கேட்காத வாக்குறுதியைத் தந்தார்.

இந்தக் கடைசி வாக்குறதியின் பொருள் நீங்கள் கரசேவையைத் தொடர்ந்து நடத்தலாம் என்பதே! அத்தோடு சாதுக்கள் கரசேவையாளர்களை பக்கத்தில் கிருஷ்ணனுடைய கோயிலைக் கட்டுவதற்காக அனுப்பினார்கள்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் பொய் சொன்னாரா?

சாதுக்களை சந்தித்து ஒரு வாரத்திற்குப் பின் பிரதமர் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலைச் சொன்னார். தான் சாதுக்களைச் சந்தித்துப் பேசி விட்டதாகவும் பல்வேறு நீதிமன்றங்களிலும் கிடப்பிலிருக்கும் பாபரி பள்ளிவாசல் சம்பந்தப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் உச்சநீதிமன்றத்திடம் இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டிடப் போவதாகவும் அறிவித்தார்.

அத்தோடு பாபரி பள்ளிவாசலைக் கட்டுவதற்கு முன் அங்கிருந்த கோயில் ஏதேனும் இடிக்கப்பட்டதா? என்றொரு வினாவை உச்சநீதிமன்றத்திடம வைத்து விடை கேட்கப் போவதாகவும் அறிவித்தார்.

பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் முன்னர் ஒரு கோயில் இருந்தது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் இந்து வகுப்புவாதிகள் சொல்வதைக் கேட்டாக வேண்டும். இந்த அறிவிப்பைச் செய்த மறுநாள் சாதுக்கள் மிரண்டார்கள். பிரதமரை மிரட்டினார்கள். பிரதமர் தங்களிடம் (சாதுக்களிடம்) பேசிடும் போது நீதிமன்ற விவகாரங்கள் எதையும் பேசவில்லை ஆகவே பிரதமர் பொய் சொல்லுகின்றார். எனவே நாங்கள் பிரதமரிடம் ஒப்புக் கொண்டவற்றிலிருந்து பின்வாங்குகின்றோம் என்றும் அறிவித்தனர்.

ஆனால் பாபரி பள்ளிவாசல் செயல்பாட்டுக் குழு (யுஐடீஆயுஊ : யுடட ஐனெயை டீயடிசi ஆயளதனை யுஉவழைn ஊழஅஅவைவநந) நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.

ஆனால் இந்துத் தீவிரவாதிகள் மத நம்பிக்கை என்பது நீதிமன்ற முடிவுகளுக்கு அப்பாற்பட்டது. ஆகவே இந்த விவகாரத்;தில் நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று அறிவித்தார்கள்.

1992 அக்டோபர் 3031 நாட்களில் .. ..

விஹெச்பி யின் சாதுக்களின் அவை டெல்லியில் கூடி பின்வருமாறு அறிவித்தது:

நீதிமன்ற ஆணைகளைப் பற்றிக் கவலைப் படாமல் டிசம்பர் 6 1992 முதல் கரசேவை துவங்கும். அது கர்ப்பக் கிரகத்திலிருந்து ? அதாவது பாபரி பள்ளிவாசலின் மத்திய (டூம்) பகுதியிலிரந்து ஆரம்பிக்கும். அந்தக் கரசேவை கோயில் கட்டி முடிக்கப்படும் வரை தொடரும்.. ..
1992 நவம்பர் உச்ச நீதிமன்ற உத்தரவு

இந்நாளில் உச்ச நீதிமன்றம் உத்திரப்பிரதேச அரசுக்கு 2.774 ஏக்கரில் எந்தக் கட்டுமானப்பணிகளும் நடக்கக் கூடாது என்றும் ஆணையிட்டது. அத்தோடு கட்டுமானப் பணிகளை அரசு எப்படித் தடுக்கப் போகின்றது என்பதை எழுத்து மூலம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திட வேண்டும் என்றம் கூறியது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த ஆணையின் கீழ் உத்திரப்பிரதேச பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ஓர் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் டிசம்பர் 6 1992 அன்று நடக்கவிருக்கும் கரசேவை சமிக்ஞை அளவில் தான் நடைபெறும். அத்துடன் கீர்த்தனைகள் பாடப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் பிஜேபி தலைவர்களான எல்.கே.அத்வானி முரளி மனோகர் ஜோஸி அவர்களும் கரசேவைக்காரர்கள் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாட வரவில்ல. அவர்கள் முழு அளவில் கோயில் கட்டவே வருகின்றார்கள் என அறிவித்தார்கள்.

ஆனால் பள்ளிவாயிலை இடிப்பதற்குத் தேவையானவற்றையெல்லாம் சங்க் பரிவாரம் முழு அளவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. இதனை அறிந்தும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது.

டிசம்பர் 6 1992 ஞாயிறு அன்று சுமார் 11 மணி அளவில் ஆரம்பித்து மாலை 6 மணி அளவில் பாபரி பள்ளிவாசல் முழமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
http://www.tntj.net/wp-content/uploads/2009/11/71.jpg

இதை பாஜக தலைவர்கள் நேரில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். குடியரசுத் தலைவருக்கும் பிரதமர் அவர்களுக்கும் தவறாமல் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இடித்து முடித்த பின்னர் அந்த இடத்தில் ராமர் – சீதை (குழந்தைகள்) சிலையை வைத்தார்கள்.

1992 டிசம்பர் 8 ம் நாள் மத்திய அரசின் செலவின் கீழ் கரசேவைக்காரர்கள் இலவசமாக அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரசேவைக்காரர்களை இலவசமாக இல்லாங்கொண்டு சேர்த்திட ரெயில்வே துறைக்கு மட்டுமே 300 கோடி செலவு என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

எதிரொலி
1992 டிசம்பர் 6 அன்று மாலை உத்திரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். எல்.கே.அத்வானி அன்று வரை தான் வகித்து வந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சிப் பதவியை இராஜினாமா செய்தார்.

உத்திரப்பிரதேச சட்டசபை கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கே அமல்படுத்தப்பட்டது. பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயிலுக்கு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டன. இதற்கிடையே அயோத்தியிலிருந்த முஸ்லிம்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

நாடு முழவதும் முஸ்லிம்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்ட அறப் போராட்டங்களை நடத்தினர். பல்லாயிரம் முஸ்லிம்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக்கப்பட்டனர். இன்னும் பல ஆயிரம் முஸ்லிம்கள் தடா வின் கீழ் கைது செய்யப்பட்டு நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். 

(நன்றி : விடியல் வெள்ளி டிசம்பர் 1998)


Wednesday, September 29, 2010

குர்ஆனும் விஞ்ஞானமும்


      
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsK8-XbS0C3yjdd9RPAYiG7kVNF5Mrluh7wSk0DtqErRnYp1AvraGrlhmjKZYf-by1ob4M9GnEqbkR27czhxnZ64lOjYwed_ZaEIG4kAb90g4bRabojrhtOY3o34jDf0P5hT6YJSrIYJY/s1600/Bismillah_2.JPG
        திருக்குர்-ஆன் உலக மக்கள் யாவரும் நேர்வழிப்பெறும் பொருட்டு உலக இரட்சகனால் வழங்கப்பட்ட இறுதி மற்றும் கடைசி வேத வெளிபாடு.

