Saturday, June 5, 2010

மனித சமுதாயமே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதில் என்ன சந்தேகம்-1



அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை, மறுமை நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப் பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். (குர்ஆன் 39:67)

“உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்”  என்றும் கூறினார்.( 20:98)

 

இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான் ( 22:66)
 

நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரயீல்) இதைக் கொண்டு இறங்கினார்.  (26:191,192)

“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)  நூற்கள்: புஹாரி, முஸ்லிம்
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.

சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.

“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

பிற மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல் உள்ளது.

அல்குர்ஆன் போன்ற ஒன்றை யாராலும் உருவாக்க முடியாது என்பதை அது ஒரு சவாலாக முன்வைக்கிறது.

'நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!' (அல்குர்ஆன் 02:23)


உண்மையில் அல் குர்ஆன் அரபு மொழியில் உயர் தரத்தில் அல்லாஹ்வினால் அருளப்பட்டது. அது போன்ற ஒரே ஒரு அத்தியாயத்தைக் கூட எவராலும் இயற்ற முடியாது. இதனை ஒரு சவாலாகவே அல்குர்ஆன் இறக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை மனித குலத்திற்கு விடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அல்லாஹ்வின் சவாலுக்கு முன்னால் மனித மதி இயலாமைக்கு சரணாகதியடைந்துவிட்டது.


அல்குர்ஆன் அருளப்பட்டு 1431 ஆண்டுகளாகியும் இந்த சவாலை முறியடிப்பதில் மனித சக்திகள் தோல்வியடைந்து இறையாற்றலுக்கு முன்னால் அதை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியைத் தழுவி விட்டன என்று துணிந்து கூற முடியும்.


இதேபோல் அல் குர்ஆன் தன்னிகரற்ற மொழி வளமிக்க வேதம் என்பதற்கும் அடுக்கடுக்கான சான்றுகள் அதனுள்ளே நிறைந்துள்ளன. சிந்திக்கும் திறனுள்ளவர்களுக்கு இது ஒன்றே அது இறை வேதம் என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானதாக உள்ளது.


உலகிலுள்ள எல்லா இலக்கியங்களிலும் கவிஞர்களின் ஆக்கங்களிலும் முரண்பாட்டை அதிகளவு காண முடியும். ஆனால் அல் குர்ஆன் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதால் அதனுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்திற்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது.

மற்ற வேதங்களில் காணப்படுவதைப் போன்ற எந்த வித முரண்பாட்டையும் அல்குர்ஆனில் காணமுடியாது என்பதே அது இறைவனிடமிருந்துதான் வந்தது என்பதை மேலும் ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறது.


இது பற்றி இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து சில முற்குறிப்புக்களை இங்கு மேற்கோளிடுகின்றோம்.
'...திருக்குர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும், முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபியால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.

இறைவனால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டு அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.


நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என்று திருக்குர்ஆனே தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.


'அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் 'இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!' என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். 'நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகின்றேன்'என (முஹம்மதே!) கூறுவீராக! (மேலும் பார்க்க திருக்குர்ஆன்: 10:37 38 11:13 11:35 16:101-103 69:44-46)





முரண்பாடின்மை!
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து அதை இறைச் செய்தி என மக்களிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைக்கக் கூடும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக உருவாக்கி இதைக் கூறியிருக்க முடியாது என்பதற்கு ஏற்கத்தக்க நியாயமான பல காரணங்கள் உள்ளன.


பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒருநாள் இரண்டு நாட்கள் வேண்டுமானால் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக் கணக்கில் பேசிட இயலாது.


எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரது ஐந்து வருடப் பேச்சுக்களை ஆய்வு செய்தால் ஏராளமான விஷயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும்.


• முன்னர் பேசியதை மறந்து விடுதல்!
• முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்!
• கவலை துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக போதுமான கவனமின்றிப் பேசுதல்!
• யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்!
• வயது ஏற ஏற மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்!
• விளைவுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்!


மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதனுக்கு இருப்பதால; முரண்பாடுகள் இல்லாமல் பேசும் ஒரே ஒருவரைக் கூட காண முடியாது.


ஆனால் திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதித்தார்கள். இது அவர்களின் சொந்தக் கற்பனையாக இருந்திருந்தால் 23 வருடப் பேச்சுக்களில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனில் முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை.


மேலே சுட்டிக் காட்டிய பலவீனங்கள் எதுவுமே இல்லாத ஏக இறைவனின் வார்த்தையாக திருக் குர்ஆன் இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க முடியும்.


இறைவனிடமிருந்து வந்ததால் தான் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக் குர்ஆன் அறைகூவல் விடுக்கிறது.


'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.' (திருக்குர்ஆன் 4:82)


மிக உயர்ந்த தரம்!
திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் செய்திகள் என்று அறிமுகம் செய்தார்கள். இறைவனின் செய்திகள் என்றால் அது மனிதர்களின் செய்திகளைப் போல் அல்லாமல் அனைத்து வகையிலும் அனைத்தையும் மிஞ்சும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.


திருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால; அரபு மொழி அறிந்த முஸ்லிம் அல்லாதவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால் கூட மனிதனால் எட்ட முடியாத உயர்ந்த தரத்தில் அது அமைந்திருப்பதை அறிந்து கொள்வார். அரபு மொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளாக மதிக்கப்பட்டு வருகிறது.


மாபெரும் இலக்கியங்களில் பொய்களும் மிகையான வர்ணனைகளும் அவசியம் இடம் பெற்றிருக்கும்.


ஆனால் திருக்குர்ஆனில்:
• பொய் இல்லை!
• முரண்பாடு இல்லை!
• ஆபாசம் இல்லை!
• மிகையான வர்ணனைகள் இல்லை!
• கற்பனைக் கலவை இல்லை!
• நழுவுதலும் மழுப்புதலும் இல்லை!
• மன்னர்களையும் வள்ளல்களையும் மிகைப்படுத்திப் புகழுதல் இல்லை!


இலக்கியத்திற்குச் சுவையூட்டும் இந்த அம்சங்கள் அனைத்தையும் அடியோடு நிராகரித்துவிட்டு உண்மைகளை மட்டுமே மிக உயர்ந்த இலக்கியத் தரத்துடன் திருக்குர்ஆன் பேசியிருப்பது அன்றைய இலக்கிய மேதைகளையும் பிரமிப்புடன் பார்க்க வைத்தது. இன்று வரை அந்த பிரமிப்பு நீடிக்கிறது.


இவ்வளவு உயர்ந்த இலக்கியத் தரத்தில் முஹம்மது நபி ஒரு நூலை இயற்ற வேண்டும் என்றால் அவர் மாபெரும் பண்டிதராகவும் அரபு மொழியில் கரை கண்டவராகவும் அவருக்கு முந்தைய இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவராகவும் இருந்திருக்க வேண்டும்.


ஆனால் முஹம்மது நபிக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பது ஆச்சரியமான உண்மை.
அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (29:48)

அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான், அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். ( 62:2)


மேலும் அரபு மொழிப் பண்டிதராக இல்லாத முந்தைய இலக்கியங்களை வாசிக்கவும் தெரியாத முஹம்மது நபி சொந்தமாகக் கற்பனை செய்தால; அது எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் இல்லை. அரபு மொழிப் பண்டிதர் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லை. மாறாக அதை விட பல நூறு மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது. எனவே இது இறைச் செய்தியாகத் தான் இருக்க முடியும்.



படிக்காத பாமரமக்களுக்கும் புரியும் ஒரே இலக்கியம்:
பொதுவாக ஒரு நூல் எந்த அளவுக்கு உயர்ந்த இலக்கியத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படும்.


மிக உயர்ந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அந்த மொழியின் பண்டிதர்கள் மட்டும் தான் அதைப் புரிந்து கொள்ள முடியுமே தவிர அம்மொழி பேசும் சாதாரண மக்களுக்கு அவை புரியாது.


சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு நூல் இருந்தால் நிச்சயமாக உயர்ந்த இலக்கியத்திற்குரிய அம்சங்கள் அந்த நூலில் இருக்காது.


ஆனால் திருக்குர்ஆன் அரபு மொழியைப் பேச மட்டுமே தெரிந்த மக்களுக்கும் புரிந்தது. பண்டிதர்களையும் கவர்ந்தது. அரபு மொழியில் உள்ள எண்ணற்ற இலக்கிய நூல்களை இன்றைய அரபுகளில் பலரால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அரபு மொழி பேசும் ஒவ்வொருவரும் குர்ஆனைப் புரிந்து கொள்கின்றனர்.


இன்றைக்கும் கூட எந்த மனிதனாலும் இத்தகைய அம்சத்தில் ஒரு நூலை இயற்றவே முடியாது. எந்த மனிதருக்கும் இயற்ற இயலாத ஒரு நூலை மக்களிடம் முன் வைத்துத் தான் 'இது இறை வேதம' என்று முஹம்மது நபி வாதிட்டார்கள்.


குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனை அல்ல என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.



இசை நயம்!


எந்த இலக்கியமானாலும் அதில் ஓசை அழகும் இசை நயமும் கிடைக்க வேண்டுமானால் அதனுடைய சீர்களும் அடிகளும் ஒழுங்கு முறைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் தான் அவற்றில் இசை நயத்தை நாம் உணர்கின்றோம்.


ஆனால் திருக்குர்ஆனில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட அடிகள் இல்லை. மாறாக உரைநடை போலவே அதன் வசனங்கள் அமைந்துள்ளன.


அவ்வசனங்களிலும் குறிப்பிட்ட அளவிலான சொற்கள் இடம் பெறவில்லை. மாறாக சில வசனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும் சில வசனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும் சில வசனங்களில் பத்து வார்த்தைகளும் சில வசனங்களில் ஐந்து வார்த்தைகளும் இருக்கும். ஒரு வார்த்தையே வசனமாகவும் இருக்கும்.


இப்படி அமைந்துள்ள எந்த நூலிலும் இசை நயம் அறவே இருக்காது. ஆனால் எதில் இசை நயத்தை மனிதனால் கொண்டு வர இயலாதோ அந்த நடையில் மனித உள்ளங்களை ஈர்க்கும் இசை நயம் குர்ஆனுக்கு மட்டுமே இருக்கிறது.


அரபு மொழி தெரியாத மக்களும் கூட அதன் இசை நயத்துக்கு மயங்குகின்றனர்.


இசை நயத்துக்கு எதிரான ஒரு முறையைத் தேர்வு செய்து அதற்குள் இசை நயத்தை அமைத்திருப்பது இது முஹம்மது நபியால் கற்பனை செய்யப்பட்டது அல்ல என்பதற்கு மற்றொரு சான்று...' (மேலதிக விளக்கத்திற்கு பார்க்க: திருக்குர்ஆன் தமிழாக்கம்-2009 பீ.ஜைனுல் ஆபிதீன் பதிப்பு -08)





அல்குர்ஆனின் மொழி:


அல்குர்அன் அல்லாஹ்வினால் அரபு மொழியில் அருளப்பட்ட இறுதி வேதமாகும். இதனை யாரும் சந்தேகிக்க முடியாது. சந்தேகிப்பவன் முஸ்லிமாக இருக்கவே முடியாது.


'நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சியமாக நாமே இறக்கிவைத்தோம்' என அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 12:02)
(மேலும் பார்க்க 2:176 3:3, 4:40, 6:8, 59:21, 6:92-100, 12:2)


தெளிவான அரபு மொழியில் அருளப்பட்ட அல்குர்ஆன் மிக அழகிய உயிரோட்டமுள்ள உணர்ச்சி கலந்த நடையில் மனித வாழ்க்கைக்குத் தேவையான இறைவன் வகுத்தளித்துள்ள அனைத்து விடயங்களையும் சிறப்பாக விளக்குகிறது.


