அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
அரை நூற்றாண்டிற்கு பிறகு மீட்டெடுத்த ஓர் அழகிய மஸ்ஜித்.....

கடந்த 1910 களில் முஸ்லிம் வியாபார குடிமக்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்த பூமி அது. முஸ்லீம்களுக்கென்ற பாரம்பரியத்திற்கு உட்பட்ட 19 கிணறுகள் உள் வரை அளவுக்குட்பட்ட பல ஏக்கர்கள் உரிமையானவர்களாக வாழ்கை நகர்ந்து கொண்டிருக்கவே.....
விணை கொல்லும் சோதனை காலரா என்ற வடிவில் வந்து சேர்ந்தது. சோதனையால் துவண்ட மக்கள் ஊரை விட்டு வெளியேறி ஆழ்வார்திருநகரி அருகில் அமைந்த்ருக்கும் சவரமங்கலத்தில் குடியேறி தொழில் துறைகளில் முனைப்போடு வாழ்கை நடத்தி வந்த மக்களை கடந்த 1945 களில் வந்த வெள்ளப்பெருக்கின் அனர்த்தங்களால் ஊரையே உலுக்கி மூளையில் வீசியது. மக்கள் சவரமங்கலத்தயும் காலி செய்யவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகினர். வசிக்க திக்கு திசையின்றி காயலர்களிடம் அடைக்கலம் கேட்க முனைந்த அம்மக்களுக்கு வாய்ப்பில்லை என்ற தகவல் கிடைத்ததுமே கேம்லபாத், ஆழ்வார் திருநகரி, பேத்மாநகர் மற்றும் காயல்பட்டினத்தில் சில தெருக்களிலும் தஞ்சம் புகுந்தனர்.


வாழையடி மஸ்ஜித் - புதைக்கப்பட்ட உண்மைகள்
வாழையடி முஸ்லிம் ஜமாத்தின் 19 கிணறுகளை சுற்றிய மொத்த நிலபரப்பு மூன்று ஏக்கர்கள். தொற்று நோய் பரவல் மற்றும் இயற்கை சீற்றங்களால் சிதறிய வாழையடி ஜமாத்தினரின் உரிமை சொத்துக்கள் சில தீய சக்திகளிடம் சிக்கியது. 29 /8 என்ற ஆதார பட்டயத்தை அநீதியாக ஆக்கிரமித்து பிளாட்டு போட்டு விற்று தீர்த்தனர். காலம் நகர நகர வரலாற்றுக்கு சொந்தமான மண்ணின் மைந்தர்களின் அடையாள குறியீடுகள் அழிக்கப்பட்டாலும் மஸ்ஜிதின் பழைய வரலாற்று சுவர்களும் கப்ருகளும் நெஞ்சின் நீங்கா சுவடுகளாக இன்றும் நிழலாடிக்கொண்டிருக்கிறது.


கடந்த 2001 களில் காயல்பட்டினம் மற்றும் சுற்று கிராமங்களான சேதுக்கு வாய்க்கால் போன்ற ஊர்களிலிருந்து மொத்தம் 14 கடைகளும் 5 குடும்பங்களும் மொத்தம் 50 நபர்கள் தற்போது வசித்தும் கடை நடத்தி விட்டு தங்கள் குக்க்கிராமதிற்கும் அன்றாடம் சென்று வருவது வழக்கம். இந்த சொற்ப நபர்களின் விவேகத்தினால் 2001 ல் துவங்கிய முயற்சி 2011 ல் வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள் என்ற கம்பீர பாங்கொலியை முழங்க தொடங்கி விட்டனர்.
தற்போது மீட்டு எடுத்த 14 சென்ட் வேலி மட்டும் வாழையடி ஜமாஅத் வசம் அல்லாஹ்வின் கிருபையால் வந்து சேர்ந்தது. இந்த வீரிய இளைஞர்கள்
ஆத்மார்த்த கடும் உழைப்பினால் அல்லாஹ்வின் ஆலயத்தை செவ்வனே சீரமைத்து துதி செய்யும் ஒவ்வொரு உள்ளமும் இறைவனை நன்றி செலுத்தும் வகையில் ஆழ்ந்தது இன்று இந்த மஸ்ஜித் திறப்பு விழாவின் போது.
மஸ்ஜிதின் பத்திரங்கள் எப்படியும் கிடைத்துவிடும். இன்ஷா அல்லாஹ் கிடைத்து விட்டால் மின்சார துறையினரிடமிருந்து எளிதில் மின்சாரம் கிடைத்து விடும் என்று தங்கள் தவக்கல் பயணத்தை துவங்கி விட்டனர் வாழையடி மஸ்ஜித்துர்ரஹ்மான் ஜமாத்தினர்கள்.
நன்றி.
காயல் நியூஸ்.காம்
தகவல் :
எம்.எம்.முஜாஹித் அலி.
0 comments:
Post a Comment