     ...இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக. (6:90 சுருக்கம்)
      இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். (81:27)

        ஆக,தன்னை மக்களுக்கான ஒரு தூய வழிக்காட்டியாகவே பிரகனப்படுத்துகிறது. மேலும் இது இறைவனின் வேதம் என்பதை மக்களுக்கு பறைச்சாற்றும் முகமாக இதில் எந்த ஒரு வசனமும், பிறிதொரு வசனத்திற்கும் முரண்படாமல் இருக்கிறது எனவும் உரைக்கிறது.

    அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)

மேலும் பார்க்க: 18:1, 39:23,28
        இது இறைவேதம் என்பதில் எவரேனும் சந்தேகம் கொண்டால் குர்-ஆனிலுள்ளதை போன்று ஒரெயொரு வசனத்தையாவது கொண்டு வர சொல்லுகிறது

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். (2:23)
மேலும் பார்க்க: 10:38, 11:13,17:88
            14 நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் விடப்பட்ட சவால் இன்னும் முறியடிக்கவும் படவில்லை.உலக அழிவு நாள் வரையிலும் இதற்கு பதில் தர வாய்ப்பும் இல்லை.கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறுபாடற்றது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது,பொய்யோ தேவையற்ற எந்த ஒரு செய்தியோ குர்-ஆனில் இடம் பெறவில்லை.

      அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது. (41:42)

       சுருங்கக்கூறின்,குர்-ஆன் தனிமனித வாழ்க்கைக்கு ஏதுவாக அனைத்து நடைமுறை செயல்களிலும் ஒருவன் தன் சுய சிந்தனை அடிப்படையில் செயல் பட நன்மைகளையும், தீமைகளையும் பிரித்தறிவிக்கும் இறைவனால் அவன் புறத்திலிருந்து வழங்கப்பட்ட ஒரு தூய வாழ்வு நெறி என்பதை அறியலாம்.

நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.(39:41)
மேலும் பார்க்க:2:2, 17:9,82, 18:2, 19:97, 20:2, 27:2, 31:3, 43:44,50:45,80:11)
          குர்-ஆன் தன் நிலை,செயல்பாடுகளை விரிவாக விளக்கி அதனை நிராகரிப்போருக்கு ஓர் அறைகூவலையும் முன்வைக்கிறது.எனவே குர்-ஆனை எதிர்த்து கூப்பாடு போடுவோர் முதலில் அது கூறும் சவால்களை ஏற்க முன் வரவேண்டும். இதை தொடாமல் விஞ்ஞான பிழை குர்-ஆனில் விளைந்துள்ளது என கூறுவோர் கிழ்காணும் பதிவையும் பார்வையிடவும்

                   மேற்கூறிய விளக்கங்களால் குர்-ஆன் அருளப்பெற்ற காரணம் தெளிவாக விளங்கும். இஃதில்லாமல் குர்-ஆன் ஒரு விஞ்ஞான நூலாகவோ, மருத்துவ,வரலாற்று நூலாகவோ எங்கேணும் தன்னை பெருமை ப்படுத்தி கூறவில்லை.அவ்வாறு மனித சமுகத்திற்கு தேவையான உபதேசங்களை வழங்கும் வழியில் மனிதர்கள் நல்லுணர்வு பெறும் பொருட்டு முன்சென்ற சமுகங்களின் வரலாறுகளையும், சிந்தனையை தூண்டும் பொருட்டு அறிவியல் மேற்கோள்களும் குர்-ஆன் முழுவதும் இரைந்து கிடக்கிறது.அறிவியல் உண்மைகளை உலகுக்கு முன்னிறுத்தி தான் தன்னை இறை வேதம் என பறைச்சாற்றி கொள்ள வேண்டிய அவசியம் அதற்கில்லை.அதன் தெளிவான எழுத்து நடை, உயர்ந்த சிந்தனை கருத்தோட்டம் ,முரண்பாடின்மை, எக்காலத்திற்கும், எத்தகையை மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான நடைமுறை சாத்தியக்கூறுகள்,எதை சொல்ல விழைந்ததோ அதை குறித்த தெளிவான பார்வை விரிவான விளக்கம்- குற்றவாளிகளை குறைக்க சட்டம் இயற்றாமல்,குற்றங்களை குறைக்க சட்டம் இயற்றிய முறையான இறையாணை- இதுவே போதுமானது திருக்குர்-ஆன் இறைவேதம் என எற்க!

      எனினும் திருக்குர்-ஆனில் விஞ்ஞான உவமைகளும், உண்மைகளும் மெல்லிய ஊடாக வலம் வருவதற்கு

1.இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவுறுத்துவதற்காகவும்,

2.மனிதர்களிடத்தில் தம் அத்தாட்சியை நிறுவுவதற்காகவும்,

3.தமது வல்லமையே மனிதர்கள் மத்தியில் தெளிவுறுத்துவதற்காகவும்  விஞ்ஞான விவரிப்புகள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

    இதனை இந்த இறை வசனம் மூலம் எளிமையாக உறுதிப்படுத்தலாம்.
சூரா அந்நம்ல்(27) வசனம் 18 மற்றும் 19

    இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று.

   அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், "என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!" என்று பிரார்த்தித்தார்.

    *இவ்வசனத்தில் இரு சம்பவங்கள் கூறப்படுகின்றன, எறும்புகள் சுலைமான் நபி குறித்தும் அவர்கள் படை குறித்தும் சக எறும்புகளிடம் அறிவிக்கிறது.
*அது கேட்டு நபி சுலைமான் அவர்கள் சிரித்தார்கள்.

     இவ்விரு வாக்கியங்களில் எறும்புகள் பேசியது என்ற நிகழ்வு முன்னிலைப்படுத்த பாடாமல், அவை பேசும் மொழியை புரிந்துக்கொள்ளும் ஆற்றல் நபியவர்களுக்கு (இறைவன் புறத்திலிருந்து) அருட்கொடையாக வழங்கப்பட்டதே இங்கு முன்னிலைப்படுத்தப்படுகிறது,குர்-ஆனை பொருத்தவரை இங்கு சுலைமான் நபியவர்களின் படையின் தன்மை குறித்தே விவரிக்கிறது.

    எனினும் இங்கு எறும்பு பேசிய விஞ்ஞானம் இலைமறை காயாக உணர்த்தப்படுகிறது. இன்றைய அறிவியலும் இது குறித்து முரண்பாடான தகவல்கள் தந்தால் குர்-ஆனிய வார்த்தைகள் பொய்யென ஆகும்.மாறாக எறும்புகளுக்கும் பேசுமொழி உண்டு,அவை தன்னின தொடர்புக்கு கமிஞ்சை வடிவிலான உரையாடலை மேற்கொள்கிறது மேலும் அவைகளுக்கிடையே கட்டளைகளும், பின்பற்றுதலும் சீராக பரிமாற படுகின்றன என்று இவ்வசனத்திற்கு வலுச்சேர்க்க மேலதிக விபரத்தையும் இன்றைய விஞ்ஞானம் தருகிறது.

   ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது. ((taken from wikipida))
 உதாரணத்திற்காக தான் இங்கு ஒன்று
     இதுபோலவே குர்-ஆன் கூறும் ஏனைய விஞ்ஞான கூற்றுக்களும்.,
 இன்று விஞ்ஞான விளிம்பில் இருக்கும் எண்ணற்ற நிருப்பிக்கப்பட்ட உண்மைகளும்,நிருப்பிக்கப்பட இருக்கும் ஏனைய நிகழ்வுகளும் குர்-ஆனின் ஒரு அறிவியல் சார்ந்த எந்த கருத்தையும் எதிர்க்கவில்லை. மாறாக நிதர்சனமாக நிருபணமாகும் உண்மைகளுக்கு செவி சாய்க்கவே செய்கிறது.எனினும் குர்-ஆன் அறிவியலோடு முரண்படுவதாக கூக்கூரலிடுவோர் எந்த வசனம் அறிவியல் முரண்பாட்டை ஆமோதிக்கிறது என்பதை தெளிவுறுத்தட்டும்.அஃதில்லாமல் ஏனைய குர்-ஆனின் விஞ்ஞான நிலை அறிவியல் விளக்க உண்மைகளுக்கு கீழ் காணும் சுட்டியை பார்வையிடுக., இவை யாவும் இஸ்லாமிய இணையங்களில் தொகுக்கப்பட்டவையே தவிர,இஸ்லாமியர் தொகுத்தவையல்ல மாறாக மேற்கத்திய துறைச்சார் வல்லுனர்களால் நம்பகதகுந்த அடிப்படையில் திரட்டப்பட்ட அறிவியல் பதிப்புக்கள்.

கருவியல் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/KARU.HTM

மலைகள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/malai.htm

உலகத் தோற்றம் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/world.htm

மனித மூளை குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/brain.htm

ஆறுகள் மற்றும் கடல்கள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/sea.htm

ஆழ்கடல் அதனுள் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/ulalai.htm

மேகங்கள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/eraimaililscience.htm

மனித வளர்ச்சியின் படிநிலை குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_creation_human.htm

கரு வளர்ச்சி குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_embryology.htm

சிசுவின் உள்/வெளித்தோற்றம் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_in_out.htm

வலி உணரும் நரம்புகள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_skin.htm

வானவியல் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_astronomy.htm

ஒட்டக படைப்பைக்குறித்து
http://www.tamilislam.com/science/camel_science.htm  

மேலும்
*விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
*பாலின் உற்பத்தி குறித்து
*அனைத்து படைப்பினங்களிலும் ஜோடி
*பெருவெடிப்பு கொள்கை
*சூரியனும் இதர கோள்களும்
*ஓரங்களில் குறைந்து வரும் பூமி
*தேனின் மருத்துவ குணம் -ஆகியவைப் பற்றி அறிய
http://www.tamililquran.com/quranscience.asp

 துறைச்சார் வல்லுனர்களின் குர்-ஆன்,அறிவியல் குறித்த ஒப்பிட்டு எண்ணப்பதிவு This is the TRUTH)-VIDEO
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/scientist.htm

    அநேக இணைய பக்கங்களில் இதைப் போன்ற ஆயிரமாயிரம் அறிவியல் உண்மைகள் குர்-ஆனின் வசனங்களோடு கைக்கோர்த்து அணியணியாய் நிற்கின்றன. வேண்டுவோர் இப்பக்கங்களை சந்திக்கட்டும்,பின் சிந்திக்கட்டும்.,

       பொதுவாக எந்த ஒரு மத சிந்தாந்தாமோ, சமயம் சாரா கொள்கை கோட்பாடுகளோ, ஏனைய சமுகம் சார்ந்த சட்ட திட்டங்களோ தான் கூறும் கருத்துகளை ஏற்று மக்களை அதன்படி நடக்கவே பணிக்கும், மாறாக அத்தகையை அறவுரைகளை பேணுவதோடு நின்று விடாமல் அது கூறும் எந்த ஒரு செயல்பாடுகளையும் சிந்தித்து பின்பற்றுவதற்கு தகுந்ததா...என மனித அறிவை செயல்படுத்த தூண்டும் தனித்தன்மை இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு என்பதை குர்-ஆன் எவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறது பாருங்கள்

  மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)

 இவ்வாறு தனிமனித சிந்தையே தட்டி எழுப்பும் ஓர் உயர் வேதம் மொத்த உலக அறிவியலை முரண்பாடென்னும் பாலுட்டி உறங்க செய்திடுமா..?
   
                                                    அல்லாஹ் மிக்க அறிந்தவன்

by brother GULAM

சுற்று சூழல் மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன ?



                                      பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixSXuPIClGp3nfKmr7BypgYkIPjlZDiocqRv8ioeNOLRIeXZi0SHapVYVKJ3b4DQte4otzfFohVbmNnZkaOGZekGjTR8Rq7TIQtZOkBmffizwmJScP8Nsa27vYjdxssFsidjmLRr627hbJ/s400/EarthHeartSpace.gif

சுற்று சூழல்  மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன ?
பதில்

சுற்று சூழல் என்றால் என்ன?
மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு 5 வகையான ஏற்பாடுகளை இறைவன் வகுத்துள்ளான். அவைகளாவன:

1)      நிலம்
2)      நீர்
3)      காற்று
4)      ஆகாயம்
5)      நெருப்பு

இறைவன் வகுத்து வைத்துள்ள இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர இயலுமே தவிர இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அதிகம் அடையும்.
படைப்பால் நீங்கள் மிகக் கடினமா(னவர்களா?) அல்லது வானமா? அதனை அவன் படைத்தான்-அ(வ்வானத்)தினுடைய முகட்டை அவன் உயர்த்தினான்; பின்னர் அதனை ஒழுங்குபடுத்தினான். அதனுடைய இரவை அவன் இருளாக்கினான். அதனுடைய பகலையும் (சூரிய வெளிச்சத்தைக் கொண்டு) வெளியாக்கினான்; பூமியை அதற்கு பின் அவன் விரித்தான். அதிலிருந்து அதன் தண்ணிரையும் அதன் (புற்பூண்டு, தானியங்கள் முதலிய) மேய்ச்சல் பொருளையும் வெளிப்படுத்தினான். மலைகளையும் அவன் நிலைநாட்டினான். உங்களுக்கும், உங்களுடைய கால்நடைகளுக்கும் சுகமளிக்கும் பொருளாக (இவற்றை அமைத்தான்).  (அல்குர்ஆன்: 79:27:33)

மேற்கண்ட இந்த அரிய செய்திகளை எடுத்துரைக்கும் இறைவனாகிய அல்லாஹ் இந்த புவியின் நிலப்பரப்பில் நிகழும் அரிய செய்திகளை அழகாக வர்ணிக்கிறான் அதையும் சற்று அலசுவோம்.

அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்;. அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம். பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக – ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.
(அல்குர்ஆன் 06:99)

சுற்றுச் சுழல் மாசுபாடு என்றால் என்ன?
  • தொழிற்சாலை கழிவுகள்
  • ரசாயண திரவம் மற்றும் கதிரியக்க கசிவுகள்
  • வாகனங்களின் இறைச்சல்
  • வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை
  • மனிதன் புகைக்கும் பீடி, சிகரேட், கஞ்சா
  • பிளாஷ்டிக் மற்றம் பாலித்தீன் பயன்பாடுகள்
  • மலைகளையும், காடுகளையும் அழித்து மரம் வெட்டுதல்
  • மனித கழிவுகளை நேராக பருகும் நீர்நிலைகளில் விடுதல்
  • இரசாயண உரம், புச்சிக்கொள்ளி மருந்துகளின் பயன்பாடு

நிலம் மாசுபடுததல்
தொழிற்சாலை கழிவுகளும், ரசாயண திரவங்களும் அசுத்தமுள்ள நிலையிலும் விஷத்தன்மை கொண்ட நிலையிலும் மண்ணில் செலுத்தப்படுவதால் மண்ணின் மகத்துவம் கெட்டுவிடுகிறது. மேலும் பிளாஷ்டிக் பொருட்களும் பாலித்தீன் பைகளும் மண்ணில் புதையுண்டு போவதால் விளைநிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க கனிகளையும், செடி கொடிகளையும் தாவரங்களையும் வளரவிடமால் தடுக்கிறது.

