Saturday, January 16, 2010

லா இலாஹா இல்லல்லாஹ்

லாஇலாஹ இல்லல்லாஹ்

லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அஸ்திவாரமாகும். இதுவே இஸ்லாமியக் கடமைகளில் முதற்கடமையும்,

இதற்குரிய சரியான பொருள், உண்மையில் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும்.

இதைத்தவிர வேறு பொருள் கொள்ளக் கூடாது. இதனுடைய பொருள் அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் வேறு யாருமில்லை என்பதோ அல்லது பொருட்களை நூதனமாக உற்பத்தி செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதோ அல்லது உலகத்தில் இருப்பது அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதோ அல்ல.

இக்கலிமாவுக்கு இரு அம்சங்கள் உள்ளன

மறுத்தல் : இது லாஇலாஹ - வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று நாம் சொல்லும் போது வணக்கத்திற்குரிய தகுதி யாருக்கும் இல்லை என்று மறுத்துச் சொல்வதாகும்.

உறுதிப்படுத்துதல் : உறுதிப்படுத்துதல் என்பது இல்லல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர என்று நாம் சொல்லும் போது வணக்கத்திற்குரிய தகுதி அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது. இதில் அவனுக்கு இணையாக யாரும் கிடையாது என உறுதிப்படுத்துவதாகும்.

எனவே அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது. வணக்க வகைகளில் எதுவும் அல்லாஹ் அல்லாதவருக்குச் செலுத்தப்படக் கூடாது. யார் இந்தக் கலிமாவை - இதன் பொருள் அறிந்து, இணைவைப்பதை நிராகரிக்க வேண்டும், ஏகத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற இதன் நோக்கத்தை உறுதியாக நம்பி அதன் பிரகாரம் செயல்பட்ட வண்ணம் சொல்கிறாரோ அவரே உண்மையான முஸ்லிம். இக்கலிமாவின்படி நம்பிக்கை கொள்ளாமல் செயல் மட்டும் உள்ளவன் நயவஞ்சகன். இக்கலிமாவிற்கு மாற்றமாக இணை வைத்து செயல்படுபவன் காபிர், முஷ்ரிக். அவன் இக்கலிமாவை நாவால் மொழிந்தாலும் சரியே.

லா இலாஹ இல்லல்லாஹ்வின் சிறப்பு

இக்கலிமாவிற்கு அநேக சிறப்புகளும், பலன்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்

1 நரகத்திற்குச் செல்லத் தகுதியானவன் ஒருவனை, அவன் நிரந்தரமாக நரக்கதில் இருப்பதனின்றும் இது தடுப்பதற்குக் காரணமாக இருக்கின்றது.

ஒரு மணிக்கோதுமை அளவு ஒருவனது உள்ளத்தில் நன்மை இருக்கும் நிலையில், லஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறியவன் நரகிலிருந்து வெளியேற்றப்படுவான். ஒரு தொலிக் கோதுமை அளவு ஒருவனது உள்ளத்தில் நன்மை இருக்க, லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறியவனும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவான். ஒரு மக்காச் சோளம் அளவு நன்மை உள்ளத்திலிருக்க லாஇலாஹ இல்லல்லாஹ் கூறியவனும் நகத்திலிருந்து வெளியேற்றப்படுவான். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

2 மனிதர்களும் ஜின்களும் இதற்காகத் தான் படைக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ் கூறுகிறான் : மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குதவற்கில்லாமல் வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை (51:56)

3 தூதர்கள் அனுப்பப்பட்டதும், வேதங்கள் இறக்கப்பட்டதும் இதற்காகத் தான். அல்லாஹ் கூறுகிறான் : (நபியே) உமக்கு முன்னர் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும் நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. என்னையே வணங்குங்கள் என நாம் வஹீ அறிவிக்காமலில்லை (21:25)

4 இதுவே இறைத்தூதர்களின் அழைப்பிற்குரிய திறவுகோலாகும். எல்லா இறைத் தூதர்களும் இதன் பக்கம் தான் மக்களை அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் தம் மக்களிடம், அல்லாஹ்வை வணங்குங்கள், அவனையன்றி வேறு இறைவன் உங்களுக்குக் கிடையாது, என்றே கூறினார்கள். (7:73).

