Saturday, May 15, 2010

பவுல் V/S பழைய ஏற்பாடு

புதிய ஏற்பாடு  V/S பழைய ஏற்பாடு



கிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்டதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அக்காலத்தில் வாழ்ந்த பலரால் எழுதப்பட்ட பல புத்தகங்களின் தொகுப்பான பைபிளை - கர்த்தரின் பரிசுத்த ஆவியின் மூலம் உந்தப்பட்டு எழுதப்பட்டதால் இந்த பைபிள் முழுவதும் கர்த்தரின் வார்த்தை என்று அவர்களால் நம்பப்படுகின்றது.

இந்த பைபிள் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று பழைய ஏற்பாடு மற்றொன்று புதிய ஏற்பாடு.

புரொடஸ்டன்ட் பிரிவினரால் நம்பப்படும் பைபிளில் (பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 66 புத்தகங்களும், ரோமன் கத்தோலிக்கர்களால் நம்பப்படும் பைபிளில் (பழைய ஏற்பாட்டில் 46 புத்தகங்களும் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 73 புத்தகங்களும் இடம் பெற்றுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையான கிழக்கு மரபுவழி திருச்சபையினரால் (Eastern Orthodox Church) நம்பப்படும் பைபிளில் (கத்தோலிக்கர்கள் ஏற்றுக்கொள்ளும் பழைய ஏற்பாட்டு நூல்கலான 46 நூல்களுடன் மேலும் 5 நூல்களை சேர்த்து) பழைய ஏற்பாட்டில் மொத்தம் 51 நூல்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 78 புத்தகங்களும் இடம்பெற்றுள்ளது.

பைபிள் உள்ள புத்தகங்களை யார் யார் எழுதினார்கள்? மொத்தம் எத்தனைப்பேர் எழுதினார்கள்? ஒவ்வொரு புத்தகங்களையும் ஒருவர் மட்டும் எழுதினாரா அல்லது பலரும் சேர்ந்து எழுதினார்களா? அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் தான் எழுதினார்கள் என்பதற்கு என்ன சான்று? என்பன போன்ற கேள்விகளெல்லாம் ஒரு புறம் இருக்க, இவை அனைத்தும் கடவுளால் தான் அருளப்பட்டதென்றால் அவற்றில் கண்டிப்பாக முரண்பாடு என்பது இருக்க முடியாது - இருக்கவும்கூடாது என்பதை யாரும் மறுக்கவும் மாட்டார்கள் - மறுக்கவும் முடியாது.

காரணம் கர்த்தர் என்பவர் இவ்வுலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலித்து வருபவர். இதுவரை நடந்தவற்றையும் அறிந்தவர். இனி நடக்கப்போவதையும் அறிந்தவர். எல்லாவற்றையும் அடக்கி ஆளக்கூடிய - அனைத்துப் பொருட்களின் மீதும் சக்திபெற்ற கடவுள் - ஒரு சம்பவத்தையோ அல்லது வேறு ஒரு செய்தியையோ சொல்லும்போது மிகத்தெளிவாகச் சொல்லக்கூடியவராகத்தான் இருப்பார். அவருடைய வார்த்தையில் கண்டிப்பாக முரண்பாடோ அல்லது குழப்பங்களோ இருக்காது. இருக்கவும் முடியாது. அப்படி இருந்தால் அது இறைவனின் வார்த்தையாக ஒரு போதும் இருக்க முடிhயது.

இந்த பொதுவான நியதிக்கு மாற்றமாக பைபிளில் ஏராளமான முரண்பாடுகள் காணக்கிடைக்கின்றன. ஏராளமான குழப்பத்தை ஏற்படுத்தும் வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. எந்த சம்பவம் உன்மை - எந்தச் சம்பவம் பொய் என்று புரியாத அளவுக்கு குழப்பத்தை விளைவிக்கும் ஆயிரக்கனக்கான வசனங்கள் இருக்கின்றன. இப்படி ஏராளமான முரண்பாடுகளைக் - குழப்பங்களையும் கொண்ட பைபிளை எப்படி கடவுளால் அருளப்பட்டது என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

