Saturday, May 14, 2011

அத்தியாயம் கியாமா(மறுமை நாள்)


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiql1kXPPsbn_Pj5ngIMXD4r5WuP13T_EZg8oExM_zPyGn0z9HOR_L1LsuYyef0RBQH95iQmTpN4a0g4Hckv0-4LmCHlx3kSKxVGAh2oRUUisBx3jfA7BMfAAO8WiU_-pEATt6cEUCrk2U/s1600/Bismillah_2.JPG
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

அத்தியாயம் கியாமா (மறுமை நாள்)




بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ

கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். (75:1)

وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ

நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். (75:2)

أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَجْمَعَ عِظَامَهُ

(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? (75:3)

بَلَى قَادِرِينَ عَلَى أَن نُّسَوِّيَ بَنَانَهُ

அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (75:4)

بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ

எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான். (75:5)

يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ

"கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான். (75:6)

فَإِذَا بَرِقَ الْبَصَرُ

ஆகவே, பார்வையும் மழுங்கி- (75:7)

وَخَسَفَ الْقَمَرُ

சந்திரன் ஒளியும் மங்கி- (75:8)

وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ

சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் . (75:9)

يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ

அந்நாளில் "(தப்பித்துக் கெள;ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான். (75:10)

كَلَّا لَا وَزَرَ

"இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்). (75:11)

إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ

அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. (75:12)

يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். (75:13)

بَلِ الْإِنسَانُ عَلَى نَفْسِهِ بَصِيرَةٌ

எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான். (75:14)

وَلَوْ أَلْقَى مَعَاذِيرَهُ

அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்! (75:15)

لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ

(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள். (75:16)

إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ

நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. (75:17)

فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ

எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். (75:18)

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ

பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. (75:19)

كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ

எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். (75:20)

وَتَذَرُونَ الْآخِرَةَ

ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள். (75:21)

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். (75:22)

إِلَى رَبِّهَا نَاظِرَةٌ

தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும். (75:23)

وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ

ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். (75:24)

تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ

இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும். (75:25)

كَلَّا إِذَا بَلَغَتْ التَّرَاقِيَ

அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால், (75:26)

وَقِيلَ مَنْ رَاقٍ

"மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது. (75:27)

وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ

ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். (75:28)

وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ

இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். (75:29)

إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ

உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. (75:30)

فَلَا صَدَّقَ وَلَا صَلَّى

ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை. (75:31)

وَلَكِن كَذَّبَ وَتَوَلَّى

ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான். (75:32)

ثُمَّ ذَهَبَ إِلَى أَهْلِهِ يَتَمَطَّى

பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான். (75:33)

أَوْلَى لَكَ فَأَوْلَى

கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்! (75:34)

ثُمَّ أَوْلَى لَكَ فَأَوْلَى

பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான். (75:35)

أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى

வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா? (75:36)

أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَى

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (75:37)

ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى

பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். (75:38)

فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَى

பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான். (75:39)

أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَن يُحْيِيَ الْمَوْتَى

(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா? (75:40)


2 comments:

உங்களது முயற்சிக்கு ஒரு சபாஷ்!
சிறந்த தன்னலம் இல்லாத முயற்சி.ahlulbaith.blogspot.com மின் வாழ்த்துக்கள்.
ஒலியமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மற்றபடி எதுவிதக் குறைவும் இல்லை.
அல்லாஹ் உங்களுக்கு உதவியாக எப்பொழுதும் இருப்பனாக!. .

சகோ.. அஹ்லுல்பைத் said...

உங்கள் மீதும் இறைவனின் அமைதி நிலவுவதாக...ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் கவனம் செலுத்துகின்றேன்.

வருகைக்கும் ஊக்கத்திற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி சகோதரர்...