நீர் மாசுபடுதல்
மனிதனின் அத்தியாவசிய நீர் தேவையை கிணறுகளும், ஏரி, குளம், குட்டைகளும் தற்போது போரிங் பைப்புகளும் நிவர்த்தி செய்கின்றன. ஆனால் இந்த அரிய பொக்கிஷத்தை கூட தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் அதிகமான அளவில் நீர்நிலைகளில் நேரடியாக கலப்பதால் நீர் மாசுபடுபவதுடன் அந்த நீரை பருகுவதால் குடல் நோய்களும் மனித பயன்பாட்டிற்கு உபயோகிப்பதால் தோல் நோய்களும் ஏற்படுகிறது. இவை மனிதனுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காற்று மாசுபடுதல்
சுவாசிக்கும் காற்றில் மனிதன் ரசாயன கதிரியக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொழிற்சாலைகளின் கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. இதுமட்டுமல்லாமல் மனிதன்  பீடி, சிகரெட், கஞ்சா போன்ற கொடிய தற்கொலைக்கு ஈடான விஷத்தை உள்ளே இழுத்து அதை வெளியிடுவதால் அருகில் இருப்பவர்களுக்க மூச்சுத்திணரல், சுவாச உறுப்புக்களில் கோளாறுகள் மற்றும் கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கிக்கொள்கிறான்.

ஆகாயம் மாசுபடுதல்
இன்றைய நவீன யுகத்தில் சாட்டிலைட்டுகள், வின் கேமிராக்கள் என்று அதிக அளவிலான சமிங்கை தரும் பொருட்கள் அவ்வப்போது ஏவப்படுகிறது இவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செயலிழந்துவிடுகின்றன மேலும் இந்த வின்கலங்கள் வானவெளியில் அப்படியே அநாதைகயாக மிதந்து வருவதால் புதிய செயற்கை கோள்களுக்கு இடையுறு ஏற்படுத்துவதுடன் வான் மண்டலத்தில் குப்பைகளாக சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கின்றன. இந்த வின்வெளி குப்பைகள் புவியின் ஈர்ப்பு மையத்தை தொடும்போது அவை நிலத்தை நோக்கி ரசாயண குண்டுகள் போல வேகமாக வந்து வெடிக்கின்றன. இவைகளின் வெடிப்புகளால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அங்கு கதிரியக்கம் வெளிப்பட்டு மக்களின் உடலில் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகின்றன.

நெருப்பு மாசுபடுதல் (உலக வெப்பமயமாதல்)
நெருப்பு மாசுபடுதலை இங்கு நாம் தட்ப வெப்ப நிலை மாசுபடுதலை மையமாக வைத்து கூற இயலும் அதாவது புவி நிலப்பரப்பில் நிலம், நீர், காற்று ஆகியன மாசுபடுவதால் இந்த புவியின் தட்பவெப்ப சீதோஸ்ணத்தில் குளருபடியை ஏற்படுத்தி அண்டார்டிகா போன்ற பனிப்பிரதேசங்களை உருகச் செய்கிறது இதனால் கடல் சீற்றங்கள் எற்படுவது மட்டுமின்றி சிறிய குட்டித் தீவுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. மேலும் உலக வெப்ப மயமாதல் போன்ற பேரழிவுகளுக்கு இந்த நெருப்பு மாசுபடுதலும் ஒருவகையில் காரணமாக அமைந்துவிடுகிறது.

சுற்று சூழல்  மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன ?

இன்னும் அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும் அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும் (இதுவரையில்) நீங்கள் மித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசாக ஆக்கிவிட்டான், மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் (அல்குர்ஆன் 33:27)

இந்த வசனத்தை சற்று உண்ணிப்பாக ஆராய்ந்து பாருங்கள் அல்லாஹ் தன் படைப்புகளை நமக்கு அணுபவிக்க வலியுறுத் துவதோடு நிற்காமல் அவைகள் நமக்கு வாரிசுகள் என்றும் கூறுகிறான்.

சிந்தித்துப்பாருங்கள் நம்முடைய பெற்றோருக்கு நாம் வாரிசுகளாக இருக்கும் பட்சத்தில் நம் பெற்றோரை நாமே அழிக்க முற்படுவோமா அப்படித்தானே அல்லாஹ்வின் படைப்புகளான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு மற்றும் இன்னபிற படைப்புகளுக்கு நாம் வாரிசுகாளக நியமிக்கப்பட்டிருக்கிறோம் இப்படிப்பட்ட அரிய பொக்கிஷங்களை நாமே முன்வந்து அழிக்கிறோம்.

வாருங்கள் நபிமொழிகளை அலசுவோம்
சாபத்திற்குரிய இரு காரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, ஸஹாபாக்கள் “அவ்விரண்டும் எவை?” என வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) மனிதர்கள் (நடமாடும்) பாதையில் மலம் கழிப்பதும், மனிதர்களுக்கு நிழல் தரும் இடங்களில் மலம் கழிப்பதுமாகும்.” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபுஹுரைரா(ரழி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவூது

உங்களில் எவரும் தேங்கிக் கிடக்கும் நீரில் சிறுநீர் கழித்து விட்டுப் பிறகு அதில் குளிக்க வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி­)   நூல்: முஸ்லி­ம் 475

இந்த நபிமொழியில் மனிதர்கள் நடமாடும் பாதையிலும், நிழல் தரும் இடங்களில் மலஜலம் கழிப்பதையும் பற்றி எடுத்துரைக்கப்பட்டு வண்மையாக எச்சரிக்கை விடப்பட்டள்ளது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் மற்றும் மலஜலங் களுக்கே இந்த அளவுக்கு எச்சரிக்கை இருக்கும்போது தொழிற் சாலைக்கழிவுகளுக்கும் இன்ன பிற கழிவுகளுக்கும் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இந்த மனிதவர்க்கம் சிந்திக்க வேண்டும்.

…………..நாமே கல்வியை கற்றும் கொடுத்தோம். அல் குர்ஆன் (அல்குர்ஆன் 18: 65)
ஒரு மனிதனுக்கு கல்வியை கொடுப்பதும் அல்லாஹ்வின் அதிகாரமாகும். கல்வியறிவு பெற்ற மனிதன் தொழிற்சாலைகளை உருவாக்க கற்றுக்கொள்கிறான் ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி சிந்திக்க முற்படுவதில்லை. ஒருவேளை மனிதன் இந்த கல்வியைக் கொண்டு சிந்தித்தால் அவன் வெற்றி பெறுவது எளிது மாறாக கற்ற கல்வியால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை சிந்திக்காமல் இருப்பானாகில் நம்முடைய சந்ததிகளுக்குத்தான் அது கேடாக அமைந்துவிடும்! நம்முடைய சந்ததியினரின் எதிர்கால கனவுகள் நம் கைகளில்தான் உள்ளது எனவே நாம்தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.
 