சாதாரன மனிதனின் வார்த்தையிலோ அல்லது எழுத்திலோ முரண்பாடுகள் இருந்தால் அதை நம்பாத - ஏற்றுக்கொள்ளாத நாம், கடவுளின் வாத்தையில் மட்டும் முரண்பாடு இருக்கும் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இன்று ஒருவனைக் குற்றவாளி என்று அடையாளம் கண்டுக்கொள்வதற்கு அவனது செல்பாடுகளில் உள்ள தவறுகளும் அவனது வார்த்தையில் உள்ள முரண்பாடுகளையுமே ஆதாரமாக கொள்ளப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் ஒரு இறைவேதம் என்று சொல்லக்கூடிய புத்தகத்தில் ஆயிரக்கணக்கான முரண்பாடுகளும் ஏரளமான குளருடிகளும் இருக்கும் ஒரு புத்தகத்தை மட்டும் எப்படி கடவுளின் வேதமாக ஏற்க முடியும்?

இதனால் தான் வல்ல இறைவன் தனது இறுதி இறைவேதமான திருமறைக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

'அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்' (அல்குர்ஆன் 4 : 82)

அதாவது இந்த திருக்குர்ஆன் இறைவன் அல்லாதவர்களிடம் வந்திருந்தால் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் என்று சொல்லும் வல்ல இறைவன், இந்த முரண்பாடின்மையே ஒரு இறைவேதத்திற்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தகுதி என்றும் கூறுகின்றான்.

ஆனால் இந்த பொதுவான நியதிக்கு மாற்றமாக இருக்கும் பைபிள் முரண்பாடுகளின் பட்டியல்களை இனி கான்போம்.
முரண்பாடு 1
 புதிய ஏற்பாடு
பழைய ஏற்பாடு
 I கொரிந்தியர்
15 அதிகாரம்
22. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
உபாகமம்
24 அதிகாரம்
16. பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.
முரண்பாடு 2
 புதிய ஏற்பாடுபழைய ஏற்பாடு
எபேசியர்
4 அதிகாரம்
26. நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
பிரசங்கி
7 அதிகாரம்
9. உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.

நீதிமொழிகள்
22 அதிகாரம்
24. கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.

நீதிமொழிகள்
16 அதிகாரம்
32. பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
முரண்பாடு 3
புதிய ஏற்பாடுபழைய ஏற்பாடு
I தீமோத்தேயு



6 அதிகாரம்
16. ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
ஆதியாகமம்



32 அதிகாரம்
30. அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.

யாத்திராகமம்
33 அதிகாரம்
11. ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.


ஏசாயா
6 அதிகாரம்
1. உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.

5. அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

ஆமோஸ்
7 அதிகாரம்
7. பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.

8. கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என்ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
முரண்பாடு 4
புதிய ஏற்பாடுபழைய ஏற்பாடு
 I கொரிந்தியர்
7 அதிகாரம்
27. நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால் மனைவியைத் தேடாதே.

I கொரிந்தியர்
7 அதிகாரம்
7. எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.

8. விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
ஆதியாகமம்
2 அதிகாரம்
18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
முரண்பாடு 5
புதிய ஏற்பாடுபழைய ஏற்பாடு
 கலாத்தியர்
5 அதிகாரம்
22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
நியாயாதிபதிகள்
3 அதிகாரம்
10. அவன் மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின் மேல் பலங்கொண்டது.

முரண்பாடு 6


புதிய ஏற்பாடுபழைய ஏற்பாடு


எபிரெயர்



13 அதிகாரம்
4. விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
ஓசியா



1 அதிகாரம்
2. கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோர ஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.

முரண்பாடு 7


புதிய ஏற்பாடுபழைய ஏற்பாடு


எபிரெயர்



1 அதிகாரம்
10. கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்களும் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;

11. அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்;
பிரசங்கி



1 அதிகாரம்
4. ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.


முரண்பாடு 8


புதிய ஏற்பாடுபழைய ஏற்பாடு


எபிரெயர்



11 அதிகாரம்
27. விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
யாத்திராகமம்



2 அதிகாரம்
14. அதற்கு அவன்: எங்கள் மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்று போட்டது போல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.

15. பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலை செய்ய வகை தேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.

முரண்பாடு 9


புதிய ஏற்பாடுபழைய ஏற்பாடு
I தெசலோனிக்கேயர்



4 அதிகாரம்
6. இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
யாத்திராகமம்



3 அதிகாரம்
22. ஒவ்வொரு ஸ்திரீயும், தன் தன் அயலகத்தாளிடத்திலும், தன் தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டுவாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.