அறிவியல், நவீன கண்டுபிடிப்புக்களைக் கூட அதற்கே உரிய கருத்தாழமும் கவித்துவமும் மிக்க எளிய இனிய, அழகிய நடையில் விளக்குவது அனைவரையும் அதன்பால் விரைவாக ஈர்த்துவிடுகிறது.


அல்குர்ஆனின் அரபு மொழி நடையும் ஒத்திசையும் ஓசைப்பாங்கும் தனித்துவமான மொழிப் பண்புக் கூறுகளையுடையது.அதன் உரை நடைப் பாங்கை யாராலும் பின்பற்ற இயலாத தன்மையைக் கொண்டமைந்துள்ளது ஆச்சரியமும் அதிசயமும் மிக்க உண்மையாகும் என இலக்கிய உலகு வியக்கிறது.


அல்குர்ஆன், அதை செவிதாழ்த்திக் கேட்போரின் உள்ளத்தை ஊடுறுவி,
உணர்ச்சிகளைத் தூண்டி,
கண்களைக் கசிய வைத்து,
மனித ஆன்மாக்களை ஆட்கொண்டுவிடுகிறது.
அதன் ஆகர்ஷண சக்தி வேறு எந்த நூலுக்கும் இல்லை.


அல்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முஹம்மது மெர்மெடியூக் பிக்தால் தனது முன்னுரையில் அல்குர்ஆனின் இலக்கிய சுவையை உய்த்துணர்ந்து இவ்வாறு வர்ணிக்கின்றார்.


'அல்குர்ஆன்,  எந்த மனிதனாலும் பின்பற்ற முடியாத ஓசை நயம் கலந்த உரை நடையையும் மனித உள்ளங்களில் உணர்ச்சிகளைத் தூண்டி, கண்களில் கண்ணீர் மல்கச் செய்யும் சொல்லாட்சியையும் கொண்டுள்ளது.


அதன் மூலத்தின் சுவையையும் ஆழ்ந்த கருத்துக்களையும் அவற்றின் உயிரோட்டத்தையும் இழக்காது பிற மொழிகளில் பெயர்த்தல் அசாத்தியமானது. எனவேதான் ஆங்கில மொழிபெயர்ப்பு எனப் பெயரிடத் தயங்கி, மகத்தான திருக்குர்ஆனின் கருத்துக்கள் - வுhந ஆநயniபெ ழக வாந புடழசரைள ஞரசயn - எனக் குறிப்பிட்டுள்ளேன்.'


பொதுவாக, ஒரு நூல் எந்தளவிற்கு இலக்கியத் தரத்தில் உயர்ந்துள்ளதோ, அந்த அளவிற்கு சாதாரண மக்களை விட்டும் அந்நியப்பட்டு, அவர்களால் புரிந்து கொள்ள முடியாமலிருக்கும்.


தமிழில் அற நூலாக (?) மதிக்கப்படும் திருக்குறளின் ஓர் அடியை, அல்லது கம்பராமாயணத்தின் ஒரு சுலோகத்தை கிராமப்புறத்திலுள்ளவரோ, நகர்புறத்திலுள்ள இலக்கியம் அறியாதவரோ புரிந்து கொள்ள முடியாது.


பாமரர்களுக்குப் புரிய வேண்டுமென்றால் இலக்கண, இலக்கிய விதிகளைத் தளர்த்தியாக வேண்டும். அவை, இரண்டுக்கும் முக்கியத்துவமளித்தால், மக்களுக்குப் புரியாது போய் விடும்.


ஆனால், அல்குர்ஆன் அரபி மொழியில் மிக உயர்ந்த, மிகத் தரமான இலக்கியத்தில் அமைந்துள்ளது. அதனால்தான், 14 நூற்றாண்டுகளாகியும் அல்குர்ஆன் விடுத்த சவாலை முறியடிப்பதில், அதை எதிர் கொள்வதில் இலக்கியவாதிகள் தங்களது இயலாமைக்கு சரணடைந்து நிற்கின்றனர்.