சுற்றுச்சூழல் மாசுபாடுகளை அல்லாஹ் ஏற்படுத்தவதில்லை மாறாக மனிதன் ஏற்படுத்துகிறான் எனவே இதை தடுக்க வேண்டிய ஆற்றல் மனிதனிடம் நிறைவாக உள்ளது மனிதன் சிந்திக்கத் தவறுகிறான்.

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:72.)

by Siraj Abdullah

Tuesday, September 21, 2010

நபித்தோழர்களின் அழகிய வரலாறு


நபித்தோழர்களின் அழகிய வரலாறு
http://www.satyamargam.com/images/stories/news10/battlefield.jpg


1. ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)

2. கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)

3. நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ (نُعَيْمِ بْنِ مَسْعُودٍ الْأَشْجَعِيِّ) (ரலி)

4. ஆஸிம் இப்னு தாபித் (عَاصِمَ بْنَ ثَابِتِ بْنِ أَبِي الْأَقْلَحِ) (ரலி)

5. உத்பா பின் கஸ்வான் - عُتبة بن غَزْوان (ரலி)

6. ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ

حَبِيبِ بْنِ زَيْد بْن عَاصِم الأنْصَارِيّ (ரலி)


7. ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ

‏ رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِيُّ (ரலி)


8. அபூதர்தா

أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ (ரலி)


9. ஃபைரோஸ் அத்-தைலமி
فيروز الديلمي (ரலி)


10. ஹகீம் பின் ஹிஸாம்

‏ (ரலி)‏ حَكِيمِ بْنِ حِزَامٍ


11. அப்பாத் பின் பிஷ்ரு (ரலி)

عباد بن بشر


12. அபூதல்ஹா அல் அன்ஸாரீ (ரலி)

‏أَبُـو طَـلْحَةَ أَنْصَـارِيّ


13. தாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அல் அன்ஸாரீ (ரலி)

ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ


14. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)

عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ


15. வஹ்ஷி பின் ஹர்பு (ரலி) وحشي بن حرب

16. ஸைது இப்னு தாபித் (ரலி)

(زيد بن ثابت )

Monday, September 20, 2010

ஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுவது - அறிவியலுக்கு முரணா ?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsK8-XbS0C3yjdd9RPAYiG7kVNF5Mrluh7wSk0DtqErRnYp1AvraGrlhmjKZYf-by1ob4M9GnEqbkR27czhxnZ64lOjYwed_ZaEIG4kAb90g4bRabojrhtOY3o34jDf0P5hT6YJSrIYJY/s1600/Bismillah_2.JPG


குர்-ஆனில் ஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இதனடிப்படையில், இவ்வாக்கியத்தை உற்று நோக்கும் எவருக்கும் பொதுவாக இரண்டு அடிப்படை சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பே!

 
1.சர்வ வல்லமையுள்ள கடவுள் என சொல்லபடுபவர் ஏன் உலகை படைக்க 6 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

2.உலக உருவாக்கம் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என அறிவியல் விஞ்ஞானம் சொல்லும்போது 6 நாட்களில் உலகை படைத்தாக சொல்லுவது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறதே...?
            
 குர்-ஆன் அறிவியலோடு உடன் படுகிறது என சொல்கிறார்கள்.... பார்த்தீர்களா... எவ்வளவு பெரிய விஞ்ஞான முரண்பாடு. ஆஹா.....    குர்-ஆன் பொய், இஸ்லாம் மாயை...முஹம்மது நபி தான் குர்-ஆனை இயற்றினார்...என இதர இணையங்களில் கட்டுரை எழுதும் தோழர்கள் இஸ்லாமை தவறான புரிதலுடன் அணுகுகிறார்கள் அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் காண்கிறார்கள் என்பது தான் உண்மை!
     
மேற்குறிப்பிட்ட இரு கேள்விகளும் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அழகான, திறமையான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் திறமையான கேள்விகளுக்கு பதில் இல்லை என்ற விதியும் இல்லை.குர்-ஆனில் இதற்கான பதில் இல்லாமலும் இல்லை.தன்னின் கேள்விகளில் ஏற்படும் திருப்தியால் கிடைக்கும் பதிலில் விரக்திதான் மிஞ்சும்.எனவே நியாயமான தன் கேள்விகளுக்கு கிடைக்கப்பெறும் பதில் நடுநிலையாக உள்ளதா..என சிந்திக்க கடமைப்பட்டு தொடருங்கள்
    
முதலில் இரண்டாம் கேள்விக்கான தெளிவை பார்த்தப்பின் முதல் கேள்விக்கு செல்லலாம்...

திருக்குர்-ஆனில் 07:54, 10:03,11:07, 25:59, 50:38, 57:04 ஆகிய வசனங்கள் 6
நாட்களில் உலகை படைக்கப்பட்டது குறித்து பேசுகிறது
   இவ்வசனங்களில் நாட்கள் (DAYS) என பொருள்கொள்ளும் வகையில்
அமைந்த மொழிப்பெயர்ப்புக்கு நேரடியான அரபு மூல சொல் அய்யாம் (AYYA'M). இது பன்மையே குறிக்கும் சொல்.இதன் ஒருமை யவ்ம் என்பதாகும். பொதுவாக காலத்தை குறிக்கும் அரபு சொல்லாக இது பயன் படுத்தப்பட்டாலும், இச்சொல்லுக்கு படிகள்,கட்டங்கள்,நிலைகள் (STEPS/ STAGES )என்ற பொருளும் கொள்ளலாம்.அதை அடிப்படையாக வைத்து இப்போது குர்-ஆன் கூறும் அவ்வசனங்களை பார்ப்போம்.காண்போரின் வசதிக்காக அவ்வசனங்களின் அரபு மூலங்களை அப்படியே ஆங்கிலத்திலும் தருகிறேன்,

அத்தியாயம் :அல்-அஃராஃப் (07)
வசனம் :54
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்
Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yughshee allayla a(l)nnah[a]ra ya[t]lubuhu [h]atheethan wa(al)shshamsa wa(a)lqamara wa(al)nnujooma musakhkhar[a]tin bi-amrihi al[a] lahu alkhalqu wa(a)l-amru tab[a]raka All[a]hu rabbu alAA[a]lameen(a)

அத்தியாயம் :யூனுஸ் (10)
வசனம் :03
     நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
    Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yudabbiru al-amra m[a] min shafeeAAin ill[a] min baAAdi i[th]nihi [tha]likumu All[a]hu rabbukum fa(o)AAbudoohu afal[a] ta[th]akkaroon(a)

அத்தியாயம் :ஹுது (11)
வசனம் :7
        மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
   Wahuwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min wak[a]na AAarshuhu AAal[a] alm[a]-i liyabluwakum ayyukum a[h]sanu AAamalan wala-in qulta innakum mabAAoothoona min baAAdi almawti layaqoolanna alla[th]eena kafaroo in h[atha] ill[a] si[h]run mubeen(un)

அத்தியாயம் :அல்-ஃபுர்கான்(25)
வசனம் :59
  அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்;. பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான். (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
    Alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi a(l)rra[h]m[a]nu fa(i)s-al bihi khabeer[a](n)

அத்தியாயம் :காஃப் (50)
வசனம் :38
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
   Walaqad khalaqn[a] a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min wam[a] massan[a] min lughoob(in)

அத்தியாயம் :அல் ஹதீத்(57)
வசனம் :04
அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
 Huwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yaAAlamu m[a] yaliju fee al-ar[d]i wam[a] yakhruju minh[a] wam[a] yanzilu mina a(l)ssam[a]-i wam[a] yaAAruju feeh[a] wahuwa maAAakum ayna m[a] kuntum wa(A)ll[a]hu bim[a] taAAmaloona ba[s]eer(un)

  மேற்கூறிய அரபு மூல வார்த்தையோடு இவ்வசனங்களை அணுகும்போது 6 நாட்கள் எனும் சொல்லுக்கு பொருத்தமாக,உலகம் 6 படிகளில், 6 நிலைகளில், 6 கட்டங்களில் படைக்கப்பட்டது என பொருள் கொள்ளலாம். அதுதான் சரியானதும் கூட...
   ஆக நாள் என்ற பதம் மேற்கூறிய வார்த்தைகளின் அடிப்படையிலேயே தமிழ் மற்றும் ஏனைய மொழிப்பெயர்ப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே திருக்குர்-ஆன் கூறும் உலக படைப்பு 6 கட்டங்களாக நிகழ்த்தப்பட்டது என்பதை அரபு மூலத்துடன் ஒப்பிடும் சிந்தனையாளர் எவரும் மறுக்க மாட்டார்கள்.

இல்லை...இல்லை நாட்கள் என தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது எனவே அது குறிப்பிட்டது 6 நாளை தான் என மொழிப்பெயர்ப்பை பற்றிப்பிடித்து கொள்ளும் நண்பர்களுக்காக..  6 நாட்கள் தான் என்ற ரீதியில் குர்-ஆனை அணுகினாலும் மேற்குறிப்பிட்ட அதன் நிலைப்பாட்டை உண்மைப்படுத்தலாம்.

குர்-ஆன் அவ்வசனத்தில் குறிப்பிடும் நாள் என்ற பதமும்,நடைமுறையில் நம் வழக்கில் உள்ள நாள் என்ற பதமும் ஒன்றா...?

 பொதுவாக, நாம் சூரியனை மையமாக வைத்து பூமி தன்னைத்தானே ஒரு முறை சுழலுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவான 24 மணி நேரத்தை ஒரு நாள் என்கிறோம்.ஆக இதை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உலகம் படைக்கப்படுவதற்கு எடுத்துக்கொண்ட கால அளவு
                                                   6 X 24 = 144
                   144 மணி நேரத்தில் உலகம் படைக்கப்பட்டது என்பது அறிவுக்கு பொருந்தாத வாதம் எனவே குர்-ஆன் கூறுவது பொய் எனலாம்.இந்த கணக்கீடு சரி,ஆனால் அந்த காலஅளவீட்டையா குர்-ஆன் சொல்கிறது?ஆமாம் அந்த அளவீட்டைதான் சொல்கிறது என குர்-ஆனை பொய்யாக்க விளைவோர் கூறுவார்களேயானால் உண்மையாகவே பொய்யாக்குகிறார்கள்.,  குர்-ஆனை அல்ல விஞ்ஞானத்தை.

ஒரு நாளை கணக்கிடுவதற்கு இரு செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒன்று பூமி தன்னில் தானே சுழல வேண்டும்.அதே நேரத்தில் சூரியனையும் மையமாக கொள்ள வேண்டும்.அப்போது தான் ஒரு நாள் என்பது நமக்கு கிடைக்க சாத்தியம்.ஆனால் மேற்கூறப்பட்ட திருக்குர்-ஆனிய வசனங்களை சற்று பொறுமையாக, கவனமாக பார்வையிடுங்கள்.

அவ்வசனங்கள் பூமியும்,வானமும் படைக்கப்ப்ட்டதே 6 நாட்களில் என்கிறது ,ஆக நாட்களை கணக்கிடும் பூமியே அதுவரை அங்கு உருவாகவில்லை எனும்போது எதன் அடிப்ப்டையில் அல்லாஹ் இங்கு நாட்களை கணக்கிட முடியும்?ஆக அல்லாஹ் நாட்கள் என குறிப்பிடுவது மனிதர்கள் கூறும் கால கணக்கின் அடிப்படையில் அல்ல என்பதும் பிரத்தியேகமாக அவன் உண்டாக்கிய வேறு கால அளவு என்பதும் தெளிவு!

மேலும் வசனம் 50:03 ல் இறுதியாக- "எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை" என முடிக்கிறான். அவனது வல்லமையின் வெளிபாடாக கூறும் இவ்வாசகத்தில் ஓர் அறிவியல் உண்மையும் ஒளிந்துருக்கிறது.பொதுவாக களைப்பு என்பது சிறு செயல்கள் மற்றும் குறைவான நேரத்தில் செய்து முடிக்கும் பணியின் காரணங்களுக்காக ஏற்பாடது.மாறாக அதிக பளுவாக வேலைகளோ,தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கடின செயல்களாலோ ஏற்படுகிறது என்பதை கடைநிலை பாமரன் கூட அறிவான்.தான் மேற்கொண்ட உலக படைப்பின் கால அவகாசம் நீண்ட,நெடியது என்பதையும் அவ்வாறு மேற்கொண்ட போதிலும் சிறு களைப்பும் தம்மை வந்தடையவில்லை என்று அவன் குறிப்பிடுவதிலிருந்தே -சிந்திக்கும் எவருக்கும் அவனது இவ்வசனம் அத்தாட்சியாக இருக்கும்.

ஆக அய்யாம் என்ற அரபு மூலத்தின் அடிப்படையில் அணுகினாலும், நாட்கள் என்ற மொழிப்பெயர்ப்பு பதத்தின் வழி அணுகினாலும் 6 நாட்கள் உலக படைப்பு அறிவியலுக்கு முரணானதல்ல.

இத்தோடு சேர்த்து இங்கு ஒரு துணை விளக்கம்
   அத்தியாயம் 41 வசனம் 9,10,11&12 இவ்வனங்களை மேற்கோள் காட்டி சிலர் உலகம் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறி அது ஏனைய 6 நாட்கள் குறித்த வசனங்களோடு முரண்படுவதாக நிறுவ முயல்கிறார்கள்.அந்த வசனங்கள் இதோ,
  "பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) கூறுவீராக.

அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான் அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான் இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).

பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின.

ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

இதில் முதல் வசனத்திற்கு - 2 நாட்கள்
இரண்டாம் வசனத்திற்கு        -4 நாட்கள்
நான்காம் வசனத்திற்கு           -2 நாட்கள்
  ஆக 2+4+2 =8 நாட்கள் என்கிறார்கள்.

இந்த எண்ணிக்கையை கூட்டினால் சரிதான். ஆனால் இங்கு அதை கூட்டவேண்டிய அவசியமென்ன., ஏனெனில் குர்-ஆன் கூறும் இவ்வசனங்கள் கூட்டல் அடிப்படையில் நாட்களை வகைப்படுத்தவில்லை.மேற்கண்ட நாளளவில் நடைபெற்ற செய்கையை பற்றித்தான் குறிப்பிடுகிறது.ஏனெனில் இறுதியாக கூறும் வசனத்தில் குறிப்பிடும் அந்த இரண்டு நாட்களில், அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் என்றே கூறுகிறது .மாறாக வானம் படைக்கப்பட்டதாக கூறவில்லை. எனவே மேற்கூறிய வசனங்கள் 6 நாட்கள் உலக படைப்பின் விவரிப்புகளே!

இப்பொழுது முதல் கேள்விக்கு வருவோம்.,
சர்வ வல்லமையுள்ள இறைவன் உலகை படைக்க நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது ஏன்?

குர்-ஆனில் இறைவன் வல்லமையை குறித்து எந்த வசனமும் இல்லாதிருந்தால் அவனது இத்தகையே நீண்ட கால படைப்புக்கு விடை தேவைப்ப்டலாம்.ஆனால் அவன் தன் வல்லமையே குறிப்பிடும்பொழுது
  ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.(16:40)

(மேலும் பார்க்க:3:59, 36:82, 40:68,46:33,50:38)
     ஆக இறைவனின் ஒரு படைப்புருவாக்கத்தை பற்றி மேலதிக விளக்கம் இல்லாமலே எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.எனினும் சில விசயங்களை தான் நாடிய விதத்தில் செய்கிறான்.சிலவற்றை தனது அத்தாட்சிக்காக நிறுவுகிறான்,சிலவற்றை தாமதித்து வெளியாக்குகிறான்.சிலவற்றை வெளிப்ப்டையாக அல்லது அந்தரங்கமாக தெரிய செய்கிறான்- தங்களுக்கு எந்த பதில் பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் ஏனெனில்

  அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (21:23)

                                                அல்லாஹ் மிக்க அறிந்தவன்


by brother GULAM

Saturday, September 18, 2010

வெட்கம் ஈமானில் உள்ளதாகும்



காயல்பட்டினத்தில் வெள்ளி கிழமை அன்று ஜும்மாவில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம்.

வெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்ற தலைப்பில் அரபு அமீரக வாழ் காயல் தவ்ஹீத் அமைப்பினரால் வெளியிடப்பட்டது.






நன்றி 
UAE வாழ் காயல் தவ்ஹீத் அமைப்பு
Email : kpmthouheedbros@gmail.com

Wednesday, September 15, 2010

நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே



http://nomorecensorship.com/wp-content/uploads/2010/09/capt.9c695991c16d43fe832eddbcbb082f9d-0b4a58365b484947949620f359393d5b-0burnakoranday.jpg
 நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்கு தாங்கள் புரிந்த சேவைக்காக 
(செப்டம்பர் 11 அன்று குரானை எரிக்க போவதாக சொன்னவர் இப்பாதிரியார்)

 



1. குரான் அதிக விற்பனையானது : அமேசான், உள்ளூர் மற்றும் வெளியூர் கடைகளிலும் இணையம் மூலமாகவும் குரான் அதிக அளவு விற்பனையானது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட குரானை மானுடம் சிந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.

2. வியாபரம் சூடு பிடித்தது : நிறைய குரான்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் விற்பனையானதின் மூலம் இஸ்லாமிய நிறுவனங்களின் உரிமையாளர்களூக்கு நல்ல லாபம் கிடைத்தது.

3. பள்ளிவாயில்களுக்கு அதிகமானோர் வருகை : உங்கள் சர்ச்சையால் இஸ்லாத்தை அறிந்து கொள்ள பள்ளி வாயில்களுக்கு அதிகமானோர் வருகை புரிந்ததின் மூலம் இஸ்லாத்தின் செய்தியை பெற்று கொன்டனர்.

4. இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது : இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.

5. கூகுளில் குரான் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன : நீங்கள் குரானை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குரான் குறித்து தேடுவோரின், இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

6. நூலகங்களில் குரான் காணாமல் போயின : எத்துணை பிரதிகள் வாங்கிய போதும் ஐரோப்பா, கனடா, அமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குரானை அனைவரும் எடுத்து கொண்டு போவதால் குரான் ஸ்டாக் இல்லாமல் போனது.

7. முஸ்லீம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் : மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பிரச்சாரத்தை தங்களின் வெறும் அறிக்கைகள் உண்டாக்கியதால் தஃவாவில் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.

8. முஸ்லீம்கள் உணர்வுகள் தூக்கத்திலிருந்து எழுந்தன : உலகெங்கும் வாழும் முஸ்லீம் சமூகம் உங்களின் உரைக்கு பின் தன் தூக்கத்தை கலைத்து குரானின் செய்தியை அறிந்து கொள்வதில், குரானுடனான தங்கள் உறவை புதுப்பித்து கொள்வதில், குரானின் செய்தியை பிற மக்களுக்கு அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டின.

9. நிறைய மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் : முன்பை காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

10. நீதியை நேசிப்பவர்களை ஒன்றிணைத்தது : இஸ்லாம், கிறிஸ்துவம், யூதர்கள், ஹிந்துக்கள், இறை மறுப்பாளர்கள் என அனைத்து பிரிவிலும் உள்ள நீதியை நேசிப்பவர்களை இக்கொடுமைகளை கண்டித்ததன் மூலம் ஒன்றிணைத்தது.

பாதிரியார் டெர்ரி ஜோன்ஸூக்கு ஒரு வேண்டுகோள் : நீங்கள் எரிக்க நினைத்த அக்குரானை திறந்த மனதோடு படியுங்கள். இயேசுவை பின்பற்றுபவராக இருந்தால் இயேசுவின் மார்க்கமான, நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மது (ஸல்) போன்ற நபிமார்களின் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்.

குரானோடு மோதியவர்கள் ஒன்று குரானால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அழிந்து போயிருக்கின்றார்கள். எது வேண்டும் என்று தீர்மானிப்பது உங்கள் கையில் தான் உள்ளது சகோதரரே

(Gain peace.org எனும் இணையத்தில் வெளியான மடலை தழுவி சில மாற்றங்களுடன் எழுதப்பட்டது)

Tuesday, September 14, 2010

என்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்




அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு....

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

            சகோதரி ஏஞ்சலா கொலின்ஸ் (Angela Collins), 9/11க்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களில் ஒருவர். கலிபோர்னியாவின் மிஷன் வியேகோ நகரத்தின் அல்-ரிதா (Al-Ridah Academy) இஸ்லாமிய சிறுவர்கள் பள்ளியின் முன்னாள் முதல்வர். 


ஏஞ்சலா அவர்களின் வாழ்க்கைக்கான தேடல் 9/11னுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு தான் கண்ட முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் கவரப்பட்டு, பின்னர் அமெரிக்கா திரும்பி, அங்குள்ள முஸ்லிம்களிடம் பழகி இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டார். 

இஸ்லாம் குறித்து தவறாக யாரும் பேசினால் அவர்களிடம் தன் மறுப்பை தெரிவிக்கும் அளவு ஆர்வம் கொண்டிருந்த ஏஞ்சலா, அவர்களுக்கு தெளிவாக பதில் கூற வேண்டுமென்பதற்காக குரானை படிக்கத் தொடங்க, அதன் விளைவாக 9/11 நடந்து சில வாரங்களுக்கு பிறகு இஸ்லாமை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ். 

இது குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.... 
  

"நம்மையும், உலகில் உள்ள மற்ற அனைத்தையும் படைத்தவனுக்கு முழுமையாக அடிபணிய சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் தான். ஒரு முஸ்லிமாக, நான் எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்றும், பின்னர் அந்த நோக்கத்தை சரியான வழியில் உருமாற்ற வேண்டும் என்பதையும் அறிந்தே இருக்கின்றேன். இது என்னை மேம்படுத்த உதவுகின்றது.   

அல்லாஹ் என்னுடைய இதயத்தை திறந்திருக்கின்றான், இஸ்லாம் எனக்கு திசையை காட்டியிருக்கின்றது, என்னை படைத்தவனை திருப்திபடுத்தி அதன் மூலம் இந்த உலகின் மகிழ்ச்சியையும், இறைவன் நாடினால் மறுமையின் மகிழ்ச்சியையும் பெற விரும்புகின்றேன்.