முரண்பாடு 10


புதிய ஏற்பாடுபழைய ஏற்பாடு


I தீமோத்தேயு



6 அதிகாரம்
16. ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
I இராஜாக்கள்



8 அதிகாரம்
12. அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

சங்கீதம்
97 அதிகாரம்
2. மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.

சங்கீதம்
18 அதிகாரம்
11. இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்.

முரண்பாடு 11

புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு
I தீமோத்தேயு
5 அதிகாரம்
23. நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.

I தீமோத்தேயு
3 அதிகாரம்
8. அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,
நீதிமொழிகள்
20 அதிகாரம்
1. திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

ஓசியா
4 அதிகாரம்
11. வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.

நீதிமொழிகள்
23 அதிகாரம்
31. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.
32. முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.

எண்ணாகமம்
6 அதிகாரம்
1. கர்த்தர் மோசேயை நோக்கி:

2. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால்,

3. அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும்,

4. தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்.


முரண்பாடு 12

புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு
கலாத்தியர்
3 அதிகாரம்
16. ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.

17. ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.
ஆதியாகமம்
15 அதிகாரம்
13. அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.


முரண்பாடு 13


புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு
எபிரெயர்
10 அதிகாரம்
31. ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே.
II சாமுவேல்
24 அதிகாரம்
14. அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.


முரண்பாடு 14


புதிய ஏற்பாடுபழைய ஏற்பாடு

ரோமர்
10 அதிகாரம்
21. இஸ்ரவேலரைக் குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.

எண்ணாகமம்
23 அதிகாரம்
21. அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.



முரண்பாடு 15



புதிய ஏற்பாடுபழைய ஏற்பாடு

எபிரெயர்
11 அதிகாரம்
23. மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள்.
யாத்திராகமம்
1 அதிகாரம
22. அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.

யாத்திராகமம்
2 அதிகாரம்
2. அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.

அவள் பாரோனின் கட்டளைக்கு பயப்படவில்லையென்றால், ஏன் மோசஸ் (அலை) அவர்களை மறைதுவைக்க வேண்டும்.


இன்னும் பைபிளில் பல முரண்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த முரண்பாடுகள் ஏற்படுவது மனிதர்களுக்கு இயல்புதான் என்பதை இதன் மூலம் நம்மால் விளங்கி கொள்ள முடிகின்றது. பைபிளில் தவறுகள் ஏற்படுவது என்பது சாதாரன விஷயம் தான். பைபிளில் மனிதகரங்கள் படிந்திருப்பதை எளிய முறையில் விளங்கலாம்.

ஆகையால் முரண்பாடுகள் இல்லாத, மனிதகரங்கள் படியாத இறை  வேதமாம் அல் குர்ஆனை பின்பற்றி வெற்றிபெருவோமாக.
இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" (6:90)

5 comments:

திரு முஜாகித் அலி அவர்களே, நீங்கள் சொல்வது போன்றே பைபிள் இருக்கட்டும். அதனால் இஸ்லாமியர்களுக்கு என்ன குறைந்து போனது.

///அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் தான் எழுதினார்கள் என்பதற்கு என்ன சான்று?///

கடவுள் கொடுத்ததாக நீங்கள் கூறிக்கொண்டிருக்கும் குரான் கடவுள் தான் கொடுத்தார் என்பதற்கு என்ன சான்று? சுற்றி வளைக்காமல் ஒரு நேரடி சான்றினை குரானுக்கு வெளியில் இருந்து கூறுங்களேன். கடவுளின் தூதராக தன்னை தானே கூறிக்கொண்ட முகமது உணமையிலேயே கடவுளின் தூதர் என்பதற்கு என்ன சான்று? தயவு செய்து குர்ஆனில் அவர் கடவுளின் தூதர் என்று கூறி இருக்கிறது என்று கூறாமல் வேறு எந்தவது புததகத்தில் உள்ள அத்தாட்சியை கூறுங்கள். மேலும் நான் கேட்பது நேரடியான அத்தாட்சி. அதாவது அந்த புத்தகத்தில் அப்படி கூறி இருக்கிறார்கள் அது முகமதுவைதான் குறிக்கிறது. இந்த புத்தகத்தில் இப்படி கூறி இருக்கிறது என்று தலையை சுற்றி மூக்கை தொடாமல் ஒரு மிக தெளிவான அத்தாட்சியை கூறுங்கள்.