அதே வேளையில், பாமர மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அதன் மொழி நடை அமைந்துள்ளமை ஆச்சரியமான, அதிசயமான உண்மையாகும்.


'இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?'(54:17) என அல்குர்ஆன் விளங்க வருமாறு முழு மனித குலத்திற்கும் அழைப்புவிடுக்கிறது.


மேலும் திருக்குர்ஆனில் எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன.


இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்
Albert Anstain கூறுகிறார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.Maurice Bucaille கூறுகிறார்::
'அந்த நூற்றாண்டில் வாழ்;ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத - இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புக்களின் யதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படி துல்லியமாகத் தெரிவிக்க முடிந்தது?' -
The Bible, The Quran and Science 1978,p.125

Sir. William Muir  கூறுகிறார்:
'குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனையாகும். அதன் ஆதிக்கம் சமயம், ஒழுக்கம், விஞ்ஞானம் போன்ற அனைத்துத் துறைகளிலும் படர்ந்து நிற்கிறது. குர்ஆன் அனைத்திற்கும் மேலானது என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.' -
The life of Mohammed, London 1903, ch. The Coran p.vii.
இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவது மில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190) வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.

குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர்ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.


திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள்.
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே  உண்டாக்கினான்; அதனிடம் ‘குன்‘ – ஆகுக – என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன்2:117)

...1. பிரபஞ்சத்தின் தோற்றம் -
20ம் நூற்றாண்டு வரை பிரபஞ்சம் அதன் நிறை மற்றும் அளவில் எல்லயற்றது என்றும் அதற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை எனற கருத்து நிலவியது. ஆகவே இக் கோட்பாட்டை 'நிரந்தர பிரபஞ்ச திட்டம்'
(Static Universe Model) என்று அழைத்தனர்.

நாத்திக தத்துவங்களுக்கு அடித்தளமிட்ட இக்கோட்பாடு இறைவனை மறுத்ததோடு பிரபஞ்சம் நிலையான மாற்றமடையாத பொருட்களின் குவியல்களால் ஆனது என்று வாதிட்டது. அதாவது பிரபஞ்சத்திற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை என்று வாதிட்டது. இருப்பினும் 20ம் நூற்றாண்டில் விஞ்ஞானமும் தொழிநுட்பமும் அடைந்த மாபெரும் வளர்ச்சியின் காரணமாக நிரந்தர பிரபஞ்ச திட்டம் என்ற நாத்திக கோட்பாடு குப்பையில் தூக்கியெறியப்பட்டது.

நாம் புதிய சிந்தனையுடன் 21ம் நூற்றாண்டில் காலடி வைத்துள்ளோம். பிரபஞ்சத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்தது என்றும் அது ஒரு பெரும் வெடிப்பின் மூலம் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து உருவானது என்றும் பல்வேறு வகையான ஆய்வுகளையும், அவதானிப்புகளையும் மேற்கொண்ட உலக புகழ்பெற்ற சிந்தனையாளர்களுடன் சேர்ந்து நவீன பௌதீகவியலும் கூறுகிறது. மேலும் இப்பிரபஞ்சம் நிலையானது என்று நாத்திகர்கள் பிடிவாதமாக போராடிய போதிலும் அவர்களின் கருத்துகள் விஞ்ஞானத்திற்கு எதிரானைவை எனறு திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

அதற்கு மாற்றமாக பிரபஞ்சம் தொடர்ந்து அசைந்து மாற்றமடைந்து விரிவடைந்து செல்கிறது என்ற கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது சமீபத்தில் நிரூபிக்கப்பட்ட இத்தகைய உண்மைகள் நிரந்தர பிரபஞ்ச திட்டம் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியில் அறையபட்ட ஆணிகளாக கருதப்படுகின்றன. இன்று இவ் அனைத்து உண்மைகளையும் விஞ்ஞான உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அல்குர்ஆன் பின்வரும் வசனத்தின் மூலம் விளக்குகிறது