நான் சமீபத்தில் இஸ்லாத்தை தழுவியவள். என் முன்னோர்கள் கத்தோலிக்க கிருத்துவர்கள். பதினான்காவது வயதில் திருத்துவ கொள்கையை நிராகரித்து விட்டேன். 

என் நம்பிக்கை என்று வரும்போது நான் மிகவும் குழம்பி போனேன். ஏன் இறைவன் மனித ரூபத்தில் வரவேண்டும்?, ஏன் மனிதர்களின் பாவங்களுக்காக தான் கொல்லப்பட அனுமதிக்க வேண்டும்?

என் வாழ்நாள் முழுவதும் அனைத்தையும் புரிந்து கொள்ள தேடியிருக்கின்றேன். ஆனால் இதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய சந்தேகங்களை பாஸ்டர்களிடமும் அறிஞர்களிடம் கேட்பேன். அவர்களும் அதீத முயற்சி எடுத்து தங்களால் முடித்தவரை கிருத்துவ நம்பிக்கையை விளக்க முயன்றார்கள். 

இப்போது என்னை நானே கேட்டுக்கொண்டேன், "ஏன் என்னுடைய மார்க்கம் இவ்வளவு சிக்கலாக இருக்க வேண்டும்?"  

சிறிது காலம் சென்ற பிறகு இந்த குழப்பத்தை எளிதாக்க முடிவெடுத்தேன். ஒரே இறைவன் தான், அவன் தான் நம்மை படைத்தவன்....அவ்வளவுதான். வேறு எந்த விளக்கமும் அறிவுக்கு ஒத்துவரவில்லை.  

இறைவனுடைய வார்த்தைகளை தங்கள் சொந்த விருப்பங்களுக்காக மாற்றிய மனிதர்களின் தவறுகளை விளக்க வந்த மார்க்கமாக நான் இஸ்லாமை பார்க்கின்றேன். 

இஸ்லாம் எளிமையானது. இங்கு இறைவன் இறைவனாக மட்டுமே பார்க்கப்படுகின்றான். அவன் நம்மை படைத்தான், நாம் அவனை மட்டுமே வணங்குகின்றோம். 

தன்னுடைய செய்தியை மனித சமுதாயத்துக்கு அறிவிக்க, இறைவன், மூசா (அலை), ஈசா (அலை), முஹம்மது (ஸல்) என்று நபிமார்களை அனுப்பி வைத்தான். இஸ்லாத்தில், ஈசா (அலை) மட்டுமே இறக்காத நபியாக இருக்கின்றார். அதனாலேயே உலகின் இறுதி நாளுக்கு முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்களை வழி நடத்த அவர் வருவார். குரான் இறுதி இறைவேதமாகவும், மனிதர்களின் கரங்களால் மாற்றப்படாத வேதமாகவும் இருக்கின்றது. 

இஸ்லாம் உறுதிப்படுத்துகின்றது, நீங்கள் முஸ்லிம் என்பதால் மட்டும் உங்களுக்கு சுவர்க்கம் கிடைத்து விடாது என்று. இறைவன் ஒருவனே என்று நீங்கள் நம்பினால் மட்டும் நேராக சுவர்க்கத்துக்கு போய் விட முடியாது. சுவர்க்கத்துக்கு செல்ல உங்களுடைய எண்ணங்களும், செய்கைகளும் இறைத்தூதர்கள் வாழ்ந்து காட்டிய படியும் அவர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியை சார்ந்தும் இருக்கவேண்டும்.     

சுவர்க்கம் என்பது உங்கள் தாய் தந்தையர் காட்டியப்படி நடந்தால் மட்டும் வந்துவிடாது. மாறாக, ஒரு முஸ்லிமாக, தொடர்ந்து உண்மையை ஆராய்வதும், அதனை அறிந்து கொள்ள முயல்வதும் நம்முடைய பொறுப்பாகும்.    

குரானின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இருமுறை படித்த பிறகு, விரிவான குறிப்புகளை எடுத்துக்கொண்ட பிறகு, இந்த தலைசிறந்த படைப்பு என்னை படைத்தவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று நம்பத் தொடங்கினேன். 
  
சந்தேகமே இல்லாமல், என்னைப் பற்றி நான் அறிந்திருந்ததை விட இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு அதிகமாகவே தெரிந்திருக்கின்றது. 

இங்கே என்னுடைய நாட்டில் (அமெரிக்கா) இஸ்லாம் தவறான புரிதலுக்கும், வெறுப்புக்கும் ஆளாகி இருக்கின்றது. நான் இஸ்லாத்தை தழுவியது என்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் புதிராக இருந்தது. 

மத்திய கிழக்கில் நான் கண்ட முஸ்லிம்களின் வாழ்க்கை முறையில் அதிக வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களிடம் பெருந்தன்மையையும், தாராள மனப்பான்மையையும் மிக அழகிய ஒன்றாக கண்டேன். அதுமட்டுமல்லாமல், அவர்கள் கண்ணுக்கு அந்நியமான ஒரு பெண்ணை அவர்களில் ஒருவராக உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள். 

இருந்தாலும், முஸ்லிம்களிடம் அவர்கள் சார்ந்த கலாச்சார தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது. முஸ்லிமாக பிறந்த ஒருவர் தான் சார்ந்த கலாச்சார தாக்கத்திலிருந்து வெளிவர எவ்வளவு கடினப்படுகின்றார் என்பதை உணர்ந்திருக்கின்றேன்.  

அதனால் நான் கலாச்சார வேறுபாடுகளை தள்ளி வைத்து விட்டு, குரான் மற்றும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை படியே வாழ முயற்சிக்கின்றேன்.  

இஸ்லாம் என்ற அமைப்பு (system) பல்வேறு பின்னணியை கொண்ட மக்களை தன்னகத்தே கொண்ட ஒன்று. இஸ்லாம் எந்தவொரு சூழ்நிலைக்கும் பொருந்தும் மார்க்கம். 

நான் நம்பிக்கையுடன் கூறுவேன், இஸ்லாம் என்ற ஒன்றை அல்லாஹ் எனக்குள் விதைத்திருக்காவிட்டால் என்னை என்னால் நிச்சயம் கண்டுபிடித்திருக்க முடியாது.   

இன்று, இதோ நான், ஏஞ்சலா, முஸ்லிம் அமெரிக்க பெண்: தன்னை படைத்தவனை பல காலங்களாக தேடிக்கொண்டிருந்த ஒரு ஆன்மா....இந்த பிரபஞ்சத்தையும் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்தையும் படைத்தவனை இஸ்லாத்தில் கண்டிருக்கின்றது....

ஏஞ்சலா கொலின்ஸ்"     


சகோதரி ஏஞ்சலா அவர்களின் பெற்றோர்கள் சிறிது காலத்திற்கு பிறகு அவரை ஏற்றுக்கொண்டார்கள். தங்களுடைய மகளின் முடிவை தாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தங்கள் மகள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்...அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாம், எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை தாண்டி கம்பீரமாய் நிற்கும். கோடானுகோடி பேரை தொடர்ந்து அரவணைக்கும். அதில் நம்முடைய பங்கும் சிறிதளவேணும் இருக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்....

மேலும் "அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? --- Qur'an 2:170        

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


by Aashiq Ahamed. A