குரானின் தோற்றம் 1400 ஆண்டுகளுக்கு முன்புதான். அதற்கு முன்பே பெரிய பெரிய ஞானிகளும் யோகிகளும் குர்ஆனில் கூறி இருப்பதை விட பெரிய பெரிய தத்துவங்களையும் வாழ்க்கை நெறிகளையும் கூறி சென்று விட்டார்கள். நீங்கள்(இஸ்லாமியர்கள்) மட்டும் தான் ஆஹா குரானை போல் வாழ்க்கை நெறி கூறும் நூல் உண்டா என்று கூறிக்கொண்டு இருக்கிறீர்கள். குரானையும், ஹதீஸ்களையும் மட்டும் படிப்பதுடன் கொஞ்சம் பிற நூல்களையும் படியுங்கள். இஸ்லாம என்ற மதத்தை கடவுள் தந்ததாக தானே கூறுகிறீர்கள். மதத்தை உருவாக்கி அதை தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறுவது கடவுளின் வேலை இல்லை முஜாஹித் அவர்களே. மதமும் மத வெறியும் மனிதனுக்கு தானே பிடிக்கும், கடவுளுக்குமா பிடிக்கும். அப்படியானால் அவர் எப்படிப்பட்ட கடவுள்! மாத ஏல சீட்டிற்கு ஆள் பிடிப்பதை போல மதத்திற்கு பிற மக்களை சேர சொல்லி 'தாவா' செய்ய சொல்வதும் கடவுளின் பணியா முஜாஹித் அவர்களே. அந்த அளவிற்கு அல்லாவிற்கு மதப்பற்று பிடித்து விட்டதா

மேலும் உங்கள் கடவுள் தான் தெளிவாக சொல்லி இருக்கிறாரே
( 'உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு'’ குர்ஆன் 109:6' ) என்று...
பிறகு ஏன் மனித கரம் விளயாடி விட்டது, மிருக கரம் விளையாடி விட்டது என்று புலம்பல். உங்கள் வேலைகளை பார்த்துக்கொண்டு 'அல்லாஹ்(கடவுள்) தான் கடவுள் முகமது தான் தூதர் என்று கூறிக்கொண்டு' போக வேண்டியது தானே. எல்லா இஸ்லாமிய இணைய தளத்திலும் இந்த புலம்பலை பாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.

கடைசியாக.. நீங்கள் மனித கரம் விளயாடி விட்டதாக கூறும் பைபிளை பின்பற்றும் எல்லா நாடுகளும், மக்களும் நன்றாக தான் இருக்கிறார்கள் உலகில் பணக்கார நாடுகளாகவும் அதிகாரம் படைத்த நாடுகளாகவும் இருப்பது கிறிஸ்தவ நாடுகள் தான். கடவுள் இறக்கிய குரானை பின்பற்றும் நாடுகளின் நிலை, நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. ஒரு நாளும் சண்டையும் பிரச்சினைகளும், வறுமையும் தீராத ஆப்ரிக்க இஸ்லாமிய நாடுகளே பெரிய சாட்சி. உலகில் கல்வி அறிவில் மிகவும் கீழ் நிலையில் இருப்பதும் முஸ்லிம்களே. பெண்கல்வியை பற்றி சொல்லவே வேண்டாம். முழு இஸ்லாமிய நாடுகளின் பெண்கல்வியை பூத கண்ணாடி கொண்டுதான் தேடி பார்க்க வேண்டும்.
முதலில் உங்கள் அமைதி மார்க்கத்தின் துணை கொண்டு ஷியா, சன்னிகளிடையே அமைதியை கொண்டு வர இஸ்லாமியர்கள் முயற்சி செய்யலாமே. பிறகு பிற மத மக்களை குறை சொல்லலாமே. பைபிளின் ஒரு வசனம் என்ன தெரியுமா. 'உன் கண்ணில் பெரிய விட்டத்தை வைத்துக்கொண்டு அடுத்தவன் கண்ணில் இருக்கும் சிறு துரும்பை சுட்டி கட்டாதே என்பது'
புரியும் என்று நினைக்கிறன்.
மனித கரம் படியாத குரானை பின்பற்றும் பல நாடுகள் ஒரு வேளை கஞ்சிக்கே திண்டாடிக்கொண்டு இருக்கும் நிலையில் இருக்கும் போது. அடுத்த மதத்துக்காரன் என்ன வேத புத்தகத்தை படிக்கிறான் என்பது தான் முக்கியமாக போய் விட்டதா உங்களுக்கு.

M. George Thomas
Kanyakumari

திரு M. George Thomas
Kanyakumari அவர்களே,

[நீங்கள் சொல்வது போன்றே பைபிள் இருக்கட்டும். அதனால் இஸ்லாமியர்களுக்கு என்ன குறைந்து போனது.

///அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் தான் எழுதினார்கள் என்பதற்கு என்ன சான்று?///

கடவுள் கொடுத்ததாக நீங்கள் கூறிக்கொண்டிருக்கும் குரான் கடவுள் தான் கொடுத்தார் என்பதற்கு என்ன சான்று? சுற்றி வளைக்காமல் ஒரு நேரடி சான்றினை குரானுக்கு வெளியில் இருந்து கூறுங்களேன். கடவுளின் தூதராக தன்னை தானே கூறிக்கொண்ட முகமது உணமையிலேயே கடவுளின் தூதர் என்பதற்கு என்ன சான்று? தயவு செய்து குர்ஆனில் அவர் கடவுளின் தூதர் என்று கூறி இருக்கிறது என்று கூறாமல் வேறு எந்தவது புததகத்தில் உள்ள அத்தாட்சியை கூறுங்கள். மேலும் நான் கேட்பது நேரடியான அத்தாட்சி. அதாவது அந்த புத்தகத்தில் அப்படி கூறி இருக்கிறார்கள் அது முகமதுவைதான் குறிக்கிறது. இந்த புத்தகத்தில் இப்படி கூறி இருக்கிறது என்று தலையை சுற்றி மூக்கை தொடாமல் ஒரு மிக தெளிவான அத்தாட்சியை கூறுங்கள்.]

குர்ஆன் கடவுளிடமிருந்து தான் வந்தது என்று என்ன சான்று இருக்கின்றது என்று கேட்டுள்ளீர்கள். அந்த சான்றுகளை குர்ஆனில் இருந்து காட்ட கூடாது, வேறு யாரோ எழுதிய புத்தகத்திகிருந்து காட்டுங்கள் என்றும் கேட்டுள்ளீர்கள்.

அறிவுடைமை என்பது சான்றுகள் எங்கிருந்து வந்தாலும் அதை ஆய்வு செய்து சரியானது தான் என்று விளங்கிய பிறகு அதை ஏற்றுகொள்வது தான் அறிவுடமையாகும். நான் எனக்குள்ளே ஒரு விதியை வைத்து கொண்டு இவ்வாறு இருந்தால் ஏற்றுகொள்வேன் அவ்வாறு இருந்தால் ஏற்றுகொள்வேன் என்று கூறுவது அறிவுடமையாகாது.

உதாரணத்திற்காக இறைத்தூதர் இயேசு (அலை) அவர்களை எடுத்துக்கொள்வோம்.
இஸ்ரவேலர்கள் பால் இயேசு (அலை) அவர்களை இறைவன் இறைத்தூதராக அனுப்பினான். அப்போது அவர் நான் மெய்யாக இறைவனின் தூதர் என்று கூறினார். அதற்கு அம்மக்கள் என்ன சான்று இருக்கின்றது என்று கேட்டார்கள்.

இஸ்ரவேலர்களிடம் அவர்;) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;.
நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது இறைவனின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும்.
பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;.
இறைவனின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;.
நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன்.
நீங்கள் நம்பிக்கையாளர் ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்).

இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் சொன்னதுபோல் செய்தும் காட்டினார்கள். ஆனால் அந்த மக்களோ அவரை புறகனித்தனர். அந்த அத்தாட்சிகளை கண்கூடாக கண்டபிறகும் மனமுரண்டாக அதை ஏற்க மறுத்தனர். அம்மக்கள் அவரை இறைத்தூதர் என்று ஏற்கவில்லை என்பதற்காக அவர் இறைத்தூதர் ஆகமாட்டரா என்ன?

அதைப்போல தான் அல் குர்ஆன் பல அத்தாட்சிகளை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துகிறது அதை ஏற்று கொள்ள மனம் வராமல் மனமுரண்டாக குர்ஆன் பற்றி குர்ஆன் சொல்ல கூடாது வேறு யாரும் வெளியே சொல்லிருந்தால் அந்த சான்றினை கூறுங்கள் என்று சொல்வது எப்படி அறிவுடமையாகும். நீங்கள் ஏற்க வில்லை என்பதற்காக குர்ஆன் இறைவேதமாகாதா என்ன?

Hi Mr Thomas, Peace be upon you ,
I have seen your comments above ..well its very intresting . but still i didnt get you wat u trying to say .we muslims believe Jesus(peace be upon him)is a holy messenger from Almighty ALLAH and we believe that BIBLE is not the word of god .and some of verses it may be the word of god because it tells us believe only one god not jesus or moses or any humans ..well coming to the point u have asked us that show a clear cut proof that Quran is the words of god from anybook except quran .look mr thomas this is what christains are doing you guys only believe human's word not GOD words.even through u know which one is GOD's word u should understand our YARDSTICK is only Quran ..the proof that quran is word from ALLAH is Quran itself this is a big thing who else can give testimony if not GOD.This what we are asking you brother show me a word TRINITY from bible with clear context.show me word called Cristianity from BIBLE .do u know the history of word called chirstianity brother.? do you in your GOD's book the ruthless word BASTARD is been using 30 times.lemme give a verse to u (Deuteronomy 23:2

A bastard shall not enter into the congregation of the LORD;evn to his tenth generation.)

If Jesus(peace be upon him) is a GOD why should he pray..hope you he prayed to ALLAH.check this verse
(gospel of mathew 26:39)

if jesus is son of GOD ..in bible we have sons of god in TONS brother Genesis 6:2&4

brother i can quote u lotz like this from ur book BIBLE ..have u heard about bard ehram he is a chirstain scholor he written a book called misquoting jesus please go and read that book it is written by a MUSLIM. and one more your more welcome to analyse Quran and try to find mistakes from there sir . i have a question to you sir what is launguage of JESUS? if its hebrew do u have that book if so please reveal few verses from that book not in english or tamil.and your worrying about current status status of ISLAM and MUSLIMS u said we are suffering from hunger our muslim lands are correpted and rich countries are chirtian country since i have exp in middleeast arabian peninsula muslims are most rich .why should a americans, europeans , russians, and etc came and work for in deserts Mr Thomas..if they richer than those people why should they came there ..and i heartly accepted that afgan status..but we believe it is a trial and test from ALLAH for Hereafter. and lemme tell you one thing as you know ISLAM is the fast growing religion in west and all over the world..ISLAM will rule this World Before it get distroy INSHA ALLAH ..


Thank You

நன்றி திரு முஜாஹித் அவர்களே. நம்பிக்கைகளின் கட்டுமானம் தான் மதம். முகமது அவர்கள் தன்னுடைய 40 வயதில் தன்னை இறை தூதராக கூரிகொண்டார். தன்னிடம் குரான் வருவதாக கூறிக்கொண்டார். இஸ்லாமியர்கள் தங்கள் அறிவை வைத்து ஆராய்ந்து முகமதுவை தூதராகவும் குரானை கடவுளின் வார்த்தையாகவும் ஏற்று கொள்கிறீர்கள். நல்லது.

அது போன்றே நாங்களும் எங்களுக்கு உள்ள அறிவை வைத்து ஆராய்ந்து பைபிளை இறை வேதமாக ஏற்று கொண்டிருக்கிறோம். இஸ்லாமியர்கள் அதை மனித கரம் விளையாடி விட்டது என்பதற்காக அது இறை வேதம் ஆகாதா என்ன? உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, எங்கள் நம்பிக்கை எங்களுக்கு.

//adthu said ..
in middleeast arabian peninsula muslims are most rich //
இந்த நாடுகளின் கல்வி கற்றவர் அளவு கிறிஸ்தவ நாடுகளுடன் ஒப்பிடும்போது எத்தனை சதவீதம் என்று கூற முடியுமா. குறிப்பாக பெண்களின் கல்வி விகிதம்.

//why should a americans, europeans , russians, and etc came and work for in deserts Mr Thomas..//

ஒத்துக்கொள்கிறேன், ஆனால் பணம் இருந்தால் அறிவு தானாக வராது. தன்னிடம் இல்லாததை ஓவ்வொரு நாடும் பிற நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்து கொள்வது இயல்பு தான்.

//ISLAM is the fast growing religion in west and all over the world.//


நிஜம்தான் , உலகில் வன்முறையும் தீவிரவாதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

//.do u know the history of word called chirstianity brother.? //
உண்மைதான், அது எங்களுக்கும் தெரியுமே. உண்மையான கடவுளுக்கு மதத்தை உருவாக்கும் தேவை இல்லை சார். அது மனிதன் உருவாக்கி கொண்டது தான். இஸ்லாம் என்ற மதத்தை பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

//but still i didnt get you wat u trying to say //

என்னுடைய முதல் பதிலில் முதல் வரியிலேயே சொல்லிவிட்டேனே. நாங்கள் பைபிளை பின்பற்றினால், இயேசுவை வணங்கினால் உங்களுக்கு (இஸ்லாமியர்களுக்கு) என்ன கஷ்டம் வந்தது? உங்கள் வழியை பார்த்துக்கொண்டு நீங்கள் செல்லுங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொண்டு நாங்கள் செல்கிறோம். இது உங்களுக்கு மட்டும் அல்ல பிற மதங்களை குறை சொல்லும் கிறிஸ்தவர்களுக்கும் சேர்த்துதான்.
ஏன் எந்த இஸ்லாமிய இணைய தளத்தை எடுத்து பார்த்தாலும் பிற மதங்களையும் நம்பிக்கைகளையும் குறை கூறிக்கொண்டே இருக்கிறீர்கள்.
உங்கள் இறைவேதத்தில் உள்ள ஒரு வசனம் "உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு'’ குர்ஆன் 109:6' "
இதையே தான் நானும் சொன்னேன்.


M. George Thomas
Kanyakumari

நன்றி திரு M. George தாமஸ் அவர்களே.

நம்பிக்கைகளின் கட்டுமானம் தான் மதம்.

உண்மை, நம்பிக்கை தான் அனைத்துக்கும் அஸ்திவாரம்.

எல்லோரும் தங்கள் மதக் கோட்பாட்டை நம்பிகின்றார்கள். அதை போன்று தான் இஸ்லாமியர்களின் நம்பிக்கை என்று விளங்கி விடக்கூடாது.

இஸ்லாம் அல்லாதோரின் நம்பிக்கை அனைத்தும் தங்கள் முன்னோர்களின் கோட்பாடே அன்றி வேறில்லை. முன்னோர்கள் சொன்னதை தான் தங்கள் மதக் கோட்பாடு என்று எண்ணி உலகில் பெரும்பாண்மையினர் அறியாமல் பின்பற்றுகின்றனர்.

இஸ்லாமிய கோட்பாடு வெறும் முன்னோர்களின் கட்டுகதைகள் மூலம் அமைந்ததல்ல. இஸ்லாம் பரிசுத்த இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் என்றும்,குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் 14 நூற்றாண்டுகளாக இன்று வரை குர்ஆன் நிருபித்து கொண்டு இருப்பதை உலகம் அறிந்து கொண்டே இருகின்றது.

முஹம்மது (ஸல்) அவர்கள் 40 வயது அடைந்த போது தங்களை இறைத்தூதர் என்றும் தனக்கு இறைவனிடம் இருந்து ஜிப்ரீல்(அலை) எனும் வான தூதர் மூலம் இறை செய்தி வருகின்றது என்றும் சொன்னார்கள்.

“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஹம்மது(ஸல்) அவர்கள் இறைத்தூதர் தானா?, குர்ஆன் இறைவனிடம் தான் வந்ததா? என்பதை இந்த குர்ஆன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

இதோ பரிசுத்த குர்ஆன் கூறுவதை கேளுங்கள்.

இது அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், (இந்தமுஹம்மது) நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப் பாரானால் -அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர இவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். அல்குர்ஆன் 69:44

நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 37:155)

(நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் – சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்.6:126

நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்-குர்ஆன்15:75)

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம் நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (அல்-குர்ஆன்16:44)

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.(அல்-குர்ஆன்4:82)

இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.(அல்-குர்ஆன் 39:27)

இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். (அல்-குர்ஆன்14:52)

இந்த வசனங்கள் மனிதர்களை சிந்திக்க தூண்டுகின்றன. மேலும் பல அத்தாட்சிகளை இறைவன் கூறுகின்றான் குர்ஆன் இறை வேதம் என்பதற்கான அறிவியல் சான்றுகளை அடுத்த பதிவில் தருகின்றோம் சிந்தித்து பாருங்கள்.