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். 
அல்குர்ஆன் (6:101)

இக்கூற்று இன்றைய நவீன விஞ்ஞானத்தோடு முற்றிலும் உடன்படுகிறது.. இன்று கிடைக்கப்பெற்றுள்ள Astrophysics எனும் விண் இயற்பியலின் முடிவுகளின் படி பிரபஞ்சமானது முன்னர்; பதார்;த்தத்தினதும் (matter), காலத்தினதும் (time), பரிமாணம் இணைந்ததாகவே காணப்பட்டது. பின்னர் எப்போதோ ஏற்பட்ட ஒரு பெரும் வெடிப்பின் மூலம் முழுப்பிரபஞ்சமும் தோற்றம் பெற்றது. இந்நிகழ்வானது 'பெருவெடிப்பு' (The Big Bang) என்று அழைக்கப்படுகிறது.

இக்கோட்பாடு பிரபஞ்சமானது ஒன்றுமில்லாத ஒரு நிலையிலிருந்து தோன்றியதை சுட்டிக்காட்டுகிறது. பிரபஞ்சத்தின் தோற்றப்பாடு குறித்து விளக்குகின்ற ஒரே கோட்பாடாக 'பெருவெடிப்புக் கோட்பாட்டை' தான் இன்றைய நவீன விஞ்ஞானம் குறிப்பிடுகின்றது. சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புள்ளியிலிருந்து பிரபஞ்சம் உருவானது என்பதை அனைத்து விஞ்ஞான பிரிவுகளும் ஏற்று கொண்டுள்ளன.

பெருவெடிப்புக்கு முன்னர்; 'பதார்த்தம்' (matter) என்ற ஒரு பொருள் காணப்படவில்லை. இல்லாமை (nothingness) என்ற இந் நிலையில் பதார்த்தமோ (matter), சக்தியோ (energy), குறைந்தது காலமோ (time) காணப்படவில்லை. அதீத பௌதீகவியலின் (metaphysics) விளக்கத்ததின்படி, பதார்த்தம், சக்தி, காலம் யாவும் அப்போது இருக்கவில்லை. இந்த உண்மையானது நவீன பௌதீகவியலினால் சில வருடங்களுக்கு முன்னர் தான் கண்டுபிடிக்க முடிந்த போதிலும் அல்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்னரே இதனைக் குறிப்பிட்டது.


The sensitive sensors on board the COBE space satellite which was launched by NASA in 1992, captured evidentiary remnants of the Big Bang. This discovery served as evidence for the Big Bang, which is the scientific explanation of the fact that the universe was created from nothing.


ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)


...2. சூடான புகையிலிருந்து நட்சத்திரங்களும், கோள்களும் உருவாகின.

கோள்களைப் பற்றிய இன்றைய நவீன அறிவியலும் மற்றும் அதன் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும், கோட்பாடுகளும் இந்த வான மண்டலங்கள் தோன்றுவதற்கு முன் இருந்த ஒரு நேரத்தில் இவை யாவும் ஒரே தொகுதியாக மேகம் போன்ற புகை மண்டலமாக, அதிக அடர்த்தியான சூடான வாயுக்களைக் கொண்டவையாகக் இருந்து கொண்டிருந்தது.   (The First Thre Minutes, a Modern View of the Originof the Universe, Weinberg, pp.  94-105). மேற்கண்ட இந்தக் கோட்பாடு இன்றைய வானவியலில் மாற்ற முடியாததொரு கோட்பாடாக இருந்து வருகின்றது.  முன்பு எஞ்சியுள்ள புகை மண்டலங்களிலிருந்து இன்று நட்சத்தரங்கள் உருவாகி வருவதாக கண்டுபிடித்துள்ளனர். (படம். 10,11).