5 இக்கலிமா அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கு மிகச் சிறந்ததாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நானும் எனக்கு முன் சென்ற நபிமார்களும் கூறியதில் மிகச் சறிந்தது லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணையாக எதுவும் கிடையாது என்பதாகும். (அல் முஅத்தா)

லாஇலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தனைகள்

லாஇலாஹ இல்லல்லாஹ்விற்கு ஏழு நிபந்தனைகள் உள்ளன. ஒரு அடியான் அவற்றில் எந்த ஒன்றுக்கும் முரண்படாமல் அந்த ஏழையும் ஒன்றாகக் பற்றிப்பிடித்துக் கொள்ளாத வரையில் அது செல்லாது. அவை :

1. அறிவு : அதாவது இக்கலிமாவின் மறுத்தல், உறுதிப்படுத்துதல் என்ற பொருளையும் அப்பொருள் வலியுறுத்துகின்ற செயலையும் அறிய வேண்டும். எனவே ஒரு அடியான் நிச்சயமாக அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரியவன். அவன் அல்லாதவற்றை வணங்குவது பயனற்றது பிரயோஜனமில்லாதது என அறிந்து அதற்கேற்ப செயல்படுவானேயானால் அவனே இதன் பொருளைத் தெரிந்தவனாவான். அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என அறிந்தவனாக ஒருவன் மரணமடைந்தால் அவன் சுவர்க்கம் புகுவான்.

2. உறுதி : அதாவது இக்கலிமாவை - ஜின், மனித, ஐஷத்தான்கள் ஏற்படுத்துகின்ற சந்தே கங்கள் வராமல் தெளிந்த உள்ளத்துடன் உறுதியாக மொழிவதாகும். மட்டுமின்றி இதன் பொருளை மிக உறுதியாக நம்பி இதைக் கூறிட வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் : நிச்ச யமாக (உண்மையான) முஃமின்கள் யாரென்றால் அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூத ரையும் நம்பிய பின்னர் (அது பற்றி எத்தகைய) சந்தேகமும் கொள்ள மாட்டார்கள். (49:15)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் நிச்சயமாகக நான் அல்லாஹ்வின் தூதரென்றும் சாட்சி சொல்கிறேன் என்கிற இவ்விரண்டு கலிமாவையும் எவ்வித சந்தேகமுமின்றி நம்பி ஒரு அடியான் அல்லாஹ்வின் சந்திப்பானேயானால் அவன் சுவர்க்கத்தில் நுழைவான். (முஸ்லிம்)

3. ஏற்றுக் கொள்ளல் : அதாவது இக்கலிமாவின் தேட்டம் அனைத்தையும் உள்ளத்தால் உறுதி கொண்டு நாவால் மொழிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மூலம் வந்துள்ள எல்லாச் செய்திகளையும் மெய் என்று நம்பி அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றில் எதனையும் மறுத்து விடக் கூடாது. அல்லாஹ் கூறுகிறான் :

இறைத்தூதர் (ஸல்) தம் இறைவனிடமிருந்து தனக்கு அருளப்பட்டதை நம்புகிறார். முஃமின்களும் நம்புகின்றனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குகளையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் நம்புகின்றனர். மேலும் அல்லாஹ்வுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் வேற்றுமை பாராட்டுவதில்லை என்றம் மேலும் நாங்கள் செவியேற்றோம் அடிபணிந்தோம். எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது என்றும் கூறுகின்றனர்.(2:285)

மார்க்கச் சட்டங்களில் அல்லது குற்றவியல் சட்டங்களில் - உதாரணமாக திருட்டு அல்லது விபச்சாரத்திற்குரிய தண்டனை பலதாரமணம் அல்லது வாரிசுரிமைச் சட்டம் போன்றவைகளில் சிலவற்றை ஆட்சேபிக்கின்றவர்கள் அல்லது மறுப்பவர்கள் இக்கலிமாவை நிராகரிப்பவர்களில், ஏற்றுக் கொள்ளாதவர்களில் சேர்ந்து விடுகிறார்கள். அல்லாஹ் கூறுகிறான் :

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதற்கு எந்த ஒரு முஃமினான ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (33:36)

4. கீழ்படிதல் : கலப்பற்ற ஏகத்துவக் கலிமா எதை அறிவிக்கின்றதோ அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். ஏற்றுக் கொள்வதற்கும் கீழ்படிவதற்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால் ஏற்றுக் கொள்வதென்பது அதற்குரிய சரியான பொருளை வார்த்தையால் வெளிப்படுத்துவது. கீழ்ப்படிதலென்பது செயல்களால் பின்பற்றுவதாகும். ஒருவன் லாஇலாஹ இல்லல்லாஹ்வின் பொருளை அறிந்து, அதை உறுதி கொண்டு அதை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறான் எனினும் அவன் அறிந்ததற்கேற்ப கீழ்ப்படியவில்லை என்றால் அது அவனுக்குப் பலனளிக்காது. அல்லாஹ் கூறுகின்றான் : உங்கள் இறைவன் பால் திரும்பி அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படியுங்கள். (39:54)இன்னும் கூறுகின்றான் :

உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக்கி நீர் தீர்ப்புச் செய்தது பற்றி தம் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் கொள்ளாது அதை முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத பரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள். (4:65)

5. உண்மை : அல்லாஹ்விடம் உண்மையாக நடந்து கொள்ளுதல். இது அவனுடைய நம்பிக்கையில், அடிப்படைக் கொள்கையில் உண்மையாளனாக இருப்பதைக் குறிக்கும். அல்லாஹ் கூறுகிறான் :

உண்மையான உள்ளத்துடன் யாரேனும் லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறினால், அவர் சுவர்க்கம் புகுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

ஒருவன் இக்கலிமாவை நாவினால் சொல்லிக் கொண்டு அதன் அர்த்தத்தை உள்ளத்தால் மறுத்தால் நிச்சயமாக அது அவனுக்கு அவன் நயவஞ்சகர்களின் கூட்டத்தில் சேர்த்து விடுவான். நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த அனைத்தையுமோ அல்லது சிலவற்றையுமோ பொய்ப்படுத்துவது உண்மைக்கு முரணானதாகும். ஏனெனில் அல்லாஹுத்தஆலா நபி (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படியவும் அவர்களை உண்மைப்படுத்தவும் ஏவியுள்ளான். அல்லாஹ்வுக்கும் கீழ்ப்படியுங்கள். (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் என (நபியே) கூறுவீராக. (24:54).

6. வாய்மை : மனிதன் தனது செயல்களை தூய எண்ணத்துடன் கொண்டு - ஷிர்க்கின் சாயல் படிந்த அனைத்தையும் விட்டும் சுத்தப்படுத்துவதாகம். அதாவது சொல், செயல் அனைத்தும் அல்லாஹ்வின் திருமுகத்துக்காக அவனது திருப்தியைத் தேடியும் கலப்பற்ற முறையில் ஏற்பட வேண்டும். அதில் முகஸ்துதி, பிறர் பாராட்ட வேண்டுமென்பது, பயன் கருதுவது, சுயநலன், வெளிப்படையான அல்லது மறைமுகமான மனோ இச்சை, அல்லது அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்றி ஒரு மனிதனின் பிரியத்திற்காகவோ அல்லது ஒரு மத்ஹபுக்காகவோ அல்லது ஒரு கட்சிக்குக் கீழ்ப்படிவதற்காகவோ ஒரு செயலைச் செய்வது போன்ற எந்தக் கலப்படமும் இருக்கக் கூடாது. எனினும் தனது செயல் மூலம் அல்லாஹ்வின் திருமுகத்தையும் மறுமையையும் நாடக் கூடியவனாக இருப்பது அவசியமாகும். மக்களில் எவருடைய பிரதிபலனுக்கோ நன்றி பாராட்டுதலுக்கோ தனது உள்ளத்தில் இடமளித்து விடக் கூடாது. அல்லாஹ் கூறுகிறான் :

அறிந்துகொள்வீராக! தூய்மையான கீழ்ப்படிதல் முற்றிலும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும். (39:3) கீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாக அவனையே வணங்க வேண்டுமென்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள். (98:5)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இத்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியவராக லாஇலாஹ இல்லல்லாஹ் என்று யார் கூறினாரோ அவருக்கு அல்லாஹ் நிச்சயமாக நரகத்தை ஹராமாக்கி வி;ட்டான் (புகாரி, முஸ்லிம்)

7. அன்பு : இம்மகத்தான கலிமாவையும் இதன் தேட்டத்தையும் இது எதை அறிவிக்கிறதோ அதையும் நேசிக்க வேண்டும். அந்த வகையில் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்க வேண்டும். மற்ற எல்லாவற்றிவினுடைய நேத்தையும் விட, அவர்கள் இருவரின் நேசத்துக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். நேசத்துக்குரிய நிபந்தனைகளையும் அதற்கு அவசியமானவற்றையும் கடைபிடிக்க வேண்டும். ஆகவே கண்ணியப்படுத்துதல், மகத்துவப் படுத்துதல், பயப்படுதல், அவனிடமே ஆதரவு வைத்தல் ஆகியவற்றுடன் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். பொதுவாக மக்கா, மதீனா, பள்ளிகள் போன்ற அல்லாஹ்வுக்குப் பிரியமான இடங்களையும் - ரமழான், துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் போன்ற அல்லாஹ்வுக்குப் பிரியமான காலங்களையும் நபிமார்கள், ரசூல்மார்கள், மலக்குகள், சத்தியவான்கள், உயிர்த்தியாகிகள், நல்லடியார்கள் போன்ற அல்லாஹ்வுக்குப் பிரியமான மனிதர்களையும் தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற அல்லாஹ்வுக்குப் பிரியமான செயல்களையும், திக்ர், குர்ஆன் ஓததல் போன்ற செயல்களையம் நேசிக்க வேண்டும். மனவிருப்பங்கள், மனோஇச்சைகளைவிடவும், அல்லாஹ்வின் விருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அல்லாஹ் வெறுத்தவற்றை வெறுப்பதும் இறைநேசமே. ஆதலால் இறைநிராகரிப்பாளர்களையும் இறை நிராகரிப்பு, பாவம், இறைவனுக்கு மாறு செய்தல் ஆகியவற்றையும் வெறுக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

முஹம்மது ரசூலுல்லாஹ்

இதன் பொருள் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் மனித சமுதாயம் முழுமைக்கும் அனுப்பப்பட்ட தூதருமாவார்களென அகமும் (நம்பிக்கையாலும்) புறமுமாக (சொல்லாலும் செயலாலும்) ஏற்றுக் கொள்வதும் இதன் தேட்டத்தின்படி செயல்படுவதுமாகும். அதாவது அவர்கள் ஏவியவற்றில் அவர்களுக்குக் கீழ்படிவது, அவர்கள் அறிவித்தவற்றை உண்மைப்படுத்துவது, அவர்கள் விலக்கியவற்றை விட்டும் விலகிக் கொள்வது, மற்றும் அவர்கள் மார்க்கமாக்கியவற்றைக் கொண்டு மட்டுமே அல்லாஹ்வை வணங்குவதாகும்.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என சாட்சி சொல்வதற்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. அவை அப்துஹு, வரசூலுஹு - அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்பதாகும். இவ்விரண்டும் நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் வரம்பு மீறுவதையும் தரக் குறைவாகக் கருதுவதையும் அகற்றி விடுகிறது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் அவனுடைய திருத்தூதாராகவும் இருக்கிறார்கள். அவர்கள் சிறப்பான இந்த இரு தன்மைகளில் மக்களிலேயே மிகப் பூரணமானவர்களாக இருக்கிறார்கள்.

இந்த இடத்தில் அப்து என்பதன் பொருள் வணக்கும் புரியும் இறைவனின் அடியார் என்பதாகும். அதாவது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் தான். எதிலிருந்து மனிதன் படைக்கப்பட்டுள்ளானோ அதிலிருந்து அவர்களும் படைக்கப்பட்டுள்ளார்கள். ஏனைய மனிதர்களுக்கு உள்ளது தான் அவர்களுக்கும். அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாகக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்.(18:110) புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனேதன் அடியார் மீது இவ்வேதத்தை இறக்கியருளினான். இதில் எவ்விதக் கோணலையும் வைத்திடவில்லை. (18:1)

ரசூல் என்பதன் பொருள் சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லவும் நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்யவும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கவும் மனித சமுதாயம் முழுவதற்கும் தூதராக அனுப்பப்பட்டவர் என்பதாகும். இந்த இரு தன்மைகளைக் கொண்டு சாட்சி சொல்வ நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் வரம்பு மீறுவதையும் தரக்குறைவாகக் கருதுவதையும் நீக்கி விடுகிறது. தம்மை நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயதத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்கின்ற பெரும்பாலோர் அவர்கள் விஷயத்தில் வரம்பு மீறி அவர்களை அடிமை அந்தஸ்திலிருந்து கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்தி விடுகிறார்கள். அல்லாஹ்வை விடுத்து அவர்களைக் கொண்டே பாதுகாப்புத் தேடுகிறார்கள். தேவைகளை நிறைவு செய்தல், கஷ்டங்களை நீக்குதல் போன்ற அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியாதவற்றை அவர்களிடமே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் சிலர் அவர்களின் தூதுத்துவத்தை மறுத்து விடுகிறார்கள். அல்லது அவர்களைப் பின்பற்றுவதில் வரம்பு மீறி அவர்கள் கொண்டு வந்தவற்றிற்கு மாற்றமான கூற்றுக்களையே ஆதாரமாகக் கொள்கிறார்கள்.
நன்றி: tamilislam.com