இன்று நாம் இரவில் வானத்தில் காணும் நட்சத்தரக் கூட்டம் யாவும் ஒரு காலத்தில் புகை மண்டலமாக இருந்தவைகள் தான்!!!




ch1-1-c-img1.jpg (12269 bytes)Figure 10: A new star forming out of a cloud of gas and dust (nebula), which is one of the remnants of the ‘smoke’ that was the origin of the whole universe. (The Space Atlas, Heather and Henbest, p. 50.)


Figure 11 
(Large)Figure 11: The Lagoon nebula is a cloud of gas and dust, about 60 light years in diameter.  It is excited by the ultraviolet radiation of the hot stars that have recently formed within its bulk. (Horizons, Exploring the Universe, Seeds, plate 9, from Association of Universities for Research in Astronomy, Inc.)  (Click on the image to enlarge it.)
இதைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும் போது:

பின்னர் அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான். (அல்-குர்ஆன்: 41-11).

ஏனென்றால் பூமிக்கு மேலே நாம் பார்க்கக் கூடிய சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள், சூரியக் குடும்பங்கள் ஆகியவற்றை நோக்கும் பொழுது அவை அனைத்தும் ஒரே புகை மண்டலத்திலிருந்து பிரிந்தவை தான் என்ற முடிவுக்கும், இவை யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகள் என்ற முடிவுக்கும் தான் நம்மால் வர இயலும். மேலும் இவை யாவும் புகை மண்டலத்திலிருந்து ஒன்றுடன் ஒன்று தனித்துப் பிரிந்து தனித் தனி கோள்களாகப் பரிணமித்தன என்பதை இன்றைய அறிவியல் ஆய்வுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.  இதையே திருமறைக் குர்ஆனில் இறைவன்.

(ஆரம்பத்தில்) நிச்சயமாக வானங்களும்,பூமியும் (இடைவெளியின்றி) இணைந்திருந்தன: பின்னர், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் இந்நிராகரிப்போர் பார்க்கவில்லையா? (அல் குர்ஆன் 21:30).

டாக்டர். அல்பிரட் க்ரோனர் (Dr. Alfred Kroner) என்பவர் உலகப் புகழ் பெற்ற மண்ணியல் ஆய்வாளர்.  இவர் ஜெர்மனியில் உள்ள மெயின்ஸ் நகரில் உள்ள ஜொஹென்னஸ் க்யூடென்பர்க் (Johannes Gutenberg University) பல்கலைக்கழகத்தில் மண்ணியல் துறைப் பேராசிரியராகவும், மண்ணியல் அறிவியல் துறையின் மண்ணியல் துறைச் சேர்மனாகவும் பணியாற்றி வருகின்றார். இவர் திருமறையில் கூறப்பட்டிருக்கும் வாயவியல் சம்பந்தமான வசனங்களை ஆய்வு செய்த பின், வானவியல் பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது ...  மிகவும் சிக்கலான, மிகவும் நுடபமான தொழில் நுட்பக் கருவிகளைக் கொண்டு, மிக சமீபத்திய ஆண்டுகளில் தான் கண்டுபிடிக்கப்பட்ட பேரண்டத்தின் தோற்றம் பற்றிய உண்மைகளைப் பற்றி அவர்; வாழ்ந்த காலத்தில் அறிந்திருக்க முடியும் என்பது இயலாத காரியம் என நினைக்கின்றேன் எனக் கூறினார்.    (The refernce for thid saying is This is the Truth (video tape). For a copy of this vidio tape, please contact one of the organisations listed on the last page.)

அணு இயற்பியல்  (Nuclear Physics) பற்றி மிகச் சிலர் கூட அறிந்திருக்க இயலாத காலத்தில் வாழ்ந்த முஹம்மது அவர்கள் வானவியல் பற்றி தெரிந்திருப்பார் எனக் கூற முடியாது.  ஒரு உதாரணத்திற்கு அவருடைய நிலையிலிருந்து அவர் கூறியதை ஆராய முற்படுவோமானால், அவர் கூறியது போல வான மண்டலங்களும் பூமியும் ஒரே பொருளிலிருந்து தோன்றியவையே!!!
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)


